காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

சித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்

October 19, 2011



பாலமலை என்றும், சித்தேஸ்வரன் கோவில் இருப்பதால் சித்தேஸ்வரன் மலை என்றும் சொல்லப்படும் அந்த மலை ஈரோடு மாவட்டம், பவானி அருகே (1/2 மணி நேரப் பயணம்) உள்ள குருவரெட்டியூர், ஊமாரெட்டியுர் அருகே உள்ளது.. இதை மலை என்று சொல்வதைக் காட்டிலும் மலைத்தொடர் என்று சொல்வதே சரி. மேட்டூர் அணையில் தேக்கப்படும் நீர் இந்த மலைத் தொடர்களின்  அரவணைப்பில் தான் இருக்கின்றது... குருவரெட்டியூரில் இறங்கி மலைக்கு எப்படி போகணும் என்று கேட்டாலே சொல்லிவிடுவார்கள்... அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் யாரையும் கேட்கவே வேண்டாம்.. கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று கொண்டிருப்பார்கள்...

வருடத்தில் புரட்டாசி மாத சனிக்கிழமைகள், (3வது வாரம் ரொம்ப விஷேஷம்), சித்திரை 1ம் தேதி, அமாவாசை போன்ற நாட்களிலேயே மக்கள் வருவார்கள்... மற்ற நாட்களில் ஆள் நடமாட்டமில்லாத, அடர்ந்த ஒரு வனமாக காட்சியளித்து நம்மை பயமுறுத்தும்..

அடிவார பிள்ளையார் கோவிலையும், அங்கே இருக்கும் சிவனையும் வணங்கிவிட்டு, படிகளில்லாத, கற்களும், பாறைகளுமாய் இருக்கும் அந்த தடத்தில் நடக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.. அவரவர் உடல் வலிமையை பொறுத்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறையோ, அல்லது 20 நிமிடங்களுக்கு ஒரு முறையோ சற்று உட்கார்ந்து, தண்ணீர் அருந்தி இளைப்பாறிவிட்டு பயணத்தை தொடரலாம்...நேரம் ஆக ஆக... அடர்ந்த காட்டுக்குள் நீங்கள் சென்று கொண்டிருப்பதை உணர்வீர்கள்.. கீழே கிராமங்களில் வெயில் வருவதையும் உங்களால் பார்க்க முடியும்..

இது தான் ஆரம்பம்

அப்படியே சென்று கொண்டிருந்தால், முதலில் வருவது வெத்தலைப்பாறை என்ற இடம்... பாறைகள் பார்ப்பதற்கு வெத்தலை போல இருக்காது.. ஆனா நல்ல நீநீநீ….நீளமாக இரண்டு, மூன்று பாறைகள் உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கு வசதியாக இருக்கும்... முன்பெல்லாம் மக்கள் அங்கே உட்கார்ந்து வெத்தலை போட்டுக் கொண்டு, சிரமபரிகாரம் செய்து கொண்டு பயணத்தை தொடர்வார்களாம்அதனால் வெத்தலைப்பாறை என்று பெயராம்

அடுத்து வருவது திம்மம் பொதி.. அங்கே சிமெண்டினால் கட்டப்பட்ட நல்ல அகலமான ஒரு தளம் இருக்கும்.. தானியங்களை காயவைக்கவும், பயணிகள் ஒய்வெடுப்பதற்கும்.. அங்கே 2, 3 கடைகளும் உண்டுசுக்கு காப்பி, டீ, கம்மங்கூழ், அங்கே விளையும் கொய்யா, மாதுளை, சீதாப்பழங்களையும் விற்பார்கள்…  பச்சை படிக்கட்டுகள் போன்ற விளைநிலங்கள், சினிமாவில் பார்த்திருக்கும் ஊட்டி எஸ்ட்டேடுகளைப் போன்ற அமைப்பை பார்க்குப் போதே தெரியும், நாம் திம்மம்பொதியை நெருங்கிட்டோம்ன்னு சொல்லும்..

இந்த இடத்தில் தான் சில வீடுகளை பார்க்க முடியும்.. அடிவாரத்திலிருந்து திம்மம்பொதிக்கு வர்றதுக்கு எங்களுக்கு 2 மணிநேரம் ஆச்சு.. ஒட்டுமொத்தமாக 2 மணிநேரத்திலேயே கோவிலை அடைந்துவிடுபவர்களும் இருக்கின்றார்கள்பொதுவில் மலை ஏற ஏற, கால்கள் கெஞ்சும்… 10 நிமிடங்களுக்கு ஒரு முறை உட்காரச் சொல்லி அழும்.. அதிலும் சின்ன குழந்தைங்கல்லாம்.. அப்பா.. கால் வலிக்குதுப்பா.. கொஞ்ச நேரம் உக்காரலாம்ப்பா.. என்று சொல்வார்கள்அவ்வளவு தாண்டா.. கோவில் வந்துருச்சுடா.. இப்படி போயி, அப்படி வந்தா ஆச்சு.. வா.. வா.. என்று இழுத்துக்கொண்டு போவார்கள்.. இத்தனைக்கும் 1 மலை கூட வந்திருக்கமாட்டார்கள்.. (பாலமலை 7 மலைகளை கொண்ட தொடர்).. பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும்.. பார்த்துக் கொண்டு மட்டும் இல்லாமல், எட்டி நடை போட்டால் தான் நாமும் சூரிய வெளிச்சம் மறையும் முன் வீடு வந்து சேரலாம்..

ஆனால் சூரிய வெளிச்சம் மறைந்த பின் ( மாலை 6, 7 மணிக்கு ) பயணத்தை ஆரம்பித்து, விடிவதற்குள் மலை இறங்கி வருபவர்கள் தான் அதிகம் இங்கேஅதை நினைத்தாலே சிலிர்க்கின்றது எனக்குபட்ட பகலில் மலை ஏறுவதில் கால்கள் தான் வலிக்குமே அன்றி, வேறு சிரமங்கள் இல்லை.. இரவில் ஏறுவதானால்அடேயப்பா…!!! ஆனால் இரவில் தான் அதிக கூட்டம் இருக்கின்றது.. டயர்களை கொளுத்திக் கொண்டும், டார்ச்சு லைட்டுகளை ஏந்திக்கொண்டும் சாரி சாரியாய் மக்கள்

அடுத்த இடம் பெரியகுளம்வருஷந்தோறும் வருபவர்கள், அடிவாரத்தில் ஏற ஆரம்பித்த பின் பெரியகுளம் வந்து தான் நீண்ட ஒய்வெடுப்பார்களாம்.. (அதிகபட்சமாய் 1/2 மணி நேரம்..) பெரியகுளத்தையும் தாண்டி வந்துகொண்டிருக்கையில் ஓரிடத்தில் பாறைகளுக்கிடையில் நீரோடை உண்டு.. அதில் தண்ணீர் எடுத்து கொண்டு, சர்வ சாதாரணமாய் போய்க்கொண்டிருப்பார்கள் மலைக்காரர்கள் என்ற உள்ளூர்வாசிகள்.. தண்ணி பாட்டிலையும், இட்லி, சாப்பாட்டு பொட்டலங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு செல்லும் நாம் தஸ்ஸு புஸ்ஸு என்று மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, தண்ணிக் குடம், மூங்கில் கட்டுகள், விற்பதற்கு பெரிய பெரிய மூட்டைகள் என்று மலைக்காரர்கள் தூக்கிக் கொண்டு போவதை பார்த்தாலே பக்குன்னு இருக்கும் நமக்கு…  

நாங்கள் பார்த்த போது வீடு கட்டுவதற்கு கருங்கல்லையும், சிமெண்ட்டு மூட்டைகளையும் சுமந்து கொண்டு போனார்கள்நல்லா ஸ்ட்ராங்கா இருக்காங்க என்று சொல்லிக்கொண்டாலும்ஒரு அவசர ஆபத்துக்கு கூட அவர்கள் இவ்வளவு பெரிய மலைத்தொடரை தாண்டித்தான் வரவேண்டும் என்பது ரொம்ப கொடுமையான விஷயமே!!!! இப்பொழுதும் பிரசவ வலி கண்டுவிட்டால், மூங்கிலில் தொட்டில் கட்டித்தான் அடிவாரம் வரை அழைத்து வர வேண்டுமாம்.. நினைத்தாலே மயங்கிவிழுந்துவிடுவோம் நாம்..


மலைத் தொடர்
இப்படியாக ஒருவழியாக இஷ்டப்பட்டு கஷ்ட்டப்பட்டு சித்தேஸ்வரரை தரிசித்தோம்... கோவில் சிறிது தான்.. அதிலும் ஒரு பக்கமே தடுப்புகள் உண்டு.. இன்னொறு பக்கம் சற்றே எட்டுப் பார்த்தால், கிடு கிடு பள்ளம்... கோவிலின் முன்புறம் நின்று பார்த்தால் குட்டியாக மேட்டூர் அணையும், அந்த கூண்டுகளில் இருந்து வரும் புகையும் தெரியும்... 

ஒருவழியாக சித்தேஸ்வரரை வணங்கியாச்சு.. ஏறது தான் கஷ்ட்டம்.. இறங்கறது சுலபம்ன்னு நினைச்சீங்க.... ம்ஹீம்... தப்பு... இறங்குவது தான் சிரமம்.. மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது.. ஆனால் கால்கள் நிற்காமல் இறங்கிக் கொண்டிருக்கவே சொல்லும்... தப்பித் தவறி நின்றால் நடுங்கும்... ஆனால் ஏறியதை விட வேகமாக இறங்கிவிட முடியும்... பத்திரமாய் இறங்கிவிட்டதற்கு அடிவார பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வீட்டுக்கு ஓடி வந்து விடலாம் சந்தோஷமாய்... ஏனெனில் சித்தேஸ்வரன் மலைக்கு செல்வது என்பது ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம் மட்டும் அல்ல, சற்றே சிரமமான பயணமும் கூட.. மனமென்னும் பேட்டரி ஃபுல் சார்ஜ் ஆகிவிட்டாலும், உடலில் உள்ள பேட்டரி  ரொம்ப கீழிறங்கிவிடும்... ரெண்டு நாட்களாகும் மீண்டும் சார்ஜ் ஏற... 

பலர் பக்தியின் காரணமாகவும், சிலர் உடலுக்கு ஒரு பயிற்சி என்று சொல்லிக்கொண்டும் செல்வார்கள்.. எது எப்படியோ.. ஓரளவு உடல் வலிமை உள்ளவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் சித்தேஸ்வரர் கோவில்...

13 கருத்துகள்:

கே. பி. ஜனா... said...

பயணக் கட்டுரை அங்கே செல்ல ஆவலைத் தூண்டுகிறது! நல்ல நடை!

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க ஜனா...

நன்றிங்க..

ரிஷபன் said...

மனமென்னும் பேட்டரி ஃபுல் சார்ஜ் ஆகிவிட்டாலும், உடலில் உள்ள பேட்டரி ரொம்ப கீழிறங்கிவிடும்... ரெண்டு நாட்களாகும் மீண்டும் சார்ஜ் ஏற...


பர்வத மலைக்குப் போனபோதும் எனக்கு அப்படித்தான் தோன்றியது.. ஆனால் கிராமத்து மக்கள் சுமையுடன் வெகு இயல்பாய் ஏறி வருகிறார்கள். அதுவும் இரவில். பகலிலேயே மிரட்டுகிற பாதையில் அவர்கள் சுதந்திரமாய் ஏறி வருவது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

மலையில் 3 நாட்கள் தங்கி கீழிறங்கிய போது மனசு வரவில்லை.. விட்டு வர.

sathishsangkavi.blogspot.com said...

நான் ஊமாரெட்டியூர் வழியாகத்தான் சென்றுள்ளேன்...

அதுவும் மலையாளத்தான் காட்டில் தங்கி ஆடும் ஆட்டம் இருக்கே சூப்பராக இருக்கும்...

இந்த கோயிலுக்கு செல்லும் போது சமையல் ஆண்கள் தான் செய்வோம்...

sathishsangkavi.blogspot.com said...

இக்கோயிலுக்கு நான் ஊமாரெட்டியூர் வழியாகவும், நெறிஞ்சிப்பேட்டை வழியாகவும் சென்றுள்ளேன்...

ஊமாரெட்டியூர் வழியாக செல்லும் போது மலையாளத்தான் காட்டில் தங்கி ஓய்வெடுப்பது மிக அற்புதமாக இருக்கும்...

நீங்க இந்த குருவரெட்டியூரா...

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க ரிஷபன்...

ஆமாம்.. மலையழகை பார்த்துவிட்டால் அங்கேயே தங்கிவிட மனம் சொல்லும்...

பர்வத மலை எங்கே இருக்கு..?

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க சங்கவி...

ஆமாம்.. நான் இதே குருவரெட்டியூர் தான்... நீங்க நெறிஞ்சிப்பேட்டை வழியா போனீங்களா..? ரொம்ப அருமையா இருந்திருக்குமே!!!

அப்படியும் ஒருமுறை சென்று பார்க்க வேண்டும்... பார்ப்போம்..

வருகைக்கு நன்றிங்க...

அகல்விளக்கு said...

அட எங்க ஏரியா...

புகைப்படங்கள் அருமை...

வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று... :))

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நன்பி,நம்ம ஊரைப்பத்தி அழகா எழுதி இருக்கீங்க! அழகான எழுத்து நடை சித்தேஷ்வரரை கோவில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளேன் .முடிந்தால் பாருங்கள் www.kavithaimathesu.blogspot.com நட்புடன் குரு.பழ.மாதேசு குருவரெட்டியூர்

Anonymous said...

வணக்கம்

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_15.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்வர்ணரேக்கா said...

roopan,

varugaikum, valthukalukum nandri..

Kavinaya said...

இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன். சித்தேஸ்வரர் அருள்தான். அருமையான பகிர்வு! நன்றி ஸ்வர்ணரேக்கா.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா அருமையான பயணமாக இருக்கிறதே....

குறித்து வைத்துக் கொள்கிறேன் - பயணிக்க வேண்டிய இடமொன்றாக!

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP