காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

கோலங்கள்...

December 30, 2009

நோ.. இது முடிஞ்சு போன கோலங்கள் தொடரை பத்தின பதிவு இல்லை..

நிஜமான கோலங்கள் பத்தின பதிவு... ஏன்னா இது மார்கழி மாசமாச்சே.. (மார்கழி மாசம் முடியவே போகுதேன்னு ல்லாம் சொல்லப்படாது...)

மார்கழின்னாலே கோலம் தான்.. அதுவும் பெரிய பெரிய கோலம். நெளி கோலமோ, design கோலமோ, இல்ல ரங்கோலியோ.. எல்லாம் பெருசு பெருசா தான் போடணும்... அதுவும் design கோலம், ரங்கோலின்னா ஜாலிதான்.. அப்பத்தான் கலர் கலரா போடலாம். நெளி கோலம் கொஞ்சம் கஷ்ட்டம். ஏன்னா, ஒரு புள்ளி தப்பா போனாலும் சரியா வராது.. சட்டுன்னு போடறதுக்கு ரங்கோலி தான் என் சாய்ஸ்....

இதுல ரோம்ப இம்பார்ட்டன்ட் என்னன்னா.. கலர் பொடி மிக்ஸ் பண்றது தான்... ஏன்னா கடையில வாங்கற பொடி தூவறதுக்கு சரியா இருக்காது.. ஸோ.. மணல் கொஞ்சம், கோல மாவு கொஞ்சம்ன்னு மிக்ஸ் பண்ணா கரெக்ட்டா வரும்.. அப்படி மிக்ஸ் பண்றப்போ, இந்த அடர் கலர் மாற்றது பாக்க சூப்பராயிருக்கும்...

layout design போட்டதுக்கு அப்பறம், காம்பினேஷன் பாத்து கலர் குடுத்து, கொஞ்சம் கூட பிசிறில்லாம outline போட்டதுக்கு அப்பறம் பாத்தா, நாம நினைச்ச டிசைன் வந்திருக்கும்.. அப்ப அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.. இப்படி finishingல்லாம் நல்லா இருந்தாலும், opening தான் நல்லா இருக்காது ...

ஏன்னா கோலம் போட காலைல நடுராத்திரி 4.30 க்கே எந்திரிக்கணும்.. அதாவது விடியக் காலைல 5 மணிக்கே கோலம் போட ஆரம்பிச்சுடணும் ... 5.30 மணிக்கு போட்டால் கொசுக்கள் படையெடுத்து வந்து நம்மை கடிக்கும் அபாயம் இருப்பதாலும், 6 மணிக்கு போட்டால் வீட்டில் உள்ளோர் நம்மையே கடித்துக் குதறிவிடும் அபாயம் இருப்பதாலும் வேறு வழியே இல்லை...

இருந்தாலும் நான் ஒரு நாள் கோலம் போட்டால், வருடம் முழுவதும் போட்டதாய் அர்த்தம்ன்னு சொல்லி, இன்னிக்கி ஒரு நாள் நான் போட்ட கோலம் தான் இது..



இது போன வருஷம் போட்டது... (போட்டோவுக்கு போஸ்ல்லாம் இல்ல.. நானே போட்டது... )




நான் இன்னிக்கு ஒரு நாள் கஷ்ட்டப்பட்டு கோலம் போட்டறேன், மீதி நாள்ல்லாம் (வருஷம் முழுக்க) அதே மாதிரி போட்டுடு என்று பெருந்தன்மையாக அம்மாவிடம் சொல்லிவிட்டேன்....

எப்பூடி...!!!!!

Read more...

நெஞ்சுபொறுக்குதில்லையே...,

November 27, 2009

26/11 - ஓராண்டு நிறைவு....

ஓராண்டுக்கு பின் , மாண்புமிகு பிரதமரின் அறிக்கை..

'மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும்/தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாதாம்... '

ஓராண்டு, 365 நாட்கள் ஒரு அரசாங்கத்திற்கு பத்தாதா என்ன...? செய்வதற்கு மனமிருந்தால் தானே.... இப்படியெல்லாம் எதற்கு வீண் அறிக்கை.. பேசாமல் நாம் பதிவில் போடுவது போல் ஒரு டிஸ்கியை போடுவது தானே...

அதாவது - 'இந்திய ராணுவம், பார்டர் செக்யுரிட்டி படை, ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு, 'துணை ராணுவம், கமெண்டோ படை பிரிவு போன்றவற்றில் சேருபவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..' அவர்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கிலேயே இவ்வேலைகளை செய்கிறார்கள்.. அல்லது உயிரை விடுகிறார்கள்..'

'இந்திய இறையாண்மையை காப்பாற்றவும். இன்ன பிற வசதிகளுக்காகவும் தீவிரவாதிகளையோ, நக்சல்களையோ பிடிப்பதற்கு இந்திய அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்காது... எனவே அமெரிக்காவோ, சீனாவோ அவைகளால் தூண்டப்பட்டு பாகிஸ்தானோ இந்தியாவில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்..' என்று போடுவது தானே..

சரி இந்திய அரசாங்கம் கிடக்கட்டும்... இந்த தாக்கரேக்கள் என்ன செய்கிறார்கள்... மும்பை தாக்குதலில் இறந்தவர்களும் பாதிக்கபட்டவர்களும் 'மராத்தி மன்னூஸ்' இல்லையா...?

Read more...

சீ.மு... சீ.பி..

November 26, 2009

சீனு என்று ஒரு நாய்க்குட்டி வளர்க்க ஆரம்பித்த பிறகு, என்னுடைய எண்ணங்களில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது... சீனுவிற்கு முன், சீனுவிற்கு பின்... என்ற என் எண்ணங்கள் இங்கே..

(ப்ளாக்ன்னு இருந்தாலும் இருந்துச்சு... அவங்க அவங்க வீட்டு நாய்க்குட்டி பத்தில்லாம் எழுதறாங்கன்னு நினைக்கறவங்க இதைஅவசியம் படிங்க.. அப்படில்லாம்.. ஒண்ணும் நினைக்காதவங்க.. அப்படியே கண்டினியு பண்ணுங்க...)

சீனுவிற்கு முன்... (சீ.மு)

  1. மருந்தையெல்லாம் முதல்ல நாய், முயல்ன்னு மிருகங்களுக்கு தந்து தான் டெஸ்ட் பண்ணுவாங்களாம் - பத்திரிக்கை செய்தி .... கரெக்ட்.. ஆறறிவுள்ள மனிதனுக்கு வேண்டிய மருந்துகளை இந்த மிருகங்களுக்கு தந்து டெஸ்ட் பண்ணவேண்டியது தான்...
  2. ரோட்ல இந்த நாய், ஆடு, மாடுல்லாம் ஏந்தான் திரியுதுங்களோ... ட்ராபிக் ஆது...
  3. அவர்கள் தெரு நாய்களுக்காக ஒரு இயக்கம் /அமைப்பு ந்டத்தறாங்களாம் - பத்திரிக்கை செய்தி.. ச்சே... நாய்க்கெல்லாம் இயக்கமா...? இதுக்கு நாலு பிள்ளைங்கள படிக்கவெச்சாலும் புண்ணியமா இருக்கும்...
  4. மனிதன் தன் அறிவால் யானை, மாடு போன்ற விலங்குகளை அடக்கியாள கற்றுக்கொண்டான்.. நமக்கு ஆறறிவு.. அதுக்கெல்லாம் அஞ்சு தானே...
  5. மனிதன் மட்டுமே சிரிக்கவும், சிந்திக்கவும் செய்கிறான்.. அதுவே அவன் ஆறாவது அறிவுக்கு சான்று - பள்ளிப்பாடம் - அட ஆமாம்ல
  6. மனுசன் இருக்கறதுக்கே இங்க இடமில்லையாம்.. இதுல இந்த நாய், ஆடு, மாடு வேற..
சீனுவிற்கு பின்... (சீ.பி)
  1. மருந்தையெல்லாம் முதல்ல நாய், முயல்ன்னு மிருகங்களுக்கு தந்து தான் டெஸ்ட் பண்ணுவாங்களாம்... 'அடப்பாவிங்களா... அதெல்லாம் வலிக்குதுன்னு வாய்விட்டு சொல்லலின்னா.. உடனே அதுக்கு டெஸ்ட் பண்ணிடுவீங்களா... இதுக்கு எதுக்கு ஆறறிவு.... '
  2. ரோட்ல இந்த நாய், ஆடு, மாடுல்லாம் ஏந்தான் திரியுதுங்களோ... வண்டி ஏதும் ஏறினா என்னபண்ணுங்க... பாவம் வலிக்குதுன்னு சொல்லக்கூட முடியாது...
  3. அவர்கள் தெரு நாய்களுக்காக ஒரு இயக்கம் /அமைப்பு ந்டத்தறாங்களாம் - பத்திரிக்கை செய்தி.. - 'ஆஹா.. நல்ல வேலை செஞ்சாங்க... நம்ம சீனுவ நாம வளர்க்கிறோம்.. மத்த நாய்கள்லாம் பாவம்ல்ல... மனுசங்களுக்கு உதவ நிறையபேர் இருக்காங்க... பாவம் இந்த நாய்களுக்கு யார் இருக்கா...'
  4. மனிதன் தன் அறிவால் யானை, மாடு போன்ற விலங்குகளை அடக்கியாள கற்றுக்கொண்டான்.. இதுக்கு எதுக்கு தேவையில்லாம ஆறறிவு.... '
  5. மனிதன் மட்டுமே சிரிக்கவும், சிந்திக்கவும் செய்கிறான்.. அதுவே அவன் ஆறாவது அறிவுக்கு சான்று - பள்ளிப்பாடம் - என்ன பெரிய ஆறாவது அறிவு.. மற்ற உயிர்களுக்கும் வலிக்கும்ன்னு நினைக்காத மனிதனுக்கு இந்த credit வேறயா...
  6. மனிதர்களோடு மட்டும் இருக்கும் வாழ்க்கையில் என்ன இருக்கு... வாயில்லாத... ஆனால் அன்போடு இருக்கும் இந்த மிருகங்களோடு இருக்கும் வாழ்க்கை அருமை...

உண்மையா சொல்றேங்க... வீட்ல கண்டிப்பா ஒரு நாயோ, பூனையோ, அட்லிஸ்ட் ஒரு மீன் தொட்டியொ வைங்க... உங்களுக்கு மன அழுத்தம் இருக்கும் நாட்களில் அவை உங்கள் உற்ற தோழனாய் இருக்கும்... வீட்டில் சிறு குழந்தை, வயதானவர்கள் இருக்கிறார்களே என்று எண்ணவேண்டாம்... ஏனேனில் இன்று Pre.KG செல்லும் குழந்தைக்கு கூட மன அழுத்தம் உண்டு...

Read more...

பாராட்டு... (சர்வேசன் 500 - "நச்"னு ஒரு கதை - 2009 -போட்டிக்கு)

November 10, 2009

'ஸ்ரீமதி...'
'ஸ்ரீ..மதி...'
'ஏய்... ஸ்ரீமதி...'
'ப்ச்.. என்னம்மா...?'
'இங்கதான் இருக்கியா... நைட்டுக்கு என்ன செய்யட்டும்.. இட்லியா, சப்பாத்தியா..?'
'எதுனா செய்யி... '

என்ன ஆச்சு இவளுக்கு... நைட்டுக்கு என்ன செய்யட்டும். ன்னு கேட்டா... நாம கேட்கற ரெண்டும் இல்லாம வேற எதுனா சொல்லுவா.... இப்ப என்னடான்னா... எதுனா செய்யின்னு சொல்றாளே...

ஸ்ரீமதி - கவிதா, ராகவனின் செல்ல மகள்.. அப்பாவிடம் ஒட்டுதல் ஜாஸ்தி.. ராகவனுக்கும் தன் செல்ல மகளிடம் பிடிப்பு அதிகம்.. அவ அவங்கப்பா செல்லம் என்று சந்தோஷமாக சலித்துக்கொள்பவள் கவிதா.. அப்பா திட்டினாலோ, ஏதும் சொல்லிவிட்டாலோ ஸ்ரீமதி முகத்தை தூக்கிவைத்துக்கொள்வாள்.. அம்மா சொன்னாலோ... 'போம்மா.. நீ... வேற வேலையில்லை உனக்கு' என்று சொல்லிவிட்டு ஓடுவாள்...

'என்னடா ஆச்சு.. ஃப்ரண்ட்ஸ் கூட சண்டையா... ஏன் உம்முன்னு இருக்க...'

'ஒண்ணுமில்ல மா...'

சரி.. கேட்டா எப்படியும் சொல்லமாட்டா.. கொஞ்ச நேரம் கழிச்சு அவளே சொல்லுவா.. என்று எண்ணியபடி சமையலில் மூழ்கினாள் கவிதா..

'ஸ்ரீ.. வா.. சூடா வந்து சாப்பிடு.. வா.. வா' - கவிதா அழைக்க.. வழக்கம்போல் கிச்சன் திட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, சாப்பிட ஆரம்பித்தவள்.. ரெண்டு வாய் வைத்ததும் பட பட வென்று சொல்ல ஆரம்பித்தாள்..

'பாரும்மா இந்த அப்பாவ.. நீ நேத்து காலைல அத்தை வீட்டுக்கு போய்ட்டீல்ல.. நானும்... ஞாயித்துக்கிழமை நமக்கு லீவாச்சே... நாமளே செய்வோம்ன்னு ..
மதியம், ஃபரைடு ரைஸ், சாலட்.., நைட்டுக்கு - ரவா தோசை, அதுக்கு தொட்டுக்க தக்காளி சட்னி, தேங்காய் சட்னி ன்னு பாத்து பாத்து செஞ்சம்மா.. ஆனா இந்த அப்பா... எல்லாத்தையும் சாப்பிட்டு நல்லாவே இல்லைன்னு என்ன திட்டறாரும்மா..' என்று குற்றபத்திரிக்கை வாசித்தாள்

அவராவது.. இவளை திட்டறதாவது, என்று நினைத்துக்கொண்டவளாய் ...

'கஷ்டப்பட்டு செஞ்ச பிள்ளைய பாராட்டாம திட்டறாரா.. உங்க அப்பா.. வரட்டும் பாத்துக்கலாம்.. நீ போய் படிடா..' என்று ஆறுதல் படுத்தினாள்..

சற்று நேரம் கழித்து வந்த ராகவனிடம் கவிதா... 'ஏங்க இன்னிக்கு இவ்ளோ லேட்டு...சரி சரி.. கை கழுவிட்டு வாங்க.. சாப்பிடலாம்' என்று அழைத்தாள்..

'ஆமா.. இன்னிக்கு என்ன மெனு... உப்பு ஒரப்பு இல்லாம ஒரு குழம்பு, தீஞ்சுபோன தோசைன்னு எதுனா செஞ்சிருப்பியே... நீயெல்லாம் என்ன சமைக்கற.. நேத்து எம் பொண்ணு செஞ்சா பாரு சட்னியும், தோசையும்... ம்... அதுவல்லவோ சுவை... அதுவல்லவோ கை மணம்..'

'ம்.. இதென்ன புதுக்கதையா இருக்கு... அவ செஞ்சது நல்லாயில்லன்னு நீங்க திட்டினதா இல்ல சொல்லிக்கிட்டு இருந்தா... '

'ஸ்ரீ. இங்க வந்து உங்க அப்பாவ என்னன்னு கேளு' என்று உள்ளறையில் இருந்த ஸ்ரீமதியைக் கூப்பிட..

'டேய்.. நான் எங்கடா உன்ன திட்டினேன்... '

'பின்ன.. நான் செஞ்சதையெல்லாம் .. அம்மா செய்யற மாதிரியே இருக்குன்னு சொன்னியேப்பா... உனக்குத்தான் அம்மா செய்யறதே பிடிக்காதே...

Read more...

தமிழகத்தில் இது மழைக்காலம்...

November 8, 2009

தமிழகத்தில் பரவலாக மழை பொழிய ஆரம்பித்துவிட்டது....

அதுவும் சோ வென பெருமழையாய் பெய்யாமல், நசநசவென சிறு மழையாய் பொழிகிறது...

காலையில் எழுந்ததும் பொழியும் மழை, அலுவலகத்தில் இருக்கும்போது பொழியும் மழை, இதெல்லாம் நல்லாதான் இருக்குது.. ஆனா ஆபீஸ் போறப்போ பொழிய
ரமழைதான் நலலாயில்லை... சரி.. ஆசைப்படலாம், பேராசை படக்கூடாது....


மழையில நனைஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் குடிக்கற டீயோட ருசி... அதுக்கு ஈடு இணையில்லை... டீ இல்லன்னா... சூடா இட்லியோ, தோசையோ.... தொட்டுக்கொள்ள சட்னியோ, பொடியொ இல்லாம... பூண்ட கொஞ்சம் போல நசுக்கி, நிறைய மிளகாய்த்தூள், கொஞ்சூண்டு உப்பு போட்டு, எண்ணைய் விட்டு சாப்ட்டா.... சூப்பராக இருக்கும்....

மழைக்காலத்திற்கான ஒரே ஒரு யோசனை..

டூவீலரோ, காரோ... வண்டியில் போகும்போது speed ஆ போகாதீங்க... தவிர்க்க முடியாத சமயம் தவிர அவசரமா ஆபிஸ்க்கு போயே ஆகணும்னு இல்லை... மழையைக் காரணம் காட்டி தாராளமா permission போட்டுக்கலாம்... இந்தியாவில் இது சாத்தியமே...

Read more...

காக்கைக்கும்.....

October 24, 2009

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு - ரொம்ப சாதாரணமா, நாம அடிக்கடி சொல்ற இல்ல கேக்கற ஒரு வார்த்தை தான்...

மேம்போக்கா பார்த்தா... 'எப்படி இருந்தாலும் தாய்க்கு தன் குழந்தை உசத்தி தான்' ங்கற அர்த்தம் வந்தாலும், 'அவங்க அவங்க பொருள் (குழந்தையோ, பொம்மையோ, வேறு எதுவோ...)அவங்க அவங்களுக்கு உசத்தி தான் ' ங்கறதும் அர்த்தம்....

இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்... ஆனா...
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு - ன்னு சொல்லாம, காக்கை க்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ன்னு ஏன் சொல்றாங்க - ன்னு போன வாரம் தான் எனக்கு தெரிஞ்சுது...

இதுக்கு நான் ரூம்லாம்போட்டு யோசிக்கலங்க... எங்க வீட்டு மரத்த சும்மா அண்ணாந்து பாத்துட்டு இருந்தேன்.. அதில ஒரு காக்கா கூடு இருந்துச்சு.. என்னமோ தெரியுதேன்னு கொஞ்சம் எட்டி பாத்தப்ப தான்...இந்த அரிய சிந்தனை எனக்கு வந்துச்சு....

சாதாரணமா நாய்க்குட்டி, ஆட்டுக்குட்டி, மாட்டுக்குட்டி... சாரி .. கன்னுக்குட்டி, புலிக்குட்டி, கரடிக்குட்டி, ன்னு விலங்குகளின் குட்டிகளை பார்த்தாலே தூக்கிவெச்சு கொஞ்ச தோணும், குறைஞ்சபட்சமாய் தடவியாவது கொடுக்க தோணும்... ஆனா... இந்த காக்கா குஞ்ச பார்த்தா... அய்ய.. ச்சீ..ச்சீ.. உவ்வே... என்றேல்லாம் சொல்லி முகத்தை திருப்பிக்கொள்வோம்.....

நிஜமா சொல்றேன்ங்க... அவ்வளவு மோசம்... ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... காக்காய் கொள்ளை அழகுங்க....

உவமான உவமேயத்தையும் நம்ம முன்னோர்கள் நல்லாதான் சொல்லியிருக்காங்க....ன்னு அப்பத்தான் எனக்கு தோணுச்சு.... அத அப்படியே உங்ககிட்ட பகிர்ந்துக்கலாமேன்னு....

Read more...

வடை போச்சே!!!!

October 16, 2009

கொஞ்சம் (ஒரு மூட்டை) பட்டாசு, கொஞ்சூண்டு (ஒரு கூடை) பலகாரம், எண்ணை குளியல், ஒரு 5 - 6 புது டிரெஸ்ன்னு தீபாவளி சாதாரணமாதான் போகும்.... ஆனா தீபாவளிக்கு முந்தைய பிரப்பரேசன்கள் எல்லாம் பார்த்தா .. அப்பப்பா...

துணிக்கடை, நகைக்கடை, ப்ளாட்பாரக்கடைகள், ட்டெய்லர் கடைன்னு ஆரம்பிச்சு காய்கறி கடை, ஸ்வீட் கடை, மிக்ஸி ரிப்பேர் கடை, இன்னும் உலகில் எத்தனை வகை கடைகள் உண்டோ, அத்தனையிலும் கூட்டம், கூட்டம், கூட்டமோ கூட்டம்... ரயில், பஸ்ல எல்லாம் அந்த வாகனங்கள் கொள்ளாத கூட்டம்....

என்னவோ ஒரு பெரிய economic turn over போன்று, மக்கள் கூட்டம் கூட்டமாய் பொருட்களை வாங்குவதும், பார்ப்பதும்.... அடடே... தீபாவளிக்கு அடுத்து வரும் நாட்களில் அந்த கடைகளும், தெருக்களும் வெறிச்சோடி (அவ்வளவாய் கூட்டம் இல்லாமல்) இருப்பதும்....

இதுவல்லவோ பண்டிகை.....

இதையெல்லாம் விட பெரிய சந்தோசம் லீவ் தான்...
தீபாவளி அன்னிக்கு ஒரு நாள் லீவ்.. அதுக்கு முன்னாடி ஒரு நாள் லீவ்ன்னு... அப்படி இப்படின்னு ஒரு வாரம் 'இந்த வாரம் தீபாவளி வாரம்' ன்னு ஜாலியா இருக்கும்... ஆனா இந்த வருஷம் சனிக்கிழமையில வந்ததுல ' தீபாவளி வாரம் ' போய் 'வீக்எண்ட் தீபாவளி' ஆனதுல வடை போச்சே!!!! பாணியில் லீவ் போச்சே!!!! என்று எண்ணவே தோன்றுகிறது.....

சரி.... வீக்எண்ட் தீபாவளியோ, தீபாவளி வாரமோ.... வாசகர்களுக்கும், அனைத்து பதிவர்களுக்கும்....



தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

Read more...

ஒண்ணுமே புரியலயே....!!!

September 5, 2009

என்னதான் தமிழ் தாய் மொழியா இருந்தாலும், தமிழ்ல பேசவும் எழுதவும் தெரிந்திருந்தாலும்... தினமும் நியூஸ் கேட்கும் போதும், பேப்பர் படிக்கும் போதும் நிறைய வார்த்தைகள் எனக்கு புரியவேமாட்டேங்குதுங்க... சில சமயம் வாக்கியங்களே கூட புரிய மாட்டேங்குது... சில சாம்ப்ள் குடுத்திருக்கேன்... பாருங்க...

  • நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது... (உத்து உத்து பார்த்தாலும், உன்னிப்பாக பார்த்தாலும் அதனால் விளையும் பயன் என்னவென்று யானறியேன் பராபரமே!! )

  • ABC விஷயத்தை செயல்படுத்த வேண்டுமென்று XYZ மாநாட்டில் வலியுறுத்தபட்டது

  • ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை, விலைவாசி ஏற்றத்தை கண்டித்து எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தின..

  • YYY கட்சி தலைவர் ஆனா ஊனா விஷயத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்...

  • இதுகாறும் அவர் மக்களுக்கு சேவை செய்த்தை பாராட்டி Mr. XXX / Ms. ZZZ க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது..

  • வறுமையை ஒழிப்பதற்கு, கட்சியில் / சபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது..

  • சபாநாயகராக / பிரதமராக / ஜனாதிபதியாக / ஊராட்சி தலைவராக, கட்சி தலைவராக இவர் பதவியேற்றதால் பெண் குலமே / குறிப்பிட்ட சமுதாயமே பெருமை படுகிறது..
இந்த லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு... இதுல உங்க யாருக்காவது ஏதாவதோ, இல்ல முழுசாவோ புரிஞ்சா... தயவு செஞ்சு சொல்லுங்க சாமி...

Read more...

Tag...

August 29, 2009

Geetha and சிங்கக்குட்டி has tagged me...

Thank u for selecting & tagging me.

The Rules of the tags are:

1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag


The Tag:

1. A – Avatar (Blogger) Name / Original Name : Swarnarekha / Sathya

2. B – Best friend? : Bharathi (alias) Viji

3. C – Cake or Pie? :) (coz i don't like both)

4. D – Drink of choice? Sugarcane Juice

5. E – Essential item you use every day? My large tea cup

6. F – Favorite color? Light green

7. G – Gummy Bears Or Worms : Worms (Its quite interesting to note them)

8. H – Hometown? Trichy

9. I – Indulgence? : Pot Painiting

10. J – January or February? Jan (More holidays in that month)

11. K – Kids & their names? :)

12. L – Life is incomplete without? Pet animals

13. M – Marriage date? Xth YY, ZZZZ

14. N – Number of siblings? Nil

15. O – Oranges or Apples? Apples

16. P – Phobias/Fears? Confined places

17. Q – Quote for today? Those who stand for nothing fall for anything

18. R – Reason to smile? Nothing.. Since I believe that a reason is not necessary to smile.

19. S – Season? Spring

21. U – Unknown fact about me? Monoacting

22. V – Vegetable you don't like? Parangikaii (Don't know the English name... sry)

23. W – Worst habit? Nail bitting, abscent mindedness

24. X – X-rays you've had? For my wisdom teeth

25. Y – Your favorite food? Vazhaipoo, kothavarangai osili - a perfect match for curd rice.. mm.. (yummy)!!!

26. Z – Zodiac sign? Pisces

Read more...

யான் பெற்ற இன்பம் (விருது).. பெருக இவ்வுலகம் (இப்பதிவுலகம்)...

August 28, 2009


ஏதோ மனசுல தோணுனத பதிவுங்கற பேர்ல எழுதறப்போ... அத நாலு பேர் படிக்கறாங்க ங்கறதே சந்தோஷம்... அதுக்கும் மேல அவங்க நமக்கு விருது தராங்கன்னா... அது யான் பெற்ற இன்பம் ... அளவில்லா ஆனந்தம்....

இந்த பட்டர்ஃபிளை விருது சுகுமார் அண்ணன் தந்தது... பதிவுலகில் ஃபோட்டோக்களும், அதுக்கு சூப்பராய் கமெண்ட்ஸ்ம் போட்டு கலக்கும், இவரிடம் இருந்து விருது கிடைத்ததும், தலைநகரம் வடிவேலு பாணியில் 'ஹய், நானும் விருது வாங்கிட்டேன்.. நானும் விருது வாங்கிட்டேன்' என்று கத்த தோன்றியது....

இப்போது யான்பெற்ற இவ்விருதை , முறையே பதிவர்கள் சிங்கக்குட்டி, டக்ளஸ், அவர்களுக்கும் அளிக்கிறேன்... சிங்கக்குட்டியின் 'என்னை பற்றி' படித்து தான் அவரது பதிவுகளையும் படித்தேன்... அவரது 'பதிவுலகில் பத்து' அனைவரும் படிக்க வேண்டியது...

டக்ளஸ்சின் எங்க அக்காவுக்கு பொறந்த நாளு..!. படித்து விட்டு நான் சிரித்த சிரிப்பு... அடேயப்பா....

கீதாவின் அன்பு பரிசில் கிடைத்தது இந்த விருதுகள்...



இவ்விருதுகளை வண்ணத்துபூச்சியாருக்கும், மற்றும் கவிநயா விற்கும் அளிக்கிறேன்...

வண்ணத்துபூச்சியாரின் உள்ளார்ந்த, உண்மையான விமர்சனங்கள் எப்போதும் என் favorite லிஸ்ட்டில்

கவிநயாவின் என்னைப் பற்றி யும்,குட்டிக் கவிதைகளும் பிடிக்கும் என்றாலும், அவரது விழுங்குதல்... கவிதை தான் லிஸ்ட்டில் டாப்...

Read more...

குற்றாலம் - குறுகியதோர் ஆனால் நிறைவானதோர் பயணம்...

August 17, 2009

போன வாரம் குற்றாலம் போயிருந்தோம்... சீசன் முடியர நேரமா இருந்தாலும் நல்லா என்ஜாய் செஞ்சோம்... முதல்முறையா அருவியில குளிக்க போனதால, எப்படி போகணும்னு தெரியாம நேரா அருவியில தலையவிட்டு, மூச்சுத்திணறி தலைதெறிக்க ஓடி வந்து விட்டோம்... அப்பறம் ஓரமா நின்னு கொஞ்சம் கொஞ்சமா தலையவிட்டு நல்லா குளிச்சோம்... அருவித் தண்ணீரின் சுவையும், குளிர்ச்சியும்... அப்ப்ப்பா...

அந்தக்கால மன்னர்கள் சிவபக்தியில் சிறந்தவர்கள். அருவியெங்கும் சிவலிங்களை செதுக்கியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் குளிக்கும் பகுதிக்கு மேல், ஒரு சிவலிங்கம் நன்றாக மேலெழுந்து நிற்கிறது. அதில் அருவிநீர் ஒரு கோடு போல் வழிந்துகொண்டே இருக்கிறது...சிவனுக்கு எந்நேரமும் அபிஷேகம் தான். சீசன் நன்றாக இருக்கும் சமயங்களில் இந்த சிவலிங்கம் தெரியாது என்று நினைக்கிறேன்...

அங்கே கிடைக்கும் வித்தியாசமான பழங்களில் ரிம்டம் என்று ஒரு பழம் உண்டு. ரிம்டம் பழம் என்றோ, ரம்டம் பழம் என்றோ சொன்னார்கள். நமக்குத்தான் பெயர் வைப்பதில் அலாதி இஷ்ட்டமாச்சே... (நாங்கள் மற்றவர்களுக்கு வைத்த பெயரை இங்கே காணவும்.) அந்த பழம் முள்ளம்பன்றியை போல் இருந்த்தால் அதற்கு முள்ளம்பன்றி பழம் என்று பெயர் வைத்தோம். அந்த முள்ளம்பன்றி தோலை நீக்கினால், உள்ளே ஜெல்லி போல் இருக்கிறது. குற்றாலத்தில் விளையும் பழமாச்சே... அந்த ஜெல்லியும் குளிர்ச்சியாகவே இருக்கிறது.

குற்றாலநாதர் ஆலயம் - அந்தக்கால மன்னர்களின் சிவபக்திக்கு இன்னோர் சாட்சி. அங்கே ஸ்தல விருட்சமாய் ஒரு பலாமரம் இருக்கிறது. அதற்கு குறும்பலாநாதர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த பலாமரம் ஒரு அருவியின் உயரத்திற்கு இருக்கிறது. அந்த பலாமரத்தின் அடியில் நின்றால் அருவியின் சப்தம் மிக துல்லியமாய் கேட்கிறது...

அதென்னவோ வர வர நம்ம பேட்டரி அடிக்கடி ரீசார்ஜ் ஆகிறது. அதிலும் குற்றாலமும் பாபநாசமும் சென்று வந்ததில் பேட்டரி ஃபுல் ரீசார்ஜ் ஆகிவிட்டது. பாபநாசம் பற்றி இன்னோர் பதிவில் சொல்கிறேன்...

Read more...

காலச்சக்கரம்...

August 4, 2009

திங்கள் கிழமை காலை

"அடடா!!! இந்த பை பிஞ்சிருக்கே... அவசரத்துல தான் எல்லாமே ஞாபகம் வருது... ஈவ்னிங் வரும்போது கண்டிப்பா தைச்சுக்கிட்டு வரணும்..."

திங்கள் கிழமை மாலை

"இன்னிக்கு பாத்து ரொம்ப லேட்டாயிடுச்சு... சரி..பையை அப்பறம் பார்ப்போம்..."

புதன் கிழமை

"மனுசன் அவசரத்துக்கு யூஸ் பண்ணறதுக்கு ஒரு கர்ச்சீப் இருக்கா இந்த வீட்ல... சே..."

"இந்த சண்டேயாச்சும் கடைக்கு போய் வாங்கிட்டு வரணும்..."

வெள்ளிக்கிழமை

"போன மாசம் வாங்கிட்டு வந்த டிரஸ் தைக்ககுடுக்கவே இல்லையே... மறந்தே போச்சுது... சாயந்தரம் டைம் இருக்காதே.. சரி..ஞாயிற்று கிழமை போவோம்..."

ஞாயிற்றுக்கிழமை

"அப்பாடா!! இன்னிக்கு லீவ்... சண்டே புஃல்டே என்ஜாய்மெண்ட் தான்... டிவில நல்ல படம் இருக்கான்னு பேப்பர் வந்ததும் பாக்கணும்... மதியம் சாப்டுட்டு, அப்படியே ஒரு தூக்கம் போட்டு, நம்ம பேட்டரிய ரீசார்ஜ் பண்ணிப்போம்...."

"வீட்ட விட்டு வெளிய காலெடுத்து வெக்ககூடாது... டெய்லி ஒரே அலைச்சல் தான்.. இன்னிக்காவது வீட்ல இருப்போம்..."

திங்கள் கிழமை

"அடச்சே!!! டிரஸ் தைக்ககுடுக்கவே இல்லையே..!!!"

Read more...

உள்ளூரில் வேலை பார்ப்பது கொலைக் குற்றமா???

July 23, 2009

நான் வாக்கிங் போகும்போது, தம்பதி சகிதமாக இருவர் வாக்கிங் வருவார்கள்... தினமும் பார்கிறோமே என்று குட் மார்னிங் சொல்ல ஆரம்பித்தேன்... வந்தது வில்லங்கம்... ரெண்டு நாள் கழித்து, எனக்கும் அவருக்குமான உரையாடல்...

அவர்: ஏம்மா, படிக்கிறியா..?
நான்: இல்ல சார்.. வேலை பாக்கறேன்..
அவர்: என்ன படிச்சிருக்க?
நான்: பி.இ...
அவர்: பி.இ ல?
நான்: ECE சார்..
அவர்: இங்க என்ன வேலை பாக்கற..?
நான்: Patent related வேலை...
அவர்: ஏன் இங்கயே இருக்க, சென்னை, Bangaloreன்னு போகலயா..?
நான்: இங்கயே வேலை இருக்கப்ப நான் ஏன் சார் போகணும்...?
அவர்: என் பையன், MCA படிச்சிட்டே சென்னைல, MNCல வேலை பாக்கறானேம்மா... நீ பி.இ.ECE படிச்சிட்டு ஏன் இங்கயே இருக்க..?
நான்: ?????
அவர்: இன்ட்ர்னெட்ல அப்ளை பண்ணிட்டே இரும்மா... கண்டிப்பா கிடைக்கும்...
நான்: ?????

உள்ளூரில் வேலை பார்த்தால், அது வேலை பார்க்கும் கணக்கில் சேர்த்தி இல்லை போலிருக்கிறது... உள்ளூரில் ஒருகம்பெனி இருந்து, அதில் எனக்கு வேலையும் இருக்கையில் சென்னை, Bangalore என்று எதற்காக போக வேண்டும் என்ற என் நியாயம் எடுபடவே இல்லை...!!!!

இதே நான் அவரிடம் 'சார், உங்க பையன் கிட்ட சொல்லி சென்னைல ஒரு reference வாங்கி தாங்க என்று சொல்லியிருந்தால்...' எங்கம்மா... அவனுக்கே ஒரு வருஷமா இன்கிரிமென்ட் இல்லை, recession வேற, ப்ராஜெக்ட் இல்லை என்றும், இன்ன பிற இத்தியாதிகளை கூறியும், தெரித்து ஓடியிருப்பார்....

ஆனால், என் ஆதங்கம் எல்லாம், என்னவோ என்னை கேள்வி கேக்கணும்னே, காலையில் எழுந்து வந்தது மாதிரி, இத்தனை கேள்வி கேட்ட அவர் கடைசிவரை என் பெயரை கேட்கவேயில்லை என்பதே....

Read more...

திருப்பதி - ஒரு Spiritual vacation

July 9, 2009

போன வாரம் திருப்பதி போயிருந்தேன்... அதை பத்தி எழுதணும்னா ஒரு பிளாக் ஃபுல்லா வேணும்... அதனால நான் ரசிச்ச சிலது மட்டும் இங்கே...

  • மலை ஏற்றப்போ (படி வழியா) மக்களின் நம்பிக்கைகளை, செய்கைகளை கண்டிப்பா சொல்லணும்.. ஒரு 5000 படி இருக்கும்.. எல்லா படிக்கும் மஞ்சளும், குங்குமமும் வெச்சுக்கிட்டே போவாங்க(எல்லாரும் இல்ல, வேண்டிக்கறவங்க மட்டும்)... படியில்லாத இடத்துல அங்க இருக்கற போஸ்ட் கம்பத்துக்கு கூட மஞ்சளும், குங்குமமும் வெச்சுக்கிட்டு போயிருப்பாங்க... அதே மாதிரி சிலர் எல்லா படிலயும் விளக்கு ஏத்திட்டு போவாங்க.. ஒருத்தர் படில சூடம் வெச்சுக்கிட்டு போக, இன்னொருத்தர் candleல அதை ஏத்திக்கிட்டே போவாங்க... மலை ஏறதே கஷ்டம், இதுல முட்டி போட்டு சிலர் ஏறுவாங்க...
  • மலை ஏற்றப்போ எனக்கு புடிச்ச இன்னோரு விசயம் தரிசன டிக்கெட் வாங்கற லய்னுக்கு பக்கத்துல இருக்கற கடைங்க... ஒரு 30 - 40 கடைங்க வரிசையா இருக்கும்.. எல்லா கடையும் ஒரே மாதிரி இருக்கும்.. ரெண்டே ரெண்டு கேஸ் அடுப்பு வெச்சுக்கிட்டு, அதுலயே மிளகாய் பஜ்ஜி, டீ, தோசை, இட்லி ன்னு பரபரப்பா வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருப்பாங்க...ஒட்டுமொத்த குடும்பமும் அந்த கடைல வேலை பாக்கும்.. இந்த கடைங்களை வேடிக்கை பாத்ததுல நேரம் போனதே தெரியல எனக்கு...
  • மேல் திருப்பதில (திருமலை) தேவஸ்தானம் சார்பா அன்னதானம் போடுவாங்க... பெரிய பெரிய ட்ராலில கொண்டு வந்து சுடச்சுட சாப்பாடு போடுவாங்க.. குழம்பு, ரசம் எல்லாமே ட்ராலில தான்...வெளி கடைல ஆர்டர் செஞ்சு வெய்ட் பண்ற நேரத்துல இங்க சுடச்சுட சாப்பாடு போட்டு ..இலைய இழுத்து நம்ம வெளிலயும் தள்ளிடுவாங்க...ருசியா இருக்குமோ இல்லியோ, பசிக்கு அப்படியே கப கபன்னு சாப்பாடு உள்ள போகும் பாருங்க... ஆஹா... அந்த சுவையே தனி தான் போங்க...
  • திருப்பதில தமிழ் படற பாடு இருக்கே... ரொம்ப கஷ்டங்க... அந்த ஊர் காரத்துக்கு கூட நம்ம கண்ல தண்ணி வராதுங்க ஆனா, தமிழ அவங்க படுத்தற பாட்ட பாத்தா கண்டிப்பா வருங்க... சில example..
    திருடர்கள் உள்ளவர் ஜாக்கிரதை
    இலவச வுணவு வழங்குமிடம்
  • சாமி பாத்துட்டு கீழ வரும்போது பஸ்ல வந்தோம்... கண்ணுக்கெட்டின வரை மனிதனின் காலடி படாத, பச்சை போர்வைகள்.... பாக்க கண் கோடி வேணும்.. ஒவ்வோரு திருப்பத்திலும், பஸ் டயர் கிரிச்சிடும் சத்தம் கூட அருமைங்க...
  • இன்னிக்கு போனோம் சாமி கும்பிட்டோம், நாளைக்கு திரும்பி வந்தோம்ன்னு இல்லாம, ட்ராவல்க்கு (போக, வர) ரெண்டு நாள், மலை ஏறதுக்கு ஒரு நாள், மேல் திருப்பதில ஒரு நாள், கீழ் திருப்பதில ஒரு நாள்ன்னு போய்ட்டு வந்தா, இந்த Spiritual vacation ஒரு அருமையான அனுபவங்க.... நம்ம battery அப்படியே ஃபுல் recharge தான்....

Read more...

சிட்டுக் குருவிகளின் flying ரேஸ்

June 29, 2009

சிட்டுக் குருவி... தற்போது அதிகம் காணக்கிடைக்காத, ஆனால் பாக்க பாக்க பரவசமூட்டும் ஒரு சின்ன உயிர்... நான் வாக்கிங் போறப்போ... ஒரு இருவது முப்பது குருவிங்க ஒன்னா கரண்ட் கம்பில உக்காந்து இருக்கும்... திடிர்னு எல்லாம் ஒன்னா கிளம்பி ஒரு வட்டம் அடிக்கும்... அப்பறம் திரும்பி வந்து அதே கம்பில உக்காந்துக்கும்.. வட்டம் அடிக்கிறதுன்னா சும்மா இல்லிங்க... விர்ன்னு நேரா போகும்.... அப்பறம் அப்படியே கீழ விழறாப்ல விழும்... அய்யோ.. விழுதேன்னு நினைக்கறப்போ... திருப்பி விர்ன்னு போகும்... இப்படி ஒரு நாலஞ்சு தரம் போகும்... சில சமயம் ஒரொர் குருவிங்க கூட்டத்தில பறக்காம கம்பிலயே உக்காந்துக்கும்.. அப்பறம் அடுத்த ரவுண்ட்ல திரும்பி சேந்துக்கும்...

உயர இருக்கும் கம்பில உக்காந்து இருக்கறதுனாலயும், ரொம்ப சின்ன சைஸா இருக்கறதுனாலயும் குட்டி குட்டி பூச்சிங்க மாதிரி தெரியும்... ஆனா இதை பாத்துட்டா அன்னைக்கு நாள் உற்சாகமாயிடுங்க...

எல்லோரும் வெய்ட் குறைக்கறதுக்கு, அன்றைய நாளை திட்டமிடறதுக்குன்னு வாக்கிங் போறாங்க... ஆனா... எனக்கென்னவோ இந்த சிட்டுக் குருவிகளின் flying ரேஸை பாக்கறதுக்காகவே டெய்லி வாக்கிங் போணும்னு தோணுது...

Read more...

மைக்கேல் ஜாக்சன் இந்தியாவில் இருந்திருந்தால்...

June 28, 2009

மைக்கேல் ஜாக்சனின் மரணம் ஈடுகட்ட முடியாத ஒண்ணு தான்... ஆனா அவரு அமெரிக்காவில் இருந்திருக்க வேண்டியவரே இல்ல... இந்தியாவில் இருந்திருக்க வேண்டியர்... நெஜமாத்தாங்க சொல்றேன்...
ஒருவேளை மைக்கேல் ஜாக்சன் இந்தியாவில் இருந்திருந்தா..., பாலியல் குற்றச்சாட்டுகள் வரும்போது அதை அப்படியே அமுக்கியிருக்கலாம், அப்பவும் அத ஒண்ணும் பண்ண முடியலன்னா.. ஒரு 5 - 6 வருஷம் கழிச்சு ஒரு கட்சியில சேந்து எம்.எல்.ஏ, எம்.பி ன்னு ஆகிருக்கலாம்... அவர கட்சியில சேத்துக்கிட்டா... கருப்பின வோட்டுக்களை அப்படியே அள்ளிடலாம்ன்னு கட்சிகளும் அவர சேத்துக்கிட்டு இருக்கும்... அப்பறம் அப்படியே மந்திரியாகி 400 மில்லியன் சொத்து சேத்திருக்கலாம்.... அதவிட்டு இப்படி 400 மில்லியனுக்கு கடனாளியாகி இறந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது....

கட்டுக்கடங்காத புகழ், பணம், உலகெங்கும் தன்மீது வெறி கொண்ட ரசிகர்கள் என்று புகழின் உச்சாணிக்கொம்பில் யார் இருந்தாலும், என்ன செய்யறோம் ன்னு தெரியாம, தலைகுப்புற விழுவது இயல்புன்னே எனக்கு தோணுது... இதுக்கு நிறைய உதாரணங்கள் இருக்கு... சாதாரணமா நம்ம யாராவது கவனிக்கறமாதிரி தெரிஞ்சாலே, நம்மால இயல்பா இருக்க முடியாது... அப்படி இருக்கப்போ.. உலகமே நம்மள தான் கவனிக்குதுங்கறப்ப.... ஒரு மனிதன் வேறு எப்படித்தான் இருக்க முடியும்....

Read more...

காணி நிலம் வேண்டும் பராசக்தி - அதுவும் சென்னையில் தான் வேண்டும்

June 24, 2009

சென்னைமா நகர்... பெரிய பெரிய கட்டிடங்கள், எந்நேரமும் விழித்துக் கொண்டிருக்கும் சாலைகள், சீறிச் செல்லும் வண்டிகள், இவங்களுக்கெல்லாம் மெதுவாகவே போகத்தெரியாதா.... ன்னு நினைக்க வைக்கும் மக்கள் கூட்டம், பெரிய பெரிய விளம்பர பேனர்கள் ன்னு சென்னை எப்போதும் பிரமிப்பு தான்... பாக்க பாக்க இந்த அசுர ஓட்டத்தில கலந்துக்க மாட்டமான்னு தான் தோணுது....

ஆனா.... ladies hostel ங்கற பேர்ல அங்க இருக்கற rooms ல்லாம் பாத்தா ஆணியே புடுங்க வேணாம்ன்னு தோணுது...

roomங்கற பேர்ல ஒரு குடோன், compulsoryயா அது இருட்டா தான் இருக்கும்.. ஒரு ரூம்ல கொறஞ்சது4-5 பேர் , சூரிய வெளிச்சம்ன்ற ஒரு வஸ்துவே உள்ள வராத ஒரு அமைப்பு.. ஒரு ரூம்ன்னு சொல்லிக்கிட்டாலும், அந்த ரூம்ல ஒரே ஒரு கட்டில் தான் சொந்தம்.. அந்த கட்டில் கீழயே suitcase, செருப்பு, bucket. இருக்கற ஒரு shelfல, தட்டு, டம்ளர், creams, ஊறுகாய் இத்தியாதிகள்... அதுக்குள்ளயே சாமி படத்துக்கு ஒரு சின்ன இடம்... பாதுகாப்புங்கறது பேருக்கு கூட கிடையாது... யார் வேணா, எப்ப வேணா, உள்ள (திருட) வரலாம்ன்ற மாதிரி ஒரு அமைப்பு .. இதெல்லாம் சேந்தது தான் சென்னை ladies hostel..

சென்னையில சொந்தமா, சின்னதா ஒரு வீடு (வீடு, அபார்ட்மெண்ட் இல்லை) இருந்தா, அதுல ரெண்டு மாடி கட்டி, 10, 12 அறைகள் கட்டி, ஒரு மெஸ் வெச்சு, அந்த மெஸுக்குள்ளயே ஒரு டிவி வெச்சு.. 10க்கு 10 அறையை 10,000 ரூபாய்க்கு(மாசத்துக்கு) வாடகைக்கு விட்டு சம்பாதிச்சுருக்கலாம்...

சென்னைக்கு பிழைக்கவரும் கூட்டத்தை வைத்து ஒரு கூட்டம் பிழைக்குது பாருங்கள், அவர்கள் தான் உண்மையிலேயே பிழைக்கத் தெரிந்தவர்கள்...

இப்படி பிழைக்க தெரியாததினால் தானே

காணி நிலம் வேண்டும் பராசக்தி - அதுவும் சென்னையில் வேண்டும்,
அதில் 10, 12 அறைகள் வேண்டும், அதை நான் வாடகைக்கு விட்டு சம்பாதிக்க வேண்டும் என்று கேட்காமல்,

காணி நிலம் வேண்டும் பராசக்தி - அதில் பத்து பன்னிரண்டு தென்னைமரம் வேண்டும் என்று கேட்டான் அந்த முண்டாசு கவிஞன்...

Read more...

இலங்கை பிரச்சனையில் நம் ராணுவ வாகனங்கள் தாக்கு..

May 3, 2009

கோவையில் பயிற்சி முடிந்து திரும்பிய ராணுவ வீரர்களை பெரியார் தி.க. - ம.தி.மு.க.வினர் தாக்கியுள்ளனர்... இலங்கை ராணுவத்துக்குத் தேவையான டேங்கர்கள், லாரிகள் மூலம் கோவை வழியே, கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாக நினைத்து பயிற்சி முடிந்து திரும்பிய ராணுவ வீரர்களை தாக்கியுள்ளனர்...

அடப்பாவிங்களா... உங்க அரசியல் ஸ்டண்டுக்கு ஒரு அளவில்லையா... ராணுவ வீரர்களை போய் அடிக்கறிங்களே... அப்படியே இருந்தாலும் ராணுவ வீரர்கள் என்ன செய்வார்கள்... தலைமை சொன்னதை தானே செய்வார்கள்...

உண்மையிலேயே உங்களுக்கு இலங்கை தமிழர் மீது பற்று இருந்தால் இந்திய அரசை வலியுறுத்துங்கள் அல்லது இலங்கை ராணுவ வீரர்களை போய் தாக்குங்கள்...அதைவிட்டு நம் ராணுவ வீரர்களிடமா உங்கள் அரசியல் ஸ்டண்டை வைத்துக்கொள்வது...

Read more...

தேர்தல்: திருவிழா... இல்லை இல்லை திரைப்படம்

May 2, 2009

தேர்தல் அறிவிப்பு, கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என்று ஐந்து கட்ட தேர்தல் திருவிழா அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது...

வோட்டு வாங்குவதற்காக கட்சிகளும், வேட்பாளர்களும் செய்யும் வேலைகள் நம்மை எரிச்சலின் உச்சிக்கும், விரக்தியின் விளிம்புக்கும் கொண்டு செல்கின்றன... எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கொள்ளும் பொதுஜனம் என்று தெரிந்து தான் கட்சிகள் இப்படி செய்கின்றன...

அறிக்கை என்ற பெயரில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக்கொள்வது.. கட்சி தேர்தல் அறிக்கை என்ற பெயரில் செய்யும் காமெடி... வேட்பாளரை ஜெயிக்க வைக்கவும், தோற்கடிக்கவும் செய்யும் உள்ளடி வேலைகள், பிரச்சாரம் என்ற பெயரில் தொகுதியை சுற்றி சுற்றி வருவது, என்று ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வே வருகின்றது....ஒரே ஒரு குறை தான்... ஹுரோயின் இல்லை, டூயட் பாட்டும் இல்லை..லேடி ஆர்டிஸ்ட்களே கம்மி தான்...

எல்லாவற்றையும் விட கட்சிகளின் தேர்தல் அறிக்கை தான் மிகப்பெரிய காமெடி. எப்படியும் எந்த கட்சியும் ஒன்றும் செய்யப்போவது இல்லை. 'ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தற' ங்கற மாதிரி... எந்தக்காலத்திலுமே செய்யவேபோகாத ஒரு விசயத்துக்கு எதுக்கு தான் அறிக்கையோ...


திரைப்படம் என்றால் கிளைமேக்ஸ் உண்டல்லவா..? வோட்டு எண்ணிக்கை முடிந்ததும் கூட்டணி மாறுவதும், பணம் குடுத்து சுயேட்சைகளை வாங்குவதும், பிரதமர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் அடித்துக்கொள்வதும் கண்டிப்பாய் உண்டு...

எது நடந்தாலும் சிரி(சகி)த்துக்கொண்டு, பேப்பர் படித்து, நியூஸ் பாத்து, கமெண்ட் மட்டும் அடித்து விட்டு, வோட்டு போடும் கடைமையை மட்டும் மறந்துவிடும் பொதுஜனம் இருக்கையில் படத்தின் வெற்றிக்கு குறைச்சலென்ன...

Read more...

காரணப் பெயர்கள்....

April 3, 2009

எங்க வீட்ல எங்களுக்கு செல்லப்பெயர் வெச்சுக்கரமோ இல்லையோ.... பக்கத்து வீட்டுக்கு, தெரிந்த மனிதர்களுக்கு காரணப் பெயர்(காரணப் பெயர் தான்.... பட்டப் பெயர்ல்லாம் இல்லை...... ) வெச்சுடுவோம்.....

"டேய்... வாய்க்கா வீட்டுக்கு போய் இதை குடுத்துட்டு வா... "ன்னு அம்மா சொன்னா... இது ஏதோ செல்விக்கா, ராணிக்கா மாதிரி.... வாய்க்கான்னு தப்பா நெனச்சிடக்கூடாது..... அந்த aunty வீட்டுக்கு பக்கத்தில வாய்க்கால் என்று அழைக்கப்படும் வாய்க்கா ஓடறதுனால அவங்களுக்கு அந்த பெயர்.....

இன்னொரு வீட்டுக்கு பேரு... தேவர் மகன் வீடு..... "தேவர் மகன்" படம் வந்த புதுசுல ஒரு பெரிய ஆளுயர poster அவங்க வீட்டு வரவேற்ப்பறையில் ஒட்டியிருந்ததால..... அவங்களுக்கு அந்த பெயர்.....

இதாவது பரவால்ல..... பக்கத்து கடையையும் விட்டு வைக்கவில்லை நாங்க.... ஒரு மளிகைக் கடையோட பக்க சுவற்றில் ஆலா liquid (சொட்டு நீலம் ன்னு நெனைக்கிறேன்...) விளம்பரம் இருந்துச்சு..... so, அது ஆலாக்கடை ஆயிடுச்சு..... வீட்டுக்கு வந்த சொந்தக்காரர்ட்ட ஆலாக்கடையில சாமான் வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல(வேற கடையில வாங்க வேணாம்ன்னு bit வேற....) அவர் பாவம்....... ரொம்ப நேரம் தேடிட்டு வந்து.... அப்படி ஒரு கடையே இல்லன்னு சொல்ல... ஒரே நாள்ல கடைய மூடிட்டாங்களா? ன்னு comment அடிச்சுட்டு போய் பாத்தா..... அந்த கடை board ல 'பாலாஜி stores' ன்னு.... கொட்டக்கொட்டயா எழுதியிருந்துச்சு...... அப்பறம் என்ன... as usuala... வந்தவர் காதில புகை.... நம்ம முகத்துல அசட்டு புன்னகை.......

Read more...

தமிழக முதல்வரும் நரேஷ் குப்தாவும்

March 8, 2009

தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே தமிழக முதல்வரும் 80 வயது குழந்தையுமான கலைஞர் அவர்கள் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா IAS, தன்னை வந்து பார்க்கவில்லை, மரியாதை தரவில்லை.... என்று கையை காலை உதறிக்கொண்டு அழுகை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்....

தன்னிடமே கைநீட்டி (தன்னையும், தமிழகத்தையும், தமிழக அரசையும் பிரித்து பார்ப்பவரில்லை முதல்வர்...) சம்பளம் வாங்கும் ஓர் அதிகாரி.... தனக்கே மரியாதை தரவில்லை என்று சொல்கிறார்.... அய்யோ பாவம்...

அறிக்கையிலேயே இவ்வளவு காட்டம் என்றால்.... நேரில் எவ்வளவு pressure தருவாரோ....

தற்போது எரிகிற கொள்ளியில் ஏரத்தள்ளுவது போல, மருத்துவ முகாம்கள் நடத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளார் நரேஷ் குப்தா..... இன்னும் என்னென்ன செய்வாரோ... இன்னும் என்னென்ன வாங்கிக்கட்டி கொள்ளபோறாரோ....

பார்ப்பதற்க்கு மிகமிக சாதாரணமாய் இருந்து கொண்டு, சர்வல்லமை பொருந்திய தமிழக முதல்வரின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டும் நரேஷ் குப்தாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

Read more...

சீனு என்றொரு நாய்க்குட்டி....

February 17, 2009

டேய் சீனு.. எங்கடா இருக்க.. வா வந்து பாலக்குடி... இப்படி என் அம்மா அழைப்பது சத்தியமா என்னை இல்லை.... எங்க நாய்க்குட்டிய... Labrador, Alsation, ராஜபாளையம் போல breedகளை சேர்ந்ததல்ல எங்கள் நாய்க்குட்டி... நாட்டு நாய் என்று சொல்லப்படும் சாதாரண வகையைச் சேர்ந்தது....

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்... கூப்பிடாமலும் வந்து நம்மை நக்கிவிட்டு , செல்லம் கொஞ்சிவிட்டு போவான்.... இரு கால்களிலும் துணியை பிடித்துக் கொண்டு, வாயினால் கிழிப்பது... 'சர்...' என்ற சப்தத்தோடு துணி கிழிவதை கேட்டு மீண்டும் கிழிப்பது.... நம்மிடம் துணியை தந்து விளையாட அழைப்பது...சுற்றி சுற்றி துரத்தினால்... tableக்கு கீழும், sofaக்கு அடியிலும் ஒளிந்து கொள்வது.... நாம் அந்தண்டை நகர்ந்தால் நம்மை நோக்கி ஓடிவருவது... சப்பனங்கால் போட்டு உட்கார்ந்தவுடன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டு நம்மை சாப்பிடவிடாமல் செய்வது....படுக்கை விரித்தால் நமக்கு முன் ஏறி படுத்துக்கொள்வது... பால் வாங்கவோ, அல்லது கீரை வாங்கவோ படி இறங்கினால், உடனே தானும் வருவது... வெளியில் இருந்து கொண்டு வரும் பைகளை மோப்பம் பிடித்து, அதைபிடித்து தொங்கிக் கொண்டே வருவது... என்று சீனுவின் சேட்டைகள் நீள்கின்றன....

Retired ஆனபின், தனிமையில் தவித்துக்கொண்டிருந்த என் அப்பாவிற்க்கு இப்போதெல்லாம். நன்றாக பொழுது போகிறது. எல்லாம் சீனுவின் கைங்கர்யம்....


குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள்... ஆனால் சில விஷயங்களில் குழந்தையும் நாய்க்குட்டியும் ஒன்று என்றே எனக்கு தோன்றுகிறது...தெய்வத்தையும் நாய்க்குட்டியையும் ஒப்பிடவில்லை நான்..

ஆனால் ஒரு குழந்தையின் இருப்பு எப்படி வீட்டில்ஒரு சூமூகமான நிலையைத் தருகிறதோ... அதேபோல் நாய்க்குட்டியும் வீட்டிற்க்குள் சமாதானத்தையும் உயிரோட்டத்தையும் கொண்டு வருகிறது...

பிள்ளைகளை வெளிநாட்டிலோ, வெளிமாநிலங்களிலோ வேலைக்கு அனுப்பிவிட்டு , தனிமையில் இருக்கும் பெற்றோர்க்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாகத் தாருங்கள்... முதலில் கடுமையாக ஆட்சேபிப்பார்கள்... ஒரு மாதம் கழித்து கேட்டுப்பாருங்கள்... தனிமை என்றால் என்னவென்று கேட்ப்பார்கள்....

Read more...

விருந்தோம்பலும் திணறலும்...

February 15, 2009

வந்தவர்களை (விருந்தினர்களை) வா என்று அழைப்பதும், அவர்களுக்கு வயிறார உணவு படைப்பதும், விருந்தோம்பலில் முக்கியமானவை. வயிறார உணவு படைப்பதில் தான் நாம் நம் வேலையை காட்டுகிறோம்.

இன்னும் ஒரே ஒரு இட்லி வெச்சுக்கோங்க, கொஞ்சம் சாதம் போட்டுக்கோங்க, இன்னும் ஒரே ஒரு sweet எடுத்துக்கோங்க என்றெல்லாம் கூறி வந்தவர்களை திணறடிக்கிறோம். கூச்சப்படாம சாப்பிடுங்க, இது நம்ம வீடு மாதிரி நெனச்சுக்கோங்க என்று சொல்லி அள்ளி அள்ளி வைக்கிறோம். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், இன்னும் கொஞ்சம்... என்று உபசரிக்காவிடில், கொஞ்சம். அள்ளி வைக்காவிடில், மரியாதை தெரியவில்லை என்று சொல்கிறோம்...

இன்று பெரும்பாலானோர்க்கு Pressure, Sugar உள்ளது. அவர்கள் உணவில் கட்டுப்பாடு காப்பது முக்கியம்.. அப்படியிருக்க, கட்டாயப்படுத்துவதை நாம் தவிர்க்கலாமே!!! 40, 50 வயதில் இருப்பவர்களை, கட்டாயப்படுத்தாமல் இருப்பது, sweet சாப்பிடுவீங்களா? என்று கேட்டுவிட்டு பரிமாறுவது , இன்று ஒரு நாள் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று சொல்லாமல் இருப்பது என்று நம் விருந்தோம்பல் முறையை மாற்றிக் கொண்டால் என்ன?

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP