காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

உதிரிப்பூக்கள் – செப் 25, 2010

September 25, 2010

கப்பலேறிப்போயாச்சு….

வேற எதும் இல்ல.. நம்ம நாட்டோட மானம் தான்.. காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதில் ஊழல் செய்து மற்ற நாடுகளுக்கு முன் நம்மை தலைநிமிரமுடியாமல் செய்துவிட்டார்கள்…..


சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக பல வீர்ர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த மாதிரி போட்டியில் இருந்து எல்லோரும் விலகிவிட்டால் எல்லா விளையாட்டிலும் நாமே ஜெயித்து,(!!!) நாமே பரிசை அள்ளலாம் என்று எண்ணுகிறார்கள் போலும்…


என்ன கொடுமை சரவணா…?


தஞ்சை பெரிய கோவில் – 1000ஆவது ஆண்டு விழா…

ஆயிரம் ஆண்டுகள்.. அடேங்கப்பா… எண்ணவே மலைக்கிறது… இக்காலத்தில் கல்லையும், மண்ணையும் வைத்து ஒரு வீடு கட்டுவதற்கே கண்ணைக் கட்டுகிறதே… போக்குவரத்து வசதிகளோ, மற்ற வசதிகளோ இல்லாத அந்த காலத்திலேயே இவ்வளவு பெரிய கற்கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை கையெடுத்து வணங்கத்தோன்றுகிறது….


சரித்திரத்தில் சாகாவரம் பெற்று விட்ட அம்மன்ன்னை நினைத்தால் மேனி சிலிர்க்கிறது...


நம்மால் கட்டமுடிகிறதோ இல்லையோ, கோவிலை பராமரிக்கவாவது செய்வோம்...


விளம்பரங்கள்...

வோடஃபோன் – ப்ளாக்பெரிக்கான ’we are blackberry boys’ விளம்பரம் அருமையாக உள்ளது… எல்லோரும் உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை சொல்லும் விதம் அழகு…

இன்னும் பார்க்கவில்லை என்றால் அவசியம் பார்க்கவும்….



மொக்கை விளம்பரங்கள்….

பொம்மிஸ் ;நைட்டீஸ் விளம்பரம்…

ஒரு இல்லத்தரசியாய் என்னை உணரவைப்பது பொம்மிஸ் ;நைட்டீஸ் என்று caption வேறு….


இல்லத்தரசி முன்னால் வந்தால் சூடான விவாதமெல்லாம், மாறிவிடுகிறதாம்….

ஸ்… ப்பா…. முடியல….

Read more...

தகவல் மையம்…

September 17, 2010

"நடிகர் முரளி இறந்துவிட்டார்"


"பாடகி ஸ்வர்ணலதா இறப்பு"


"நேத்து சேலத்தில் நல்ல மழை"


"தங்கம் விலை இன்று கொஞ்சம் அதிகம்"


"இன்று முதல் கரண்ட் கட் நேரம் மாறுது.. "


"அந்த வண்டிக்காரனிடம் தக்காளி விலை அதிகம்."



--- அச்சச்சோ அடுப்பில் பால் வெச்சிருந்தேன்… பேச்சு சுவாரஸ்யத்தில் மறந்திட்டேன்... பொங்கிடப் போகுது… உன் குடத்தை எடுத்திட்டு என்னோட குடத்தை வை..

Read more...

என்னைப் பற்றி.... (தொடர் பதிவு)

September 15, 2010

இந்த தொடரை என்னை எழுத அழைத்த அமுதாவிற்கு நன்றி.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஸ்வர்ணரேக்கா ....

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என் பெயர் சத்யா... பதிவுகளை எழுத ஆரம்பிக்கையில் ஏதேனும் புனைப்பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது ஒரிசாவில் ஓர் நதி இருக்கிறது என்றும்... அது தங்க ரேகைகளைப் போல் ஜொலிப்பதால் அதற்க்கு ஸ்வர்ணரேகை என்று பெயர் என்றும் படித்தேன்.... உவமை பிடித்திருந்த்தால் அதையே பதிவுலகில் என் பெயராக்கிக் கொண்டேன்....


.3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....?

முதலில் 2, 3 பதிவுகள் ஆங்கிலத்தில் தான் போட்டேன்... பின்னர் igoogleல் தமிழ் கீபோர்ட் கிடைத்து தமிழில் எழுதினேன்.... அது மிகவும் சிரம்மாக இருந்ததால், வேறு என்ன செய்யலாம் என்று கூகுளாண்டவரிடம் கேட்டபோது தான் தமிழ்மணம், NHM Writer போன்றவற்றை அவர் அறிமுகம் செய்தார்....

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா.... என்னுடைய பதிவா...? என்ன கொடுமை சரவணா இது..?

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அவ்வப்போது பகிர்ந்தது உண்டு... பெரும் விளைவுகள் ஏதும் இல்லை...

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதுபோக்கு... பொழுதுபோக்கு... பொழுதுபோக்கு மட்டுமே. வேறேதற்கும் இல்லை....

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

2 பதிவுகள்.... அதில் ஒன்று தமிழ்...

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் வராது... எரிச்சல் வரும்... அதுவும் dark பின்னனியில் template வைத்திருப்பவர்களை பார்த்தால்.... அதற்காக அவர்களது பதிவை படிக்காமல் போகவேண்டுமே என்று தான் எரிச்சல்....

பொறாமை... கண்டிப்பாக உண்டு... அதுவும் போட்டோ கமெண்ட்ஸ் போடுபவர்களை பார்த்தால் கண்ணாபின்னாவென்று பொறாமை வரும்... குறிப்பா சுகுமார் சுவாமிநாதன் அவர்களை சொல்லனும்... (நானும் அந்த போட்டோக்களுக்கு கமெண்ட்ஸ் யோசிப்பேன்... ஆனா வராது.... அதான் அவ்ளோ fire....)...

அதே மாதிரி... கதைகள் எழுதறவங்கள பாத்தாலும் காதில புகை தான்...

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அது சுகுமார் சுவாமிநாதன் அவர்கள் தான்... பாராட்டி... இப்பதிவுலகில் எனக்கு முதலில் விருது கொடுத்து அவரே...

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

இதுவே போதுமே. இன்னும் என்னத்தை சொல்வது என்று தெரியவில்லை.இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்...
.1. சுகுமார் சுவாமிநாதன்
.2. கீதா ஆச்சல்
.3. அகல்விளக்கு

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP