சித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்
October 19, 2011
| இது தான் ஆரம்பம் |
| மலைத் தொடர் |
| இது தான் ஆரம்பம் |
| மலைத் தொடர் |
நோ.. இது முடிஞ்சு போன கோலங்கள் தொடரை பத்தின பதிவு இல்லை..
நிஜமான கோலங்கள் பத்தின பதிவு... ஏன்னா இது மார்கழி மாசமாச்சே.. (மார்கழி மாசம் முடியவே போகுதேன்னு ல்லாம் சொல்லப்படாது...)
மார்கழின்னாலே கோலம் தான்.. அதுவும் பெரிய பெரிய கோலம். நெளி கோலமோ, design கோலமோ, இல்ல ரங்கோலியோ.. எல்லாம் பெருசு பெருசா தான் போடணும்... அதுவும் design கோலம், ரங்கோலின்னா ஜாலிதான்.. அப்பத்தான் கலர் கலரா போடலாம். நெளி கோலம் கொஞ்சம் கஷ்ட்டம். ஏன்னா, ஒரு புள்ளி தப்பா போனாலும் சரியா வராது.. சட்டுன்னு போடறதுக்கு ரங்கோலி தான் என் சாய்ஸ்....
இதுல ரோம்ப இம்பார்ட்டன்ட் என்னன்னா.. கலர் பொடி மிக்ஸ் பண்றது தான்... ஏன்னா கடையில வாங்கற பொடி தூவறதுக்கு சரியா இருக்காது.. ஸோ.. மணல் கொஞ்சம், கோல மாவு கொஞ்சம்ன்னு மிக்ஸ் பண்ணா கரெக்ட்டா வரும்.. அப்படி மிக்ஸ் பண்றப்போ, இந்த அடர் கலர் மாற்றது பாக்க சூப்பராயிருக்கும்...
layout design போட்டதுக்கு அப்பறம், காம்பினேஷன் பாத்து கலர் குடுத்து, கொஞ்சம் கூட பிசிறில்லாம outline போட்டதுக்கு அப்பறம் பாத்தா, நாம நினைச்ச டிசைன் வந்திருக்கும்.. அப்ப அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.. இப்படி finishingல்லாம் நல்லா இருந்தாலும், opening தான் நல்லா இருக்காது ...
ஏன்னா கோலம் போட காலைல நடுராத்திரி 4.30 க்கே எந்திரிக்கணும்.. அதாவது விடியக் காலைல 5 மணிக்கே கோலம் போட ஆரம்பிச்சுடணும் ... 5.30 மணிக்கு போட்டால் கொசுக்கள் படையெடுத்து வந்து நம்மை கடிக்கும் அபாயம் இருப்பதாலும், 6 மணிக்கு போட்டால் வீட்டில் உள்ளோர் நம்மையே கடித்துக் குதறிவிடும் அபாயம் இருப்பதாலும் வேறு வழியே இல்லை...
இருந்தாலும் நான் ஒரு நாள் கோலம் போட்டால், வருடம் முழுவதும் போட்டதாய் அர்த்தம்ன்னு சொல்லி, இன்னிக்கி ஒரு நாள் நான் போட்ட கோலம் தான் இது..
இது போன வருஷம் போட்டது... (போட்டோவுக்கு போஸ்ல்லாம் இல்ல.. நானே போட்டது... )
நான் இன்னிக்கு ஒரு நாள் கஷ்ட்டப்பட்டு கோலம் போட்டறேன், மீதி நாள்ல்லாம் (வருஷம் முழுக்க) அதே மாதிரி போட்டுடு என்று பெருந்தன்மையாக அம்மாவிடம் சொல்லிவிட்டேன்....
எப்பூடி...!!!!!
சீனு என்று ஒரு நாய்க்குட்டி வளர்க்க ஆரம்பித்த பிறகு, என்னுடைய எண்ணங்களில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது... சீனுவிற்கு முன், சீனுவிற்கு பின்... என்ற என் எண்ணங்கள் இங்கே..
(ப்ளாக்ன்னு இருந்தாலும் இருந்துச்சு... அவங்க அவங்க வீட்டு நாய்க்குட்டி பத்தில்லாம் எழுதறாங்கன்னு நினைக்கறவங்க இதைஅவசியம் படிங்க.. அப்படில்லாம்.. ஒண்ணும் நினைக்காதவங்க.. அப்படியே கண்டினியு பண்ணுங்க...)
சீனுவிற்கு முன்... (சீ.மு)
போன வாரம் குற்றாலம் போயிருந்தோம்... சீசன் முடியர நேரமா இருந்தாலும் நல்லா என்ஜாய் செஞ்சோம்... முதல்முறையா அருவியில குளிக்க போனதால, எப்படி போகணும்னு தெரியாம நேரா அருவியில தலையவிட்டு, மூச்சுத்திணறி தலைதெறிக்க ஓடி வந்து விட்டோம்... அப்பறம் ஓரமா நின்னு கொஞ்சம் கொஞ்சமா தலையவிட்டு நல்லா குளிச்சோம்... அருவித் தண்ணீரின் சுவையும், குளிர்ச்சியும்... அப்ப்ப்பா...
அந்தக்கால மன்னர்கள் சிவபக்தியில் சிறந்தவர்கள். அருவியெங்கும் சிவலிங்களை செதுக்கியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் குளிக்கும் பகுதிக்கு மேல், ஒரு சிவலிங்கம் நன்றாக மேலெழுந்து நிற்கிறது. அதில் அருவிநீர் ஒரு கோடு போல் வழிந்துகொண்டே இருக்கிறது...சிவனுக்கு எந்நேரமும் அபிஷேகம் தான். சீசன் நன்றாக இருக்கும் சமயங்களில் இந்த சிவலிங்கம் தெரியாது என்று நினைக்கிறேன்...
அங்கே கிடைக்கும் வித்தியாசமான பழங்களில் ரிம்டம் என்று ஒரு பழம் உண்டு. ரிம்டம் பழம் என்றோ, ரம்டம் பழம் என்றோ சொன்னார்கள். நமக்குத்தான் பெயர் வைப்பதில் அலாதி இஷ்ட்டமாச்சே... (நாங்கள் மற்றவர்களுக்கு வைத்த பெயரை இங்கே காணவும்.) அந்த பழம் முள்ளம்பன்றியை போல் இருந்த்தால் அதற்கு முள்ளம்பன்றி பழம் என்று பெயர் வைத்தோம். அந்த முள்ளம்பன்றி தோலை நீக்கினால், உள்ளே ஜெல்லி போல் இருக்கிறது. குற்றாலத்தில் விளையும் பழமாச்சே... அந்த ஜெல்லியும் குளிர்ச்சியாகவே இருக்கிறது.
குற்றாலநாதர் ஆலயம் - அந்தக்கால மன்னர்களின் சிவபக்திக்கு இன்னோர் சாட்சி. அங்கே ஸ்தல விருட்சமாய் ஒரு பலாமரம் இருக்கிறது. அதற்கு குறும்பலாநாதர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த பலாமரம் ஒரு அருவியின் உயரத்திற்கு இருக்கிறது. அந்த பலாமரத்தின் அடியில் நின்றால் அருவியின் சப்தம் மிக துல்லியமாய் கேட்கிறது...
அதென்னவோ வர வர நம்ம பேட்டரி அடிக்கடி ரீசார்ஜ் ஆகிறது. அதிலும் குற்றாலமும் பாபநாசமும் சென்று வந்ததில் பேட்டரி ஃபுல் ரீசார்ஜ் ஆகிவிட்டது. பாபநாசம் பற்றி இன்னோர் பதிவில் சொல்கிறேன்...
போன வாரம் திருப்பதி போயிருந்தேன்... அதை பத்தி எழுதணும்னா ஒரு பிளாக் ஃபுல்லா வேணும்... அதனால நான் ரசிச்ச சிலது மட்டும் இங்கே...
சிட்டுக் குருவி... தற்போது அதிகம் காணக்கிடைக்காத, ஆனால் பாக்க பாக்க பரவசமூட்டும் ஒரு சின்ன உயிர்... நான் வாக்கிங் போறப்போ... ஒரு இருவது முப்பது குருவிங்க ஒன்னா கரண்ட் கம்பில உக்காந்து இருக்கும்... திடிர்னு எல்லாம் ஒன்னா கிளம்பி ஒரு வட்டம் அடிக்கும்... அப்பறம் திரும்பி வந்து அதே கம்பில உக்காந்துக்கும்.. வட்டம் அடிக்கிறதுன்னா சும்மா இல்லிங்க... விர்ன்னு நேரா போகும்.... அப்பறம் அப்படியே கீழ விழறாப்ல விழும்... அய்யோ.. விழுதேன்னு நினைக்கறப்போ... திருப்பி விர்ன்னு போகும்... இப்படி ஒரு நாலஞ்சு தரம் போகும்... சில சமயம் ஒரொர் குருவிங்க கூட்டத்தில பறக்காம கம்பிலயே உக்காந்துக்கும்.. அப்பறம் அடுத்த ரவுண்ட்ல திரும்பி சேந்துக்கும்...
உயர இருக்கும் கம்பில உக்காந்து இருக்கறதுனாலயும், ரொம்ப சின்ன சைஸா இருக்கறதுனாலயும் குட்டி குட்டி பூச்சிங்க மாதிரி தெரியும்... ஆனா இதை பாத்துட்டா அன்னைக்கு நாள் உற்சாகமாயிடுங்க...
எல்லோரும் வெய்ட் குறைக்கறதுக்கு, அன்றைய நாளை திட்டமிடறதுக்குன்னு வாக்கிங் போறாங்க... ஆனா... எனக்கென்னவோ இந்த சிட்டுக் குருவிகளின் flying ரேஸை பாக்கறதுக்காகவே டெய்லி வாக்கிங் போணும்னு தோணுது...
டேய் சீனு.. எங்கடா இருக்க.. வா வந்து பாலக்குடி... இப்படி என் அம்மா அழைப்பது சத்தியமா என்னை இல்லை.... எங்க நாய்க்குட்டிய... Labrador, Alsation, ராஜபாளையம் போல breedகளை சேர்ந்ததல்ல எங்கள் நாய்க்குட்டி... நாட்டு நாய் என்று சொல்லப்படும் சாதாரண வகையைச் சேர்ந்தது....
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்... கூப்பிடாமலும் வந்து நம்மை நக்கிவிட்டு , செல்லம் கொஞ்சிவிட்டு போவான்.... இரு கால்களிலும் துணியை பிடித்துக் கொண்டு, வாயினால் கிழிப்பது... 'சர்...' என்ற சப்தத்தோடு துணி கிழிவதை கேட்டு மீண்டும் கிழிப்பது.... நம்மிடம் துணியை தந்து விளையாட அழைப்பது...சுற்றி சுற்றி துரத்தினால்... tableக்கு கீழும், sofaக்கு அடியிலும் ஒளிந்து கொள்வது.... நாம் அந்தண்டை நகர்ந்தால் நம்மை நோக்கி ஓடிவருவது... சப்பனங்கால் போட்டு உட்கார்ந்தவுடன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டு நம்மை சாப்பிடவிடாமல் செய்வது....படுக்கை விரித்தால் நமக்கு முன் ஏறி படுத்துக்கொள்வது... பால் வாங்கவோ, அல்லது கீரை வாங்கவோ படி இறங்கினால், உடனே தானும் வருவது... வெளியில் இருந்து கொண்டு வரும் பைகளை மோப்பம் பிடித்து, அதைபிடித்து தொங்கிக் கொண்டே வருவது... என்று சீனுவின் சேட்டைகள் நீள்கின்றன....
Retired ஆனபின், தனிமையில் தவித்துக்கொண்டிருந்த என் அப்பாவிற்க்கு இப்போதெல்லாம். நன்றாக பொழுது போகிறது. எல்லாம் சீனுவின் கைங்கர்யம்....
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள்... ஆனால் சில விஷயங்களில் குழந்தையும் நாய்க்குட்டியும் ஒன்று என்றே எனக்கு தோன்றுகிறது...தெய்வத்தையும் நாய்க்குட்டியையும் ஒப்பிடவில்லை நான்..
ஆனால் ஒரு குழந்தையின் இருப்பு எப்படி வீட்டில்ஒரு சூமூகமான நிலையைத் தருகிறதோ... அதேபோல் நாய்க்குட்டியும் வீட்டிற்க்குள் சமாதானத்தையும் உயிரோட்டத்தையும் கொண்டு வருகிறது...
பிள்ளைகளை வெளிநாட்டிலோ, வெளிமாநிலங்களிலோ வேலைக்கு அனுப்பிவிட்டு , தனிமையில் இருக்கும் பெற்றோர்க்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாகத் தாருங்கள்... முதலில் கடுமையாக ஆட்சேபிப்பார்கள்... ஒரு மாதம் கழித்து கேட்டுப்பாருங்கள்... தனிமை என்றால் என்னவென்று கேட்ப்பார்கள்....
No doubt. U read it correctly. Its not body language, which u r exhibiting. Rather it is your body's language.
Is it amazing to u.? Haven't you heard your own body's language...
You may be unaware of your body's language... because it wont weep like a child, it wont pew like a puppy. But, it sneezes, it coughs, it dries and eventually it pains...
S. these are the most common body's language which we identify them as symptoms. Actually thro' these language (symptoms), your body speaks to you, it is crying like a baby to show you that there is a malfunction in your system.
Are you the kind of person who swallow tablets for headache, running nose, cough without Doctor's consultation. Then you are ignoring ur body's language. Not only that, you are suppressing it too.
In the first scene of 'Davinci Code' , the most popular novel by Dan Brown , the albino, while killing the Jacques Sauniere says that "Pain is good". Yes, what he said is correct. Pain is good. One and only thro' the pain, we came to know about the body malfunctioning. You may think that "Regular Cycle disturbance leads to pain. If there is no disturbance, then there is no pain. NOPE u r wrong. A swelling without pain is more harmful than a swell with pain"
It may be swelling, coughing, back pain or headache. Don't rush to a doctor when you experience that. Just understand the language and take care of yourself. Analyse what you did today or check out your own behaviour.
Find out the reasons and try to avoid that.
If its a head ache, then drink more water, avoid TV, take a walk in the evening breeze and grab a sound sleep. But dont put a tablet and indulge in sleep.
If its a running nose, enjoy that and leave that dont take tablets. After a week or four days it will be automatically finished.
Then take your own time in bathing. Enjoy that. Dont finish a shower in a hurry - burry. Dont always sit in a closet. Be with nature whenever u can.
Get well with your own body's language put a 'no entry' to your doctor...
© Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008
Back to TOP