காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

Tag...

August 29, 2009

Geetha and சிங்கக்குட்டி has tagged me...

Thank u for selecting & tagging me.

The Rules of the tags are:

1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag


The Tag:

1. A – Avatar (Blogger) Name / Original Name : Swarnarekha / Sathya

2. B – Best friend? : Bharathi (alias) Viji

3. C – Cake or Pie? :) (coz i don't like both)

4. D – Drink of choice? Sugarcane Juice

5. E – Essential item you use every day? My large tea cup

6. F – Favorite color? Light green

7. G – Gummy Bears Or Worms : Worms (Its quite interesting to note them)

8. H – Hometown? Trichy

9. I – Indulgence? : Pot Painiting

10. J – January or February? Jan (More holidays in that month)

11. K – Kids & their names? :)

12. L – Life is incomplete without? Pet animals

13. M – Marriage date? Xth YY, ZZZZ

14. N – Number of siblings? Nil

15. O – Oranges or Apples? Apples

16. P – Phobias/Fears? Confined places

17. Q – Quote for today? Those who stand for nothing fall for anything

18. R – Reason to smile? Nothing.. Since I believe that a reason is not necessary to smile.

19. S – Season? Spring

21. U – Unknown fact about me? Monoacting

22. V – Vegetable you don't like? Parangikaii (Don't know the English name... sry)

23. W – Worst habit? Nail bitting, abscent mindedness

24. X – X-rays you've had? For my wisdom teeth

25. Y – Your favorite food? Vazhaipoo, kothavarangai osili - a perfect match for curd rice.. mm.. (yummy)!!!

26. Z – Zodiac sign? Pisces

Read more...

யான் பெற்ற இன்பம் (விருது).. பெருக இவ்வுலகம் (இப்பதிவுலகம்)...

August 28, 2009


ஏதோ மனசுல தோணுனத பதிவுங்கற பேர்ல எழுதறப்போ... அத நாலு பேர் படிக்கறாங்க ங்கறதே சந்தோஷம்... அதுக்கும் மேல அவங்க நமக்கு விருது தராங்கன்னா... அது யான் பெற்ற இன்பம் ... அளவில்லா ஆனந்தம்....

இந்த பட்டர்ஃபிளை விருது சுகுமார் அண்ணன் தந்தது... பதிவுலகில் ஃபோட்டோக்களும், அதுக்கு சூப்பராய் கமெண்ட்ஸ்ம் போட்டு கலக்கும், இவரிடம் இருந்து விருது கிடைத்ததும், தலைநகரம் வடிவேலு பாணியில் 'ஹய், நானும் விருது வாங்கிட்டேன்.. நானும் விருது வாங்கிட்டேன்' என்று கத்த தோன்றியது....

இப்போது யான்பெற்ற இவ்விருதை , முறையே பதிவர்கள் சிங்கக்குட்டி, டக்ளஸ், அவர்களுக்கும் அளிக்கிறேன்... சிங்கக்குட்டியின் 'என்னை பற்றி' படித்து தான் அவரது பதிவுகளையும் படித்தேன்... அவரது 'பதிவுலகில் பத்து' அனைவரும் படிக்க வேண்டியது...

டக்ளஸ்சின் எங்க அக்காவுக்கு பொறந்த நாளு..!. படித்து விட்டு நான் சிரித்த சிரிப்பு... அடேயப்பா....

கீதாவின் அன்பு பரிசில் கிடைத்தது இந்த விருதுகள்...



இவ்விருதுகளை வண்ணத்துபூச்சியாருக்கும், மற்றும் கவிநயா விற்கும் அளிக்கிறேன்...

வண்ணத்துபூச்சியாரின் உள்ளார்ந்த, உண்மையான விமர்சனங்கள் எப்போதும் என் favorite லிஸ்ட்டில்

கவிநயாவின் என்னைப் பற்றி யும்,குட்டிக் கவிதைகளும் பிடிக்கும் என்றாலும், அவரது விழுங்குதல்... கவிதை தான் லிஸ்ட்டில் டாப்...

Read more...

குற்றாலம் - குறுகியதோர் ஆனால் நிறைவானதோர் பயணம்...

August 17, 2009

போன வாரம் குற்றாலம் போயிருந்தோம்... சீசன் முடியர நேரமா இருந்தாலும் நல்லா என்ஜாய் செஞ்சோம்... முதல்முறையா அருவியில குளிக்க போனதால, எப்படி போகணும்னு தெரியாம நேரா அருவியில தலையவிட்டு, மூச்சுத்திணறி தலைதெறிக்க ஓடி வந்து விட்டோம்... அப்பறம் ஓரமா நின்னு கொஞ்சம் கொஞ்சமா தலையவிட்டு நல்லா குளிச்சோம்... அருவித் தண்ணீரின் சுவையும், குளிர்ச்சியும்... அப்ப்ப்பா...

அந்தக்கால மன்னர்கள் சிவபக்தியில் சிறந்தவர்கள். அருவியெங்கும் சிவலிங்களை செதுக்கியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் குளிக்கும் பகுதிக்கு மேல், ஒரு சிவலிங்கம் நன்றாக மேலெழுந்து நிற்கிறது. அதில் அருவிநீர் ஒரு கோடு போல் வழிந்துகொண்டே இருக்கிறது...சிவனுக்கு எந்நேரமும் அபிஷேகம் தான். சீசன் நன்றாக இருக்கும் சமயங்களில் இந்த சிவலிங்கம் தெரியாது என்று நினைக்கிறேன்...

அங்கே கிடைக்கும் வித்தியாசமான பழங்களில் ரிம்டம் என்று ஒரு பழம் உண்டு. ரிம்டம் பழம் என்றோ, ரம்டம் பழம் என்றோ சொன்னார்கள். நமக்குத்தான் பெயர் வைப்பதில் அலாதி இஷ்ட்டமாச்சே... (நாங்கள் மற்றவர்களுக்கு வைத்த பெயரை இங்கே காணவும்.) அந்த பழம் முள்ளம்பன்றியை போல் இருந்த்தால் அதற்கு முள்ளம்பன்றி பழம் என்று பெயர் வைத்தோம். அந்த முள்ளம்பன்றி தோலை நீக்கினால், உள்ளே ஜெல்லி போல் இருக்கிறது. குற்றாலத்தில் விளையும் பழமாச்சே... அந்த ஜெல்லியும் குளிர்ச்சியாகவே இருக்கிறது.

குற்றாலநாதர் ஆலயம் - அந்தக்கால மன்னர்களின் சிவபக்திக்கு இன்னோர் சாட்சி. அங்கே ஸ்தல விருட்சமாய் ஒரு பலாமரம் இருக்கிறது. அதற்கு குறும்பலாநாதர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த பலாமரம் ஒரு அருவியின் உயரத்திற்கு இருக்கிறது. அந்த பலாமரத்தின் அடியில் நின்றால் அருவியின் சப்தம் மிக துல்லியமாய் கேட்கிறது...

அதென்னவோ வர வர நம்ம பேட்டரி அடிக்கடி ரீசார்ஜ் ஆகிறது. அதிலும் குற்றாலமும் பாபநாசமும் சென்று வந்ததில் பேட்டரி ஃபுல் ரீசார்ஜ் ஆகிவிட்டது. பாபநாசம் பற்றி இன்னோர் பதிவில் சொல்கிறேன்...

Read more...

காலச்சக்கரம்...

August 4, 2009

திங்கள் கிழமை காலை

"அடடா!!! இந்த பை பிஞ்சிருக்கே... அவசரத்துல தான் எல்லாமே ஞாபகம் வருது... ஈவ்னிங் வரும்போது கண்டிப்பா தைச்சுக்கிட்டு வரணும்..."

திங்கள் கிழமை மாலை

"இன்னிக்கு பாத்து ரொம்ப லேட்டாயிடுச்சு... சரி..பையை அப்பறம் பார்ப்போம்..."

புதன் கிழமை

"மனுசன் அவசரத்துக்கு யூஸ் பண்ணறதுக்கு ஒரு கர்ச்சீப் இருக்கா இந்த வீட்ல... சே..."

"இந்த சண்டேயாச்சும் கடைக்கு போய் வாங்கிட்டு வரணும்..."

வெள்ளிக்கிழமை

"போன மாசம் வாங்கிட்டு வந்த டிரஸ் தைக்ககுடுக்கவே இல்லையே... மறந்தே போச்சுது... சாயந்தரம் டைம் இருக்காதே.. சரி..ஞாயிற்று கிழமை போவோம்..."

ஞாயிற்றுக்கிழமை

"அப்பாடா!! இன்னிக்கு லீவ்... சண்டே புஃல்டே என்ஜாய்மெண்ட் தான்... டிவில நல்ல படம் இருக்கான்னு பேப்பர் வந்ததும் பாக்கணும்... மதியம் சாப்டுட்டு, அப்படியே ஒரு தூக்கம் போட்டு, நம்ம பேட்டரிய ரீசார்ஜ் பண்ணிப்போம்...."

"வீட்ட விட்டு வெளிய காலெடுத்து வெக்ககூடாது... டெய்லி ஒரே அலைச்சல் தான்.. இன்னிக்காவது வீட்ல இருப்போம்..."

திங்கள் கிழமை

"அடச்சே!!! டிரஸ் தைக்ககுடுக்கவே இல்லையே..!!!"

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP