காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.
Showing posts with label அங்கலாய்ப்பு.... Show all posts
Showing posts with label அங்கலாய்ப்பு.... Show all posts

சொன்னதும் சொல்லாததும்

February 3, 2011

சொன்னது
வெள்ளநிவாரணத்துக்கு அதிக நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை



சொல்லாதது 
தேர்தல் வருது சாமி. பாத்து பண்ணுங்க. நீங்க ஒதுக்கற நிதிய பொறுத்து தான் ஓட்டுக்கு 1000மா இல்ல 5000ன்னு முடிவு பண்ணனும்.
-----------------------------------------------------------------------------------------------
சொன்னது 
எகிப்தில் நடந்து வரும் போரட்டங்கள் அவர்கள் உள்நாட்டு பிரச்சனை - இந்தியா கருத்து

சொல்லாதது
நக்சல் பிரச்சனை ஜார்க்கண்டு, ச‌ட்டீஸ்கர், பீகார் மாநிலங்களின் பிரச்சனை.
தமிழக மீனவர் கொலை அவர்கள் தனிப்பட்ட பிரச்சனை. இதிலெல்லாம் மத்திய அரசு தலையிடாது..

-----------------------------------------------------------------------------------------------
சொன்னது
உளவுத்துறையின் எச்சரிக்கையை மாநில அரசுகள் அலட்சியப்படுத்துகின்றன - ப.சிதம்பரம்.

சொல்லாதது
அப்பாடா.. பிரச்சனையை தள்ளிவிட்டாச்சு. இத வெச்சு தேர்தல்ல நமக்கு வேண்டியதை தலைகிட்ட கேட்டு வாங்கிக்கலாம்
----------------------------------------------------------------------------------------------
சொன்னது
சபரிமலையின் 18 படிகளை அகலமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. படிகள் வெறும் கட்டுமானம் அல்ல. அதில் பக்தர்களின் நம்பிக்கையும் சேர்ந்திருக்கின்றது - திருவாங்கூர் தேவஸ்தானம் 

சொல்லாதது
அதில் பக்தர்களின் உயிரும் கலந்திருக்கின்றது.  வேறேந்த செலவும் செய்யமுடியாது. வரவு மட்டுமே எங்கள் குறிக்கோள்
---------------------------------------------------------------------------------------------
சொன்னது
மத்திய அரசு தனது தரப்பு விளக்கங்களை தெரிவிக்க வேண்டியது உள்ளது. மத்திய பொது தணிக்கை குழு அறிக்கையை மட்டும் வைத்து 2ஜி லைசென்சை ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்



சொல்லாதது
ஊழலை நிரூபித்தால் கூட லைசென்ஸ் ரத்து கிடையாது.  இதுல தணிக்கை குழு அறிக்கைக்கே லைசென்ஸ் ரத்தா. என்ன சின்னபுள்ளதனமா இருக்கு

Read more...

ஆத்திகமும், நாத்திகமும்

January 31, 2011



பதிவர் ஆதியின் ‘நாத்திகம் காத்தல்’ பதிவை படித்தபின் என்னுள் எழுந்த எண்ணங்களின் தொகுப்பே இப்பதிவு....

ஆத்திகம்..

கடவுள் நம்பிக்கை என்பது என்ன..?

ஒரு வரியில் சொல்வதானால்... நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு என்று நம்புவதே அது.

ஆனால் இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொண்டிருப்பதோடு நில்லாமல் அந்த கடவுள் நம்பிக்கையை கொண்ட ஒரு கூட்டம் (மதம்) அந்த சக்திக்கு ஒரு வடிவம் தந்தது.. (ஒரு வடிவம் அல்ல.. பல வடிவங்கள்.) ஆணாகவோ, பெண்ணாகவோ சித்தரித்தது, அதற்கு ஆடைகளையும், ஆபரணங்களையும் (அதுவும் அவரவர் வழக்கப்படி, இஷ்ட்டப்படி...) தந்து மகிழ்ந்தது..

அந்த காலத்தில் ஏற்பட்ட வடிவங்களில் அந்த காலத்திய உடைகளான வேட்டி, சட்டை, புடவைகளை பார்க்கலாம்.. ஒரு வேளை இந்த காலத்தில் ஒரு புதிய கூட்டம் (மதம்) உருவானால், அந்த கூட்டம் புதியதோர் வடிவத்தை தந்தால் அதில் ஜின்ஸ் பேண்ட், பாப் கட் கொண்ட உருவங்கள் ஏற்படலாம். அந்த உருவங்களை நம்பிக்கைகளின் பேரில் நாம் வழிபடவும் செய்யலாம். தவறில்லையே!!!

ஆடைகள், ஆபரணங்களோடு நில்லாமல் நியம நிஷ்ட்டைகளும் ஏற்படுத்தப்பட்டன… அதாவது do’s and don’t’s. அதோடு  நிற்கவில்லை.. அந்த உருவங்கள் குடியிருக்க இடங்கள் (கோவில்கள், சர்ச்சுகள், பிற வழிபாட்டுத் தலங்கள்) கட்டப்பட்டன.. அதை பாதுகாக்க அறங்காவலர்கள் அல்லது அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்… அந்த இடங்களுக்கென சொத்துக்கள் உருவாக்கப்பட்டன… அந்த சொத்துக்களின் வருமானத்தில் அந்த வடிவங்களுக்கான பண்டிகைகள் முதலான காரியங்கள் நடந்தேறின..

எல்லாமே சரியாக நடக்குமா என்ன?  சில அறங்காவலர்கள் அந்த சொத்துக்களை அபகரிக்கவும் செய்தார்கள்… இப்படிப்பட்ட சூழலில் நாம் அந்த அறங்காவலர்களை தான் தண்டிக்கவும், பழிக்கவும் செய்யவேண்டுமே தவிர, தெய்வ நம்பிக்கையின் காரணமாகத்தானே இப்படி நடந்தது, எனவே கடவுள் நம்பிக்கையே தவறு என்று சொல்லலாகுமா…!!!!

சபரிமலை புலிமேடு சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். பக்தி என்று சொல்லிக்கொண்டு எதற்காக இத்தனை மக்கள் அங்கே வருகிறார்கள். எல்லோரும் டிவியில் மகரவிளக்கை காணவேண்டியது தானே என்று சிலர் “The Hindu” எடிட்டர் பகுதியில் எழுதியிருந்தார்கள். நாத்திகர்களும் இந்த சம்பவத்தை வைத்து கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்கிறார்கள். இதே கோவிலாக இல்லாமல் ஒரு தொழிற்சாலையாக, பாலமாக, இருந்தால்…

கூட்டம் கூடுவது மக்கள் தவறல்ல, அதற்கான சரியான வசதிகளை செய்து தராதது நிர்வாகத்தின் தவறேயாகும்.

மதமோ, கடவுள் நம்பிக்கையோ, அறமோ... ஏதோ ஒரு பெயரில் அக்காலத்தில் மக்களுக்கு தொண்டு செய்யவே நினைத்தார்கள்… காலப்போக்கில் அவை மாறிப்போய்விட்டது.. அவ்வளவே..!!!

என்னைப் பொருத்தவரையில் நீ இந்த காரியத்தை முடிந்துக்கொடு, நான் இதை செய்கிறேன் என்று சாமியிடம் பேரம் பேசுவது தவறு மாறாக தெய்வமே.. எனக்கு இப்படிப்பட்ட கஷ்ட்டம் வந்திருக்கின்றது அதை தாங்கும் சக்தியை தா.. அல்லது அதை தீர்க்கும் வழியை காட்டு என்று வேண்டிக்கொள்ளலாம்.. ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் நம்மால், ஒரு சராசரி மனிதனால் அப்படிப்பட்ட தெளிந்த நிலையில் இருக்கமுடிவதில்லையே… எனவே தான் கைக்கு கிடைத்த ஆதாரமாக மூடநம்பிக்கைளை பற்றிக்கொள்கிறோம் சில சமயங்களில்.

உண்மையில்  மூடநம்பிக்கைகள் என்று கிடையாது மாறாக அவையனைத்துமே திரிக்கப்பட்ட நம்பிக்கைகள் தான். உதாரணத்திற்கு மொட்டையடிப்பதை எடுத்துக்கொள்ளலாம்.
நான் இப்படி தப்பு செய்துவிட்டேன். அதன் காரணமான என் அகங்காரத்தை நானே ஒழித்துக்கொள்ளும் விதமாக மொட்டையடித்துக்கொள்கிறேன் என்று வேண்டிக்கொண்டார்கள் அன்று.

ஆனால் இன்றா, நான் மொட்டையடிப்பதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன், அந்த தெய்வம் கண்டிப்பாக எனக்கு அதை செய்துதரும் என்று சொல்கிறார்கள். இந்த திரிக்கப்பட்ட நம்பிக்கை தான் தவறே, தவிர கடவுள் நம்பிக்கை தவறல்லவே.. 

ஒரு முக்கியமான மீட்டிங்கிற்கு செல்கிறீர்கள். அதில் பேசப்போகும் பாயிண்டுகளை நன்கு குறிப்பெடுத்துள்ளீர்கள்.. Projector போன்ற உபகரணங்களையும் test செய்து வைத்துக்கொள்கிறீர்கள், உங்கள் மீது உங்களுக்கு அசாத்திய நம்பிக்கையும் உள்ளது.  ஆனாலும் புறப்படும் சமயம் கடவுளை வணங்கிவிட்டு செல்கிறீர்கள். இது மூடநம்பிக்கையா? புறப்படும் இடத்திலிருந்து நாம் சென்று சேரும் இடம் வரும்வரை நம் கண்ணுக்குதெரியாத எத்தனையோ இதர்பாடுகளை களைந்து நம்மை காக்குமாறு நமக்கு மேல் இருக்கும் அந்த சக்தியிடம், கேட்டுக்கொள்கிறோம். அவ்வளவே..!!!

ஆனால் கடவுளே இல்லை என்று சொல்வதை கேட்டால் சிரிப்புத்தான் வருகின்றது.. ஒரு அலுவலத்திற்கு நீங்கள் ஒரு கடைநிலை ஊழியராக சேரப்போகின்றீர்கள்.. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த அலுவலகத்தின் உரிமையாளரை நீங்கள் பார்க்கவில்லை.. உடனே அந்த அலுவலத்திற்கு உரிமையாளரே கிடையாது என்று சொல்லிவிடமுடியுமா…

தக்கிளியூண்டு அலுவலத்திற்கே உரிமையாளர் இருப்பாரென்றால், இவ்வளவு பெரிய அண்ட சராசரத்திற்கு உரிமையாளர் / பாதுகாவலர் இருக்காமல் இருப்பாரா..? அப்படிப்பட்ட அவர் நம்மைப்போன்ற கடைநிலை ஊழியருக்கு காட்சி தான் தருவாரா..?
 
ஆனால் மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகளே நாத்திகர்களை உருவாக்குகின்றது என்று எண்ணுகிறேன். எனவை நாத்திகர்கள் கடவுள் நம்பிக்கையை எதிர்க்கவேண்டாமென்றும் அதன் பெயரைச் சொல்லிக்கொண்டு நடத்தப்படும் மூடநம்பிக்கைகளையும், தவறுகளையும் எதிர்க்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆத்திகர்கள் கடவுள் நம்பிக்கையையும், மூடநம்பிக்கைகளையும், தவறுகளையும் பிரித்தரிய கற்றுக்கொண்டு மேன்மேலும்  கடவுள் நம்பிக்கையில் மூழ்கித் திளைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.



Read more...

வந்தார்கள்... சுரண்டினார்கள்

January 6, 2011

சமீபத்தில் தான் மதனின் வந்தார்கள் வென்றார்கள்படிக்க முடிந்தது. ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொன்னா அதுசூரியனுக்கே டார்ச்அடிக்கற மாதிரி

குட்டி குட்டிப் பெட்டி செய்திகளுடனும், சுவையான எழுத்து நடையுடனும் இருக்கும் அந்த புத்தகத்தை விமர்சனம் பண்ணப்போறதில்லை நான்.

அந்த காலத்துல நடந்த சம்பவங்களையே இப்படி சுவையா எழுதமுடியும்ன்னா இந்த காலத்துல நடக்கறத எழுதினா!!! அதாவது கி.பி 2100ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்ததை கி.பி.3500 ல் எழுதினால் எப்படியிருக்கும்ங்கற ஒரு கற்பனை தான் இந்த பதிவு

வந்தார்கள்.. வென்றார்கள்’ – அதாவது படையெடுத்து வந்தார்கள், போரில் வென்றார்கள். இங்கே நான் எழுதப்போவதுவந்தார்கள்.. சுரண்டினார்கள்’, அதாவது, ஆட்சிக்கு வந்தார்கள், பணத்தை சுரண்டினார்கள்.

ரெடி ஸ்டார்ட் மியூசிக்… !!!! (imagine கவுண்டமணி வாய்ஸ்)
-------------------------------------------------------------------------------------------
மன்னராட்சி மக்களை கஷ்ட்ப்படுத்துகிறது என்று சொல்லிகி.பி. 2000மாம் ஆண்டுகளில் இந்தியாவில் மக்களாட்சி என்ற ஒன்றை கொண்டுவந்தார்கள்அதாவது மன்னருக்கு பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியே மக்களை ஆள்வது என்பது தான் அது.. 

ஆனால் மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தது மாறி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் பரம்பரையில் வந்தவர்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தது தான் நடந்ததே தவிர வேறோன்றும் வித்தியாசமில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியே ஆனாலும் அவர்கள் செய்த அட்டூழியங்களை மக்களால் தட்டிக்கேட்க முடியாமல் இருந்தது தான் மக்களாட்சியின் துரதிருஷ்ட்டமாக இருந்தது..
-------------------------------------------------------------------------------------------
இதில் 10 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, தனது உழைப்பு அனைத்தையும் தனது குடும்பத்திற்காகவே செலவிட்டார். குடும்பம் என்றால் மகள், மகன் மட்டுமல்ல, மகள் வயிற்று கொள்ளு பேத்தி, மாமன் மகள் பெற்ற எள்ளு குழந்தைகள், அவர்தம் செல்ல வளர்ப்பு பிராணிகள் எல்லாம் அடங்கும்…

அவரை பற்றி சில தமாஷ் செய்திகள்
10 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, பாராட்டுக்கு என்றுமே மயங்குபவராக இருந்துள்ளார்அவர் எந்தவொரு செயல் செய்தாலும், பாராட்டி விழா எடுத்து, விருது வழங்குவதை, அவரிடம் காரியம் சாதித்து கொள்பவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இப்படி எதற்கெடுத்தாலும் விழா எடுத்து எடுத்து கடைசியில் அவர் தினமும் காலையில் இட்லியும், தாளிக்காத சட்னியும் சாப்பிடுவதை கொண்டாடி பிரம்மாண்ட விழா எடுத்து, அவருக்கு
இட்லி சாப்பிடும் இளந்தலைவர்!!!’ (அப்போது அவருக்கு வயது 120)
என்றும்
தாளிக்காத சட்னி சாப்பிடும் தன்மான சிங்கம்’ 
என்றும் விருதுகள் வழங்கப்பட்டன என்று குறிப்புகள் சொல்கின்றன

மக்களை உழைக்கும் வர்க்கமாக்காமல், அடிப்படை வசதிகள் செய்து தராமல், இலவசங்கள் அள்ளித் தந்து, மண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த பெருமையும் அவரையே சாரும் என்று வரலாற்று ஆசிரியர் சோ என்பவர் தெரிவிக்கிறார்.

ஆம் அவரது ஆட்சியில் மக்களுக்கு டிவி என்கிற சாதனத்தில் ஆரம்பித்து, அன்றாட சமையலுக்கு தேவையான கருவேப்பிள்ளை, கொத்துமல்லி வரை இலவசமாக தரப்பட்டது

யாரையும் (எந்த கட்சியையும்) எளிதில் பகைத்து கொள்ளாததும், சலுகைகளை வாரி இறைத்ததும், அதை அடிக்கடி விளம்பரப்படுத்திக் கொள்வதும், ஜெயலலிதா கட்சியைக் காட்டிலும், நல்ல கட்டுக்கோப்பான கட்சியை நடத்தியதும், அவரது ப்ளஸ்கள்..

ஆனால் அவர் பார்த்து பார்த்து வளர்த்த குடும்பத்தாலேயே அவரது ஆட்சி சரிந்தது என்பது தான் வேதனையான தமாஷ்..
----------------------------------------------------------------------------------------------------------------------------------
விருது வாங்கி கருணாநிதி தான் அப்படி என்றால், அவருக்கு சக்கிவாய்ந்த எதிரியாளியாக கருணாநிதியாலேயே கருதப்பட்ட ஜெயலலிதா என்பவர் தான் இமாலய ஊழல்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட அம்மையார்.

மேலும் அவர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம், பேரணி, அறிக்கை என்று தனது இருப்பைக் காட்டிக்கொண்டவர். அதன் பயன் என்னவெனில் குழந்தைகள் வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் கூட பெற்றவர்கள் அந்த குழந்தையை பார்த்து

‘ஏன்டா இப்படி அழுது போராட்டம் செய்யற’ என்று சொல்லும் அளவுக்கு போய்விட்டது…

7, 8 மொழிகள் அறிந்திருந்தும், நல்ல ஆளுமைத் திறன் இருந்தும், கட்சியில் யாரையும் வளரவிடாமல் இருந்ததும், தான் செய்த ஊழலை மறைக்க தெரியாததும், மக்களிடமும், மீடியாக்களிடமும், தன்னை சுற்றியிருப்போரிடமும் நீக்குபோக்கு காட்டத்தெரியாமல் இருந்ததும் அவரது சரிவிற்கு முக்கிய காரணம்… என்று 2025ல் தான் எழுதிய நூலில், வரலாற்று ஆசிரியர் மதன் கூறுகிறார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ராஜா காலத்தில் ஆட்சிகள் மாறியதும், பழுக்க காய்ச்சிய வாளை அரசியல் எதிரிகளின் கண்களில் பாய்ச்சி, அவர்கள் மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்வார்கள். அது கி.பி.1600களில். 

ஆனால் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட கி.பி. 2100களில் அரசியல் எதிரிகளை வழக்கு போட்டு அவர்கள் மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்வார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னும் இப்படி நிறைய எழுதிக்கொண்டே போகலாம்.. 


Read more...

கும்பகோணம் கோவில்கள் - ஒரு terror பயணம்

November 21, 2010

திருப்பதியில தடுக்கி விழுந்தா மொட்டைகள்...
கும்பகோணத்துல தடுக்கி விழுந்தா கோவில்கள்... 

ஏகப்பட்ட கோவில்கள்... ஏற்கனவே ரெண்டொரு முறை சென்றிருக்கிறேன்... எல்லாம் பரிகார பூஜைகளுக்காகத்தான்...

இந்த முறை சென்றது திருநாகேஷ்வரம்.... அதுவும் ஞாயிறு ராகுகால பூஜைக்கு...  நாக கன்னிக்கு பாலபிஷேகம் செய்யணும்ன்னு (வேற யாரு., ஜோசியர் தான்) சொல்லிட்டதால, பெத்தவங்க அதை நம்பறதால... escape ஆகவே முடியல(நான் அவ்வளவு நல்ல பொண்ணு... பெத்தவங்க  சொன்னா அப்படியே கேப்பேன்...  ஆனா எப்ப கேப்பேன்னு தான் ... ஹி... ஹி.. )


ஏகப்பட்ட ஞாயிறு escape ஆகிட்டேன்.  இப்படியே போனா இவ இந்த ஜென்மத்துல போகமாட்டான்னு தெரிஞ்சுக்கிட்டவங்க, போன ஞாயிறு  கட்டியிழுக்காத குறையா கூட்டிட்டு போயிட்டாங்க... ஆனாலும் வடிவேலு மாதிரி வாண்டடா வந்த மாதிரியே ஸீன் போட்டுட்டே போனேன்... 

ரயிலேறி, பஸ் மாத்தி, அந்த புண்யஸ்தலத்தில் கால் வைக்க போறேன்... 

பாலபிஷேகமா... இப்படி வாங்க...  சீக்கிரமா வாங்க... பையை இங்க வைங்க.. ன்னு ஒரே நேரத்துல ஒரு நாலஞ்சு பேரு சுத்தி நின்னுகிட்டாங்க....  விட்டா கைய பிடிச்சு கூட்டிட்டு போயிடுவாங்க போல... இதேன்னடா இது கும்பகோணத்துல நமக்கு வந்த சோதனைன்னு நினைச்சு உள்ள போனா... பாலபிஷேகம் டோக்கன் ரூ. 100. ன்னு போட்ருந்த்து... அதுக்கு அடுத்தது  500 ருபாய் டோக்கன் தான் இருந்தது..  சரி 100 ரூபாய் தான் கம்மின்னு அந்த சீட்ட வாங்கினோம்..


4.30 - 6.00  தான் ராகு காலம்... அப்ப தான் பூஜை பண்ணுவோம்... எதுக்கும் நீங்க 2.30க்கே வந்துடுங்கன்னு சொன்னாங்க... சரி.. இன்னும் தான் டயம் இருக்கேன்னு பக்கத்துல இருக்கற உப்பிலியப்பன் கோவிலுக்கு போயிட்டு 2 மணிக்கு வந்தோம்...

அடடா... 2.30 வர சொன்னதுக்கு நாம 2 மணிக்கே (!!!!) வந்துட்டமே... பரவாயில்ல... முன்னாடியே போயி வரிசையில நின்னுட்டமின்னா சீக்கிரமா வந்தர்லாம்ன்னு நெனச்சி அங்க போனா....

அங்க ஒரு 500 பேர் ஏற்கனவே (!!!!) நின்னுட்டு இருந்தத பாத்து எனக்கு மயக்கமே வந்துருச்சு... 

இது ஆகற விஷயமில்லை... பேசாம 500 ரூபாய் சீட்டுக்கே போயிடலாம்ன்னு பாத்தா... அதுக்கும் ஒரு பெருங்கூட்டம் இருந்தது...இத்தனைக்கும் ஒரு சீட்டுக்கு ஒருத்தர தான் விடறாங்க..

சரி... நடக்கறது நடக்கட்டும் ன்னு 100 ரூபாய் கூட்டத்திலேயே ஜக்கியமானேன்...


நமக்கும் பின்னாடி வந்தவர்களின் ரியாக்ஷனயும், மற்ற பெண்களின் புடவைகள், அதன் நிறங்கள், வேலைப்பாடுகள்,  அவங்க வளையல், தோடு, பொட்டு டிசைன்கள், அவர்கள் குழந்தைகள்,(எத்தனை ஆண் குழந்தைகள், எத்தனை பெண் குழந்தைகள்), யார் யார் என்னேன்ன செல்போன் வெச்சிருக்காங்க, எத்தனை பேர் மொட்டை போட்டிருக்காங்கஎத்தனை பேர் கண்ணாடி போட்ருக்காங்க, என்ன சட்டை போட்ருக்காங்க, அதுல எத்தனை கட்டம் இருக்குது ன்னெல்லாம் லிஸ்ட் எடுத்து, மேலே வானம், கீழே பூமி, சைடுல தூண்கள்ன்னு எல்லாத்தையும் வேடிக்கை பாத்து அந்த இரண்டரை மணி நேரத்தை கடத்தினேன்...


மடை திறந்த வெள்ளம் எப்படியிருக்கும்ன்னு எனக்கு தெரியாது... ஆனா வாசல் திறந்த கூட்டம் எப்படியிருக்குன்னு நான் அனுபவப்பட்டேன்....  திபு திபுன்னு ஒடி, மோதி, இடித்து, உட்கார்ந்து,  நிமிர்ந்து பார்த்தால் எனக்கு முன்னாடி உட்காந்திருந்தவரின் தலை தான் தெரிந்தது...

இன்டு, இடுக்கில் எட்டி பார்த்து, மேலே தவ்வி,, கீழ குனிஞ்சி, ஒரு வழியா அபிஷேகம் பார்த்து, முடிவேயில்லாத இன்னும் இரண்டு வரிசைகளைக் (அபிஷேகப் பாலை வாங்க ஒன்று, தேங்காய் பழ பை வாங்க ஒன்று) கடந்து, மீண்டும் பஸ் ஏறி, ரயிலடிக்கு வந்தால் அங்க இருந்த நிறைய பேர் கையில அதே பாலபிஷேகப் பை (சேம் பிளட்...)

கண்ணாபின்னான்னு கூட்டம்... அதுல கஷ்டப்பட்டு ரயில் ஏறியது இன்னோரு பதிவிற்கானது...

பேசாம நம்ம சுற்றுலாத்துறை கும்பகோணத்தை பரிகார zone என்று அறிவித்து, சலுகை வகைகளில் நிலம் ஒதுக்கீடு செய்து, ரூம்கள், கழிப்பிடங்கள் கட்டித் தரலாம், கும்பகோணம் முழுவதும்...  மேலும் எல்லா ஊர்களில் இருந்தும் ரயில்களும், பஸ்களும் விடலாம்...

சுற்றாலாத்துறைக்கு நல்ல லாபம் தரும் ஊர் இது... ப்ரொப்சனலாக செய்தால்...

அப்படி செய்யாததினால் நஷ்ட்டம்  சுற்றாலாத்துறைக்கு,
எரிச்சல் நமக்கு,
லாபம் யாருக்கோ.....

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP