காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

வித்தியாசம்

September 25, 2012


ஏங்க..,”

"எனக்கு நம்ம சுபாவை நினைச்சா சந்தோஷமா இருக்குங்க…”

என்ன திடீர்ன்னுஎப்ப பாரு அவளைத் திட்டிக்கிட்டு தானே இருப்ப நீ.."

“ஆமா… ஒரு வேலை கூட செய்யறது இல்லைன்னு திட்டுறேன் தான். ஆனா பாருங்க, நேத்து நாம ஊருக்கு போயிட்டோமே, பொண்ணா பொறுப்பா சமைச்சு எடுத்துக்கிட்டு, தம்பிக்கும் போட்டுக் குடுத்திட்டு, பாத்திரமெல்லாம் தேய்ச்சு கழுவி வைச்சிட்டு, வீடு கூட்டி சுத்தம் செஞ்சிட்டு காலேஜ் போயிருக்கா அதான்"

வருஷம் பூராவுமா வேலை செய்யறா உம் பொண்ணுஎன்னமோ தெரியாத்தனமா ஒரு நாள் வேலை செஞ்சிட்டாதுக்கு போய் சந்தோஷப்படுறியே…”

இல்லைங்கஅவளுக்கு ஒண்ணும் செய்யத் தெரியலையோன்னு நினைச்சேன். கல்யாணம், குடும்பம்ன்னு ஆகறப்போ எப்படி சமாளிப்பாளோன்னு கவலைபட்டுக்கிட்டு இருந்தேன்ஆனா அப்படி இல்லசெய்யத் தெரியுது, அவளுக்குஆனா செய்யறதில்லை.. அவ்வளவு தான்… 

"அவ இங்க வேலை செய்யணுமின்னு இல்லதெரிஞ்சுக்கிட்டா போதும். கல்யாணம், குடும்பம்ன்னு ஆனா பொண்ணுங்களுக்கு ஓய்வு ஏது…"

"பரவாயில்லை நம்ம சுபாஅவளை பத்தி எனக்கு தைரியம் வந்திருச்சு..”

நேத்து அவ வெச்சிருந்த சாம்பார் கூட நல்லாதான் இருந்துச்சுகொஞ்சம் உப்பு பத்தலை அவ்வளவு தான்…”  
----------------------
"என்னடா நினைச்சிக்கிட்டு இருக்கா உன் பொண்டாட்டி..?"

"ஏன்ம்மா?"

இன்னிக்கு பாத்திரமே தேய்க்காம போயிருக்காஎல்லாத்தையும் நான் தேய்ச்சேன் இன்னிக்கு…”

"அட…, இன்னிக்கு ஆபீஸ்க்கு கொஞ்சம் சீக்கிரம் போகணுமின்னு சொல்லிட்டு இருந்தாம்மா சுபத்ரா, அதனால விட்டுட்டு போயிருப்பாளா இருக்கும்."

"அப்படி சீக்கிரம் கிளம்பணுமின்னு நினைக்கறவ காலையில நேரத்துல எந்திரிச்சு எல்லா வேலையும் முடிச்சிட்டு தானேடா போயிருக்கணும்.."

"இன்னிக்கு ஒரு நாள் வந்துதான் தேய்ச்சிக்கட்டுமே ம்மா!!!"

"அது எப்படிடா, ஒரு நாள்ன்னாலும் செய்யாம போகலாம்தினமும் சாப்பிடல, குளிக்கல…”

வீட்டுல வேலை ஜாஸ்த்தின்னு ஆபீஸீக்கு லேட்டா போவாளாவெறுமனே குவிச்சு வெச்சிட்டு போயிட்டா எந்த வேலைக்காரி வந்து செய்வான்னு நினைச்சுக்கிட்டு போயிருக்கா அவ…”

"அப்படியாவது நல்லா சமைக்கவாவது செய்யறாளா, ஏதோ ஒண்ணாவது உருப்படியா செய்யறாளேன்னு சொல்றதுக்கு. அதுவும் இல்லை, நேத்து சாம்பார் ன்னு ஒண்ணு வைச்சிருந்தாளே உப்பே போடாம… இந்த அழகுக்கு பாத்திரம் தேய்க்க கூட நேரமில்லையாம்மா அவளுக்கு.." 

Read more...

காதலும் கத்திரிக்காயும்

December 3, 2010

‘சுபத்ராம்மா…’
‘பேஃன் ரிப்பேர் பண்ணியாச்சும்மா’
‘செக் பண்ணிக்கோங்க’
‘இதோ வர்றேன்… ப்பா..’
‘சீக்கிரம்மா.. இன்னும் ரெண்டு வீட்டுக்கு போகணும்மா.. நீங்க அவசரமா சரி செய்யணும்ன்னு கூப்பட்டதால தான் வந்தேன்..’
‘இதோ ஆச்சுப்பா… ஐயா இன்னிக்கு ஊர்லிருந்து வந்துருவாரு.. அதான் அவசரமா சரி செய்ய சொன்னேன். சரி நல்லா ஒடுது.. ஓகேப்பா..’
‘சரி வரேம்மா…’


அப்பா… பேஃன் ரிப்பேர் பாத்தாச்சு.. பாவம்… ஒரு வாரம் ஆபிஸ் விஷயமா டூர் போயிட்டு இன்னைக்குத்தான் அவர் வர்றார்.. வந்ததும் கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா டிவி பாப்பாரு.. அப்ப போயி பேஃன் ஓடலன்னா.. அதான் எப்படியோ ஆளைக் கூப்பிட்டு சரி செஞ்சாச்சு…

ஐய்யயோ!!! அடுப்புல தீயுதே!!!

வெண்டைக்காய் பொறியல்ன்னா ரொம்ப இஷ்ட்டம் அவருக்கு.. ஆனா இப்படி சட்டிய தீச்சிட்டமே… சரி வேற பாத்திரத்தில் செய்வோம்..
அப்படியே கொஞ்சம் கொள்ளு ரசமும் வைப்போம்.. அவருக்கும் பெரியவ திவ்யாவுக்கும் புடிச்ச ஐட்டம்..

பாவம் மனுசன்… ஒரு வாரமா ஹோட்டல் சாப்பாடு சாப்ட்டு அலுத்து போயிருப்பாரு.. ஒரு புடி பிடிக்கறமாதிரி செஞ்சு வெக்கணும்..

--------
சீக்கிரம் சமையலை முடிச்சிட்டு வீட்டை க்ளீன் செஞ்சு
வைக்கணும்.. நியூஸ் பேப்பர்ல்லாம் எடுத்து வெக்கணும்.. ஒரு வாரத்துக்கும் சேர்த்து ஏதோ எக்ஸாமுக்கு படிக்கறாப்ல பேப்பர படி படின்னு படிப்பாரு..

வீட்ல பேப்பர் படிக்கறத தவிர வேற ஒண்ணும் செய்யறதில்லைன்னாலும், இன்னிக்கு அவர ஒண்ணுமே சொல்லக்கூடாது.. 

நமக்கும் வாய் கொஞ்சம் நீளம் தான்.. டக்குன்னு டக்குன்னு சண்டை போடறேன்.. பாவம் அவரு..



ரெண்டு மணிக்கு வரேன்னு சொன்னாரே.. மணி மூன்றை ஆச்சே.. இன்னும் காணமே…
போஃன் பண்ணி பாப்பமா…
வெளியில போன மனுசன் வீடு வந்து சேர்ற வரைக்கும் பயமாத்தான் இருக்கு.. தினமும் நியூஸ் பேப்பர் பாத்தாலே டென்ஷனாகுது…
காலிங்பெல் சப்தம் கேட்குதே.. வந்துட்டாரு போல..

‘சுபா’
‘ஏங்க… இவ்வளவு லேட்டு..?’
‘பஸ் கிடைக்கலம்மா…’
'வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதாங்க?'
'ம்.. ஆச்சும்மா'
‘இந்தா.. இதை உள்ள வை..’
‘என்னங்க இது…?’
பிள்ளைங்களுக்கு ஸ்நாக்ஸா?
‘இல்லை மா.. வர்ற வழியில கத்திரிக்காய் வித்துட்டு இருந்தான்.. நல்லாயிருந்துச்சு.. அதான் ஒரு கிலோ வாங்கினேன்’
‘ஏங்க.. எதுக்கு இப்ப கத்திரிக்காய் வாங்கிட்டு வந்திருக்கீங்க.. ?’

‘ஏற்கனவே பிஃரிட்ஜ்ல அரை கிலோ கத்திரிக்காய் இருக்கு.. ஒரு வாரம் கழிச்சு வர்றீங்களே!!! பிள்ளைங்களுக்கு சாப்பிட ஒண்ணும் வாங்கிட்டு வராம… இத வாங்கிட்டு வந்திருக்கீங்களே!!!’
‘எப்படித்தான், இப்படி ஏற்கனவே இருக்கற காயா கரெக்ட்டா பாத்து வாங்கிட்டு வருவீங்களோ!!!!’
‘கொஞ்சமாச்சும்………………….’
‘---------------------------------------‘
‘------------------------------------------------------------------------------‘
‘-----------------------------------------------------------------------------------'
(Thanks to Ifood.tv for the image)

Read more...

பாராட்டு... (சர்வேசன் 500 - "நச்"னு ஒரு கதை - 2009 -போட்டிக்கு)

November 10, 2009

'ஸ்ரீமதி...'
'ஸ்ரீ..மதி...'
'ஏய்... ஸ்ரீமதி...'
'ப்ச்.. என்னம்மா...?'
'இங்கதான் இருக்கியா... நைட்டுக்கு என்ன செய்யட்டும்.. இட்லியா, சப்பாத்தியா..?'
'எதுனா செய்யி... '

என்ன ஆச்சு இவளுக்கு... நைட்டுக்கு என்ன செய்யட்டும். ன்னு கேட்டா... நாம கேட்கற ரெண்டும் இல்லாம வேற எதுனா சொல்லுவா.... இப்ப என்னடான்னா... எதுனா செய்யின்னு சொல்றாளே...

ஸ்ரீமதி - கவிதா, ராகவனின் செல்ல மகள்.. அப்பாவிடம் ஒட்டுதல் ஜாஸ்தி.. ராகவனுக்கும் தன் செல்ல மகளிடம் பிடிப்பு அதிகம்.. அவ அவங்கப்பா செல்லம் என்று சந்தோஷமாக சலித்துக்கொள்பவள் கவிதா.. அப்பா திட்டினாலோ, ஏதும் சொல்லிவிட்டாலோ ஸ்ரீமதி முகத்தை தூக்கிவைத்துக்கொள்வாள்.. அம்மா சொன்னாலோ... 'போம்மா.. நீ... வேற வேலையில்லை உனக்கு' என்று சொல்லிவிட்டு ஓடுவாள்...

'என்னடா ஆச்சு.. ஃப்ரண்ட்ஸ் கூட சண்டையா... ஏன் உம்முன்னு இருக்க...'

'ஒண்ணுமில்ல மா...'

சரி.. கேட்டா எப்படியும் சொல்லமாட்டா.. கொஞ்ச நேரம் கழிச்சு அவளே சொல்லுவா.. என்று எண்ணியபடி சமையலில் மூழ்கினாள் கவிதா..

'ஸ்ரீ.. வா.. சூடா வந்து சாப்பிடு.. வா.. வா' - கவிதா அழைக்க.. வழக்கம்போல் கிச்சன் திட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, சாப்பிட ஆரம்பித்தவள்.. ரெண்டு வாய் வைத்ததும் பட பட வென்று சொல்ல ஆரம்பித்தாள்..

'பாரும்மா இந்த அப்பாவ.. நீ நேத்து காலைல அத்தை வீட்டுக்கு போய்ட்டீல்ல.. நானும்... ஞாயித்துக்கிழமை நமக்கு லீவாச்சே... நாமளே செய்வோம்ன்னு ..
மதியம், ஃபரைடு ரைஸ், சாலட்.., நைட்டுக்கு - ரவா தோசை, அதுக்கு தொட்டுக்க தக்காளி சட்னி, தேங்காய் சட்னி ன்னு பாத்து பாத்து செஞ்சம்மா.. ஆனா இந்த அப்பா... எல்லாத்தையும் சாப்பிட்டு நல்லாவே இல்லைன்னு என்ன திட்டறாரும்மா..' என்று குற்றபத்திரிக்கை வாசித்தாள்

அவராவது.. இவளை திட்டறதாவது, என்று நினைத்துக்கொண்டவளாய் ...

'கஷ்டப்பட்டு செஞ்ச பிள்ளைய பாராட்டாம திட்டறாரா.. உங்க அப்பா.. வரட்டும் பாத்துக்கலாம்.. நீ போய் படிடா..' என்று ஆறுதல் படுத்தினாள்..

சற்று நேரம் கழித்து வந்த ராகவனிடம் கவிதா... 'ஏங்க இன்னிக்கு இவ்ளோ லேட்டு...சரி சரி.. கை கழுவிட்டு வாங்க.. சாப்பிடலாம்' என்று அழைத்தாள்..

'ஆமா.. இன்னிக்கு என்ன மெனு... உப்பு ஒரப்பு இல்லாம ஒரு குழம்பு, தீஞ்சுபோன தோசைன்னு எதுனா செஞ்சிருப்பியே... நீயெல்லாம் என்ன சமைக்கற.. நேத்து எம் பொண்ணு செஞ்சா பாரு சட்னியும், தோசையும்... ம்... அதுவல்லவோ சுவை... அதுவல்லவோ கை மணம்..'

'ம்.. இதென்ன புதுக்கதையா இருக்கு... அவ செஞ்சது நல்லாயில்லன்னு நீங்க திட்டினதா இல்ல சொல்லிக்கிட்டு இருந்தா... '

'ஸ்ரீ. இங்க வந்து உங்க அப்பாவ என்னன்னு கேளு' என்று உள்ளறையில் இருந்த ஸ்ரீமதியைக் கூப்பிட..

'டேய்.. நான் எங்கடா உன்ன திட்டினேன்... '

'பின்ன.. நான் செஞ்சதையெல்லாம் .. அம்மா செய்யற மாதிரியே இருக்குன்னு சொன்னியேப்பா... உனக்குத்தான் அம்மா செய்யறதே பிடிக்காதே...

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP