காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

உள்ளூரில் வேலை பார்ப்பது கொலைக் குற்றமா???

July 23, 2009

நான் வாக்கிங் போகும்போது, தம்பதி சகிதமாக இருவர் வாக்கிங் வருவார்கள்... தினமும் பார்கிறோமே என்று குட் மார்னிங் சொல்ல ஆரம்பித்தேன்... வந்தது வில்லங்கம்... ரெண்டு நாள் கழித்து, எனக்கும் அவருக்குமான உரையாடல்...

அவர்: ஏம்மா, படிக்கிறியா..?
நான்: இல்ல சார்.. வேலை பாக்கறேன்..
அவர்: என்ன படிச்சிருக்க?
நான்: பி.இ...
அவர்: பி.இ ல?
நான்: ECE சார்..
அவர்: இங்க என்ன வேலை பாக்கற..?
நான்: Patent related வேலை...
அவர்: ஏன் இங்கயே இருக்க, சென்னை, Bangaloreன்னு போகலயா..?
நான்: இங்கயே வேலை இருக்கப்ப நான் ஏன் சார் போகணும்...?
அவர்: என் பையன், MCA படிச்சிட்டே சென்னைல, MNCல வேலை பாக்கறானேம்மா... நீ பி.இ.ECE படிச்சிட்டு ஏன் இங்கயே இருக்க..?
நான்: ?????
அவர்: இன்ட்ர்னெட்ல அப்ளை பண்ணிட்டே இரும்மா... கண்டிப்பா கிடைக்கும்...
நான்: ?????

உள்ளூரில் வேலை பார்த்தால், அது வேலை பார்க்கும் கணக்கில் சேர்த்தி இல்லை போலிருக்கிறது... உள்ளூரில் ஒருகம்பெனி இருந்து, அதில் எனக்கு வேலையும் இருக்கையில் சென்னை, Bangalore என்று எதற்காக போக வேண்டும் என்ற என் நியாயம் எடுபடவே இல்லை...!!!!

இதே நான் அவரிடம் 'சார், உங்க பையன் கிட்ட சொல்லி சென்னைல ஒரு reference வாங்கி தாங்க என்று சொல்லியிருந்தால்...' எங்கம்மா... அவனுக்கே ஒரு வருஷமா இன்கிரிமென்ட் இல்லை, recession வேற, ப்ராஜெக்ட் இல்லை என்றும், இன்ன பிற இத்தியாதிகளை கூறியும், தெரித்து ஓடியிருப்பார்....

ஆனால், என் ஆதங்கம் எல்லாம், என்னவோ என்னை கேள்வி கேக்கணும்னே, காலையில் எழுந்து வந்தது மாதிரி, இத்தனை கேள்வி கேட்ட அவர் கடைசிவரை என் பெயரை கேட்கவேயில்லை என்பதே....

Read more...

திருப்பதி - ஒரு Spiritual vacation

July 9, 2009

போன வாரம் திருப்பதி போயிருந்தேன்... அதை பத்தி எழுதணும்னா ஒரு பிளாக் ஃபுல்லா வேணும்... அதனால நான் ரசிச்ச சிலது மட்டும் இங்கே...

  • மலை ஏற்றப்போ (படி வழியா) மக்களின் நம்பிக்கைகளை, செய்கைகளை கண்டிப்பா சொல்லணும்.. ஒரு 5000 படி இருக்கும்.. எல்லா படிக்கும் மஞ்சளும், குங்குமமும் வெச்சுக்கிட்டே போவாங்க(எல்லாரும் இல்ல, வேண்டிக்கறவங்க மட்டும்)... படியில்லாத இடத்துல அங்க இருக்கற போஸ்ட் கம்பத்துக்கு கூட மஞ்சளும், குங்குமமும் வெச்சுக்கிட்டு போயிருப்பாங்க... அதே மாதிரி சிலர் எல்லா படிலயும் விளக்கு ஏத்திட்டு போவாங்க.. ஒருத்தர் படில சூடம் வெச்சுக்கிட்டு போக, இன்னொருத்தர் candleல அதை ஏத்திக்கிட்டே போவாங்க... மலை ஏறதே கஷ்டம், இதுல முட்டி போட்டு சிலர் ஏறுவாங்க...
  • மலை ஏற்றப்போ எனக்கு புடிச்ச இன்னோரு விசயம் தரிசன டிக்கெட் வாங்கற லய்னுக்கு பக்கத்துல இருக்கற கடைங்க... ஒரு 30 - 40 கடைங்க வரிசையா இருக்கும்.. எல்லா கடையும் ஒரே மாதிரி இருக்கும்.. ரெண்டே ரெண்டு கேஸ் அடுப்பு வெச்சுக்கிட்டு, அதுலயே மிளகாய் பஜ்ஜி, டீ, தோசை, இட்லி ன்னு பரபரப்பா வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருப்பாங்க...ஒட்டுமொத்த குடும்பமும் அந்த கடைல வேலை பாக்கும்.. இந்த கடைங்களை வேடிக்கை பாத்ததுல நேரம் போனதே தெரியல எனக்கு...
  • மேல் திருப்பதில (திருமலை) தேவஸ்தானம் சார்பா அன்னதானம் போடுவாங்க... பெரிய பெரிய ட்ராலில கொண்டு வந்து சுடச்சுட சாப்பாடு போடுவாங்க.. குழம்பு, ரசம் எல்லாமே ட்ராலில தான்...வெளி கடைல ஆர்டர் செஞ்சு வெய்ட் பண்ற நேரத்துல இங்க சுடச்சுட சாப்பாடு போட்டு ..இலைய இழுத்து நம்ம வெளிலயும் தள்ளிடுவாங்க...ருசியா இருக்குமோ இல்லியோ, பசிக்கு அப்படியே கப கபன்னு சாப்பாடு உள்ள போகும் பாருங்க... ஆஹா... அந்த சுவையே தனி தான் போங்க...
  • திருப்பதில தமிழ் படற பாடு இருக்கே... ரொம்ப கஷ்டங்க... அந்த ஊர் காரத்துக்கு கூட நம்ம கண்ல தண்ணி வராதுங்க ஆனா, தமிழ அவங்க படுத்தற பாட்ட பாத்தா கண்டிப்பா வருங்க... சில example..
    திருடர்கள் உள்ளவர் ஜாக்கிரதை
    இலவச வுணவு வழங்குமிடம்
  • சாமி பாத்துட்டு கீழ வரும்போது பஸ்ல வந்தோம்... கண்ணுக்கெட்டின வரை மனிதனின் காலடி படாத, பச்சை போர்வைகள்.... பாக்க கண் கோடி வேணும்.. ஒவ்வோரு திருப்பத்திலும், பஸ் டயர் கிரிச்சிடும் சத்தம் கூட அருமைங்க...
  • இன்னிக்கு போனோம் சாமி கும்பிட்டோம், நாளைக்கு திரும்பி வந்தோம்ன்னு இல்லாம, ட்ராவல்க்கு (போக, வர) ரெண்டு நாள், மலை ஏறதுக்கு ஒரு நாள், மேல் திருப்பதில ஒரு நாள், கீழ் திருப்பதில ஒரு நாள்ன்னு போய்ட்டு வந்தா, இந்த Spiritual vacation ஒரு அருமையான அனுபவங்க.... நம்ம battery அப்படியே ஃபுல் recharge தான்....

Read more...

சிட்டுக் குருவிகளின் flying ரேஸ்

June 29, 2009

சிட்டுக் குருவி... தற்போது அதிகம் காணக்கிடைக்காத, ஆனால் பாக்க பாக்க பரவசமூட்டும் ஒரு சின்ன உயிர்... நான் வாக்கிங் போறப்போ... ஒரு இருவது முப்பது குருவிங்க ஒன்னா கரண்ட் கம்பில உக்காந்து இருக்கும்... திடிர்னு எல்லாம் ஒன்னா கிளம்பி ஒரு வட்டம் அடிக்கும்... அப்பறம் திரும்பி வந்து அதே கம்பில உக்காந்துக்கும்.. வட்டம் அடிக்கிறதுன்னா சும்மா இல்லிங்க... விர்ன்னு நேரா போகும்.... அப்பறம் அப்படியே கீழ விழறாப்ல விழும்... அய்யோ.. விழுதேன்னு நினைக்கறப்போ... திருப்பி விர்ன்னு போகும்... இப்படி ஒரு நாலஞ்சு தரம் போகும்... சில சமயம் ஒரொர் குருவிங்க கூட்டத்தில பறக்காம கம்பிலயே உக்காந்துக்கும்.. அப்பறம் அடுத்த ரவுண்ட்ல திரும்பி சேந்துக்கும்...

உயர இருக்கும் கம்பில உக்காந்து இருக்கறதுனாலயும், ரொம்ப சின்ன சைஸா இருக்கறதுனாலயும் குட்டி குட்டி பூச்சிங்க மாதிரி தெரியும்... ஆனா இதை பாத்துட்டா அன்னைக்கு நாள் உற்சாகமாயிடுங்க...

எல்லோரும் வெய்ட் குறைக்கறதுக்கு, அன்றைய நாளை திட்டமிடறதுக்குன்னு வாக்கிங் போறாங்க... ஆனா... எனக்கென்னவோ இந்த சிட்டுக் குருவிகளின் flying ரேஸை பாக்கறதுக்காகவே டெய்லி வாக்கிங் போணும்னு தோணுது...

Read more...

மைக்கேல் ஜாக்சன் இந்தியாவில் இருந்திருந்தால்...

June 28, 2009

மைக்கேல் ஜாக்சனின் மரணம் ஈடுகட்ட முடியாத ஒண்ணு தான்... ஆனா அவரு அமெரிக்காவில் இருந்திருக்க வேண்டியவரே இல்ல... இந்தியாவில் இருந்திருக்க வேண்டியர்... நெஜமாத்தாங்க சொல்றேன்...
ஒருவேளை மைக்கேல் ஜாக்சன் இந்தியாவில் இருந்திருந்தா..., பாலியல் குற்றச்சாட்டுகள் வரும்போது அதை அப்படியே அமுக்கியிருக்கலாம், அப்பவும் அத ஒண்ணும் பண்ண முடியலன்னா.. ஒரு 5 - 6 வருஷம் கழிச்சு ஒரு கட்சியில சேந்து எம்.எல்.ஏ, எம்.பி ன்னு ஆகிருக்கலாம்... அவர கட்சியில சேத்துக்கிட்டா... கருப்பின வோட்டுக்களை அப்படியே அள்ளிடலாம்ன்னு கட்சிகளும் அவர சேத்துக்கிட்டு இருக்கும்... அப்பறம் அப்படியே மந்திரியாகி 400 மில்லியன் சொத்து சேத்திருக்கலாம்.... அதவிட்டு இப்படி 400 மில்லியனுக்கு கடனாளியாகி இறந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது....

கட்டுக்கடங்காத புகழ், பணம், உலகெங்கும் தன்மீது வெறி கொண்ட ரசிகர்கள் என்று புகழின் உச்சாணிக்கொம்பில் யார் இருந்தாலும், என்ன செய்யறோம் ன்னு தெரியாம, தலைகுப்புற விழுவது இயல்புன்னே எனக்கு தோணுது... இதுக்கு நிறைய உதாரணங்கள் இருக்கு... சாதாரணமா நம்ம யாராவது கவனிக்கறமாதிரி தெரிஞ்சாலே, நம்மால இயல்பா இருக்க முடியாது... அப்படி இருக்கப்போ.. உலகமே நம்மள தான் கவனிக்குதுங்கறப்ப.... ஒரு மனிதன் வேறு எப்படித்தான் இருக்க முடியும்....

Read more...

காணி நிலம் வேண்டும் பராசக்தி - அதுவும் சென்னையில் தான் வேண்டும்

June 24, 2009

சென்னைமா நகர்... பெரிய பெரிய கட்டிடங்கள், எந்நேரமும் விழித்துக் கொண்டிருக்கும் சாலைகள், சீறிச் செல்லும் வண்டிகள், இவங்களுக்கெல்லாம் மெதுவாகவே போகத்தெரியாதா.... ன்னு நினைக்க வைக்கும் மக்கள் கூட்டம், பெரிய பெரிய விளம்பர பேனர்கள் ன்னு சென்னை எப்போதும் பிரமிப்பு தான்... பாக்க பாக்க இந்த அசுர ஓட்டத்தில கலந்துக்க மாட்டமான்னு தான் தோணுது....

ஆனா.... ladies hostel ங்கற பேர்ல அங்க இருக்கற rooms ல்லாம் பாத்தா ஆணியே புடுங்க வேணாம்ன்னு தோணுது...

roomங்கற பேர்ல ஒரு குடோன், compulsoryயா அது இருட்டா தான் இருக்கும்.. ஒரு ரூம்ல கொறஞ்சது4-5 பேர் , சூரிய வெளிச்சம்ன்ற ஒரு வஸ்துவே உள்ள வராத ஒரு அமைப்பு.. ஒரு ரூம்ன்னு சொல்லிக்கிட்டாலும், அந்த ரூம்ல ஒரே ஒரு கட்டில் தான் சொந்தம்.. அந்த கட்டில் கீழயே suitcase, செருப்பு, bucket. இருக்கற ஒரு shelfல, தட்டு, டம்ளர், creams, ஊறுகாய் இத்தியாதிகள்... அதுக்குள்ளயே சாமி படத்துக்கு ஒரு சின்ன இடம்... பாதுகாப்புங்கறது பேருக்கு கூட கிடையாது... யார் வேணா, எப்ப வேணா, உள்ள (திருட) வரலாம்ன்ற மாதிரி ஒரு அமைப்பு .. இதெல்லாம் சேந்தது தான் சென்னை ladies hostel..

சென்னையில சொந்தமா, சின்னதா ஒரு வீடு (வீடு, அபார்ட்மெண்ட் இல்லை) இருந்தா, அதுல ரெண்டு மாடி கட்டி, 10, 12 அறைகள் கட்டி, ஒரு மெஸ் வெச்சு, அந்த மெஸுக்குள்ளயே ஒரு டிவி வெச்சு.. 10க்கு 10 அறையை 10,000 ரூபாய்க்கு(மாசத்துக்கு) வாடகைக்கு விட்டு சம்பாதிச்சுருக்கலாம்...

சென்னைக்கு பிழைக்கவரும் கூட்டத்தை வைத்து ஒரு கூட்டம் பிழைக்குது பாருங்கள், அவர்கள் தான் உண்மையிலேயே பிழைக்கத் தெரிந்தவர்கள்...

இப்படி பிழைக்க தெரியாததினால் தானே

காணி நிலம் வேண்டும் பராசக்தி - அதுவும் சென்னையில் வேண்டும்,
அதில் 10, 12 அறைகள் வேண்டும், அதை நான் வாடகைக்கு விட்டு சம்பாதிக்க வேண்டும் என்று கேட்காமல்,

காணி நிலம் வேண்டும் பராசக்தி - அதில் பத்து பன்னிரண்டு தென்னைமரம் வேண்டும் என்று கேட்டான் அந்த முண்டாசு கவிஞன்...

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP