யான் பெற்ற இன்பம் (விருது).. பெருக இவ்வுலகம் (இப்பதிவுலகம்)...
August 28, 2009

ஏதோ மனசுல தோணுனத பதிவுங்கற பேர்ல எழுதறப்போ... அத நாலு பேர் படிக்கறாங்க ங்கறதே சந்தோஷம்... அதுக்கும் மேல அவங்க நமக்கு விருது தராங்கன்னா... அது யான் பெற்ற இன்பம் ... அளவில்லா ஆனந்தம்....
இந்த பட்டர்ஃபிளை விருது சுகுமார் அண்ணன் தந்தது... பதிவுலகில் ஃபோட்டோக்களும், அதுக்கு சூப்பராய் கமெண்ட்ஸ்ம் போட்டு கலக்கும், இவரிடம் இருந்து விருது கிடைத்ததும், தலைநகரம் வடிவேலு பாணியில் 'ஹய், நானும் விருது வாங்கிட்டேன்.. நானும் விருது வாங்கிட்டேன்' என்று கத்த தோன்றியது....
இப்போது யான்பெற்ற இவ்விருதை , முறையே பதிவர்கள் சிங்கக்குட்டி, டக்ளஸ், அவர்களுக்கும் அளிக்கிறேன்... சிங்கக்குட்டியின் 'என்னை பற்றி' படித்து தான் அவரது பதிவுகளையும் படித்தேன்... அவரது 'பதிவுலகில் பத்து' அனைவரும் படிக்க வேண்டியது...
டக்ளஸ்சின் எங்க அக்காவுக்கு பொறந்த நாளு..!. படித்து விட்டு நான் சிரித்த சிரிப்பு... அடேயப்பா....
கீதாவின் அன்பு பரிசில் கிடைத்தது இந்த விருதுகள்... 

இவ்விருதுகளை வண்ணத்துபூச்சியாருக்கும், மற்றும் கவிநயா விற்கும் அளிக்கிறேன்...
வண்ணத்துபூச்சியாரின் உள்ளார்ந்த, உண்மையான விமர்சனங்கள் எப்போதும் என் favorite லிஸ்ட்டில்
கவிநயாவின் என்னைப் பற்றி யும்,குட்டிக் கவிதைகளும் பிடிக்கும் என்றாலும், அவரது விழுங்குதல்... கவிதை தான் லிஸ்ட்டில் டாப்...
