காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

உள்ளூரில் வேலை பார்ப்பது கொலைக் குற்றமா???

July 23, 2009

நான் வாக்கிங் போகும்போது, தம்பதி சகிதமாக இருவர் வாக்கிங் வருவார்கள்... தினமும் பார்கிறோமே என்று குட் மார்னிங் சொல்ல ஆரம்பித்தேன்... வந்தது வில்லங்கம்... ரெண்டு நாள் கழித்து, எனக்கும் அவருக்குமான உரையாடல்...

அவர்: ஏம்மா, படிக்கிறியா..?
நான்: இல்ல சார்.. வேலை பாக்கறேன்..
அவர்: என்ன படிச்சிருக்க?
நான்: பி.இ...
அவர்: பி.இ ல?
நான்: ECE சார்..
அவர்: இங்க என்ன வேலை பாக்கற..?
நான்: Patent related வேலை...
அவர்: ஏன் இங்கயே இருக்க, சென்னை, Bangaloreன்னு போகலயா..?
நான்: இங்கயே வேலை இருக்கப்ப நான் ஏன் சார் போகணும்...?
அவர்: என் பையன், MCA படிச்சிட்டே சென்னைல, MNCல வேலை பாக்கறானேம்மா... நீ பி.இ.ECE படிச்சிட்டு ஏன் இங்கயே இருக்க..?
நான்: ?????
அவர்: இன்ட்ர்னெட்ல அப்ளை பண்ணிட்டே இரும்மா... கண்டிப்பா கிடைக்கும்...
நான்: ?????

உள்ளூரில் வேலை பார்த்தால், அது வேலை பார்க்கும் கணக்கில் சேர்த்தி இல்லை போலிருக்கிறது... உள்ளூரில் ஒருகம்பெனி இருந்து, அதில் எனக்கு வேலையும் இருக்கையில் சென்னை, Bangalore என்று எதற்காக போக வேண்டும் என்ற என் நியாயம் எடுபடவே இல்லை...!!!!

இதே நான் அவரிடம் 'சார், உங்க பையன் கிட்ட சொல்லி சென்னைல ஒரு reference வாங்கி தாங்க என்று சொல்லியிருந்தால்...' எங்கம்மா... அவனுக்கே ஒரு வருஷமா இன்கிரிமென்ட் இல்லை, recession வேற, ப்ராஜெக்ட் இல்லை என்றும், இன்ன பிற இத்தியாதிகளை கூறியும், தெரித்து ஓடியிருப்பார்....

ஆனால், என் ஆதங்கம் எல்லாம், என்னவோ என்னை கேள்வி கேக்கணும்னே, காலையில் எழுந்து வந்தது மாதிரி, இத்தனை கேள்வி கேட்ட அவர் கடைசிவரை என் பெயரை கேட்கவேயில்லை என்பதே....

Read more...

திருப்பதி - ஒரு Spiritual vacation

July 9, 2009

போன வாரம் திருப்பதி போயிருந்தேன்... அதை பத்தி எழுதணும்னா ஒரு பிளாக் ஃபுல்லா வேணும்... அதனால நான் ரசிச்ச சிலது மட்டும் இங்கே...

  • மலை ஏற்றப்போ (படி வழியா) மக்களின் நம்பிக்கைகளை, செய்கைகளை கண்டிப்பா சொல்லணும்.. ஒரு 5000 படி இருக்கும்.. எல்லா படிக்கும் மஞ்சளும், குங்குமமும் வெச்சுக்கிட்டே போவாங்க(எல்லாரும் இல்ல, வேண்டிக்கறவங்க மட்டும்)... படியில்லாத இடத்துல அங்க இருக்கற போஸ்ட் கம்பத்துக்கு கூட மஞ்சளும், குங்குமமும் வெச்சுக்கிட்டு போயிருப்பாங்க... அதே மாதிரி சிலர் எல்லா படிலயும் விளக்கு ஏத்திட்டு போவாங்க.. ஒருத்தர் படில சூடம் வெச்சுக்கிட்டு போக, இன்னொருத்தர் candleல அதை ஏத்திக்கிட்டே போவாங்க... மலை ஏறதே கஷ்டம், இதுல முட்டி போட்டு சிலர் ஏறுவாங்க...
  • மலை ஏற்றப்போ எனக்கு புடிச்ச இன்னோரு விசயம் தரிசன டிக்கெட் வாங்கற லய்னுக்கு பக்கத்துல இருக்கற கடைங்க... ஒரு 30 - 40 கடைங்க வரிசையா இருக்கும்.. எல்லா கடையும் ஒரே மாதிரி இருக்கும்.. ரெண்டே ரெண்டு கேஸ் அடுப்பு வெச்சுக்கிட்டு, அதுலயே மிளகாய் பஜ்ஜி, டீ, தோசை, இட்லி ன்னு பரபரப்பா வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருப்பாங்க...ஒட்டுமொத்த குடும்பமும் அந்த கடைல வேலை பாக்கும்.. இந்த கடைங்களை வேடிக்கை பாத்ததுல நேரம் போனதே தெரியல எனக்கு...
  • மேல் திருப்பதில (திருமலை) தேவஸ்தானம் சார்பா அன்னதானம் போடுவாங்க... பெரிய பெரிய ட்ராலில கொண்டு வந்து சுடச்சுட சாப்பாடு போடுவாங்க.. குழம்பு, ரசம் எல்லாமே ட்ராலில தான்...வெளி கடைல ஆர்டர் செஞ்சு வெய்ட் பண்ற நேரத்துல இங்க சுடச்சுட சாப்பாடு போட்டு ..இலைய இழுத்து நம்ம வெளிலயும் தள்ளிடுவாங்க...ருசியா இருக்குமோ இல்லியோ, பசிக்கு அப்படியே கப கபன்னு சாப்பாடு உள்ள போகும் பாருங்க... ஆஹா... அந்த சுவையே தனி தான் போங்க...
  • திருப்பதில தமிழ் படற பாடு இருக்கே... ரொம்ப கஷ்டங்க... அந்த ஊர் காரத்துக்கு கூட நம்ம கண்ல தண்ணி வராதுங்க ஆனா, தமிழ அவங்க படுத்தற பாட்ட பாத்தா கண்டிப்பா வருங்க... சில example..
    திருடர்கள் உள்ளவர் ஜாக்கிரதை
    இலவச வுணவு வழங்குமிடம்
  • சாமி பாத்துட்டு கீழ வரும்போது பஸ்ல வந்தோம்... கண்ணுக்கெட்டின வரை மனிதனின் காலடி படாத, பச்சை போர்வைகள்.... பாக்க கண் கோடி வேணும்.. ஒவ்வோரு திருப்பத்திலும், பஸ் டயர் கிரிச்சிடும் சத்தம் கூட அருமைங்க...
  • இன்னிக்கு போனோம் சாமி கும்பிட்டோம், நாளைக்கு திரும்பி வந்தோம்ன்னு இல்லாம, ட்ராவல்க்கு (போக, வர) ரெண்டு நாள், மலை ஏறதுக்கு ஒரு நாள், மேல் திருப்பதில ஒரு நாள், கீழ் திருப்பதில ஒரு நாள்ன்னு போய்ட்டு வந்தா, இந்த Spiritual vacation ஒரு அருமையான அனுபவங்க.... நம்ம battery அப்படியே ஃபுல் recharge தான்....

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP