காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

கால் நடை GHல் ஒரு நாள்

January 31, 2010

போன வாரம் எங்கள் ஊர் கால் நடை GHக்கு போக நேர்ந்தது. (உபயம்: எங்கள் வீட்டு நாய்க்குட்டி).

ஆடு மாடுகளுக்கெல்லாம் நம்மைப் போல் உயிரும் உணர்வும் உண்டு என்றெல்லாம் படித்திருந்தாலும், அதன் அர்த்தம் எனக்கு அங்கே தான் விளங்கியது.

‘எங்க கண்ணுக்குட்டிக்கு உடம்பு சரியில்ல, மாத்திரை தாங்க

‘மாடு ரெண்டு நாளா தண்ணியே குடிக்கல

‘ஆடு இரையெடுக்கல, கொஞ்சம் பாருங்க டாக்டரே

‘காளை, காலை சாச்சு சாச்சு நடக்குதுங்க. என்னாச்சுன்னு பாருங்க. இதவெச்சு தான் நான் பொழப்பயே ஓட்டறேன்

‘கோழிக்கு கால்ல அடி பட்டுருச்சு. கட்டு கட்டிவிடுங்க

- என்றெல்லாம் தங்கள் கால் நடைச் செல்வங்களை கொண்டுவரும் மக்கள்.

அதிலும் ஒரு சிறுவன், மிஞ்சிப்போனால் 8 வயதிருக்கும், ஆட்டுக்குட்டியை தூக்கிவந்திருந்தான். அவனை பார்த்தவுடன் பார்த்திபன் பாணியில்

ஒரு

ஆட்டுக்குட்டியே

ஆட்டுக்குட்டியை

தூக்கிவருகிறதே (அடடே) ஆச்சர்யக்குறி!!!

என்று கவிதை தோன்றியது.

அந்த ஆட்டுக்குட்டியை படுக்கவைத்து குளுக்கோஸ் ஏற்றுகையில், சோகமாய் நின்றிருந்தான். ‘குட்டிய பனியில விடாதேஎன்று சொல்லி, மாத்திரை தந்து அனுப்பினார்கள்.



இதுபோல் நாய்க்குட்டியை, கோழியை கட்டை பைகளில் தூக்கிவந்த தூக்கிவந்த சிறுவர்களும் உண்டு.

இதேல்லாம் GHல் தான் சாத்தியம். இந்த கால் நடைச் செல்வங்களை வைத்து வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு பெட் & வெட் கிளினிக்குகளில் ஒவ்வொருமுறையும் 200, 300 ரூ தந்து வைத்தியம் பார்க்கமுடியுமா..?

இந்த GH, திருச்சியிலுள்ள எல்லா (62) வார்டுகளுக்கும் சேர்த்து என்று சொன்னார்கள். ஒரு 4-5 வார்டுகளுக்கு சேர்த்து இந்த மாதிரி மாட்டு ஆஸ்பத்திரிகளை கட்டிவிட்டால் தான் என்ன? ஒருவேளை விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந்தால் செய்திருப்பார்களோ, இல்லை அப்பொழுதும் தொழுவத்தில் வைக்க கலர் டீவி தந்து, அதில் ஒளிபரப்பவென்று தனி சேனல் ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ..?

Read more...

நொடியில் கொஞ்சம் நாட்டுப்பற்று!!!

January 26, 2010

இந்த பதிவை வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி... நன்றி...



"உங்களுக்கு நாட்டுபற்று இருக்கா..? "

"உங்களுக்கு இந்தியாவ பிடிக்குமா..? "
- இந்த கேள்விய இந்தியாவில இருக்கற யார்கிட்ட கேட்டாலும் பிடிக்கும், நாட்டுபற்றுல்லாம் இருக்குன்னு தான் சொல்லுவாங்க..

ஆனா, "இந்தியாவில இருக்கறதுக்கு உங்களுக்கு பிடிக்குமா?" ன்னு கேட்டா... அத்தனை பேருமே இல்லன்னு தான் சொல்லுவாங்க...

ஏன்னு சொல்லவேண்டியதே இல்ல... எவ்வளவோ குளறுபடிகள்... லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடு, ட்ராபிக்கில் ஒழுங்கின்மை ன்னு ஆரம்பிச்சு நம்ம மக்கள் தொகைய விட நீளமா போகும் அந்த லிஸ்ட்... இதையெல்லாம் சரி பண்ண நம்மள்ல்ல யாருக்கும் நேரமே இல்ல...

'நானே நாள் முழுக்க கஷ்டபட்டு வேலை பாக்கறேன்... வாரத்துல ஒரே நாள் தான் லீவ்.. இதுல நாட்டுபற்று, சீர்திருத்தம் இதெல்லாம் நமக்கு சரியாவராது' ன்னு நீங்க நெனச்சீங்கன்னா, அது நூத்துக்கு நூறு உண்மை.. கூட்டம் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தவோ, கோஷம் போடவோ, பிற சீர்திருத்த பணிகளில் ஈடுபடவோ நம்மில், பலருக்கு நேரமில்லை தான்..

ஆனால், பல சமயங்களில், நம் நாட்டுபற்றை வெளிப்படுத்தவும், ஒழுங்கீனங்களை சீர் செய்யவும் சில நொடிகளே போதும் என்பதே உண்மை...

ஒருஉதாரணத்துக்கு ட்ராபிக்கில் ஒழுங்கின்மையை எடுத்துக்குவோம்.. அதுக்கு என்ன செய்யலாம்.. ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்கன்னு பிட் நோட்டீஸ் அடிச்சு தரலாம், மீட்டிங் போட்டு பேசலாம், குறிப்பிட்ட நேரங்களில் ட்ராபிக் போலீஸ் இருக்கணும்ன்னு வலியுறுத்தலாம் இல்லனா கேமரா வெச்சு மானிட்டர் பண்ணலாம்... ஆனா.. இதுஎல்லாமே ரொம்ப டைம் எடுக்கும்.. அதுக்கு பதிலா அவ்வளவாய் டைம் எடுக்காத, ஆனால் பலன் தரக்கூடியதை செய்யலாம்... அதாவது ட்ராபிஃக் சிக்னல்ல பச்சை லைட்டு போட்டதும் வண்டி எடுத்தா போதும்...

ப்பூ.. இவ்வளவுதானா!!! இது ஒரு மேட்டரா... ன்னு நெனைக்காதீங்க.. உண்மையில் அது அவ்வளவு ஈஸி இல்லை.. 5, 4, 3 ன்னு வந்ததுமே எல்லாரும் வண்டி எடுத்துடுவாங்க... அப்போ நாம மட்டும் எடுக்கலேன்னா கன்னாபின்னான்னு ஹார்ன் அடிப்பாங்க.... உடனே நாமளும் அவசரப்பட்டு வண்டிய கெளப்பிடுவோம்.... ஆனா அப்படி செய்யாம 3,2,1ன்னு குறைஞ்சு பச்சை விளக்கு எரிஞ்சதும் தான் வண்டி எடுக்கணும்ன்னு உறுதியா இருங்க...

இத எப்பவுமே ஃபாலோ பண்ணுங்க. அவ்வளவுதான்...

இதற்கு ஆகும் செலவு; ரூ 0 /-
இதற்கு ஆகும் நேரம்; 1 அல்லது 2 நொடிகள்...

அவ்வளவே தான்... இதை நம்மால் செய்ய முடியாதா என்ன?

வெளிநாடு போய்வந்த எல்லோரும், 'அங்கல்லாம் ட்ராபிக் ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்றாங்க ன்னு' பெருமையா சொல்லிப்பாங்க.... எங்கேயோ, யாரோ செய்வதில் நமக்கென்ன பெருமை... ஆனால் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை நாம் செய்யாமல் இருந்தால் நமக்குத்தானே சிறுமை....

ட்ராபிஃக் சிக்னல்லை தவிர்த்து, ஓரிரு நொடிகளில் நாம் செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கு..

சரி.. இதுக்கும் நாட்டுபற்றுக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேட்கலாம்..

இந்த மாதிரி நீங்க செஞ்சு, உங்கள பாத்து நாலு பேரு ஃபாலோ செஞ்சு, அது அப்படியே டெவலப் ஆகி, ட்ராபிக் போலீஸ் இல்லாமயே, ட்ராபிக் ரூல்ஸ்ச நாம ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ற நிலை வந்தா நல்லது தானே...

சிறுதுளிகள் சேர்ந்து தானே பெரு வெள்ளமாகும், அப்படியான ஒரு பெருவெள்ளத்திற்கு உங்கள் சிறு துளியும் தான் காரணமாய் இருக்கட்டுமே!!!!!

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP