நெஞ்சுபொறுக்குதில்லையே...,
November 27, 2009
26/11 - ஓராண்டு நிறைவு....
ஓராண்டுக்கு பின் , மாண்புமிகு பிரதமரின் அறிக்கை..
'மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும்/தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாதாம்... '
ஓராண்டு, 365 நாட்கள் ஒரு அரசாங்கத்திற்கு பத்தாதா என்ன...? செய்வதற்கு மனமிருந்தால் தானே.... இப்படியெல்லாம் எதற்கு வீண் அறிக்கை.. பேசாமல் நாம் பதிவில் போடுவது போல் ஒரு டிஸ்கியை போடுவது தானே...
அதாவது - 'இந்திய ராணுவம், பார்டர் செக்யுரிட்டி படை, ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு, 'துணை ராணுவம், கமெண்டோ படை பிரிவு போன்றவற்றில் சேருபவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..' அவர்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கிலேயே இவ்வேலைகளை செய்கிறார்கள்.. அல்லது உயிரை விடுகிறார்கள்..'
'இந்திய இறையாண்மையை காப்பாற்றவும். இன்ன பிற வசதிகளுக்காகவும் தீவிரவாதிகளையோ, நக்சல்களையோ பிடிப்பதற்கு இந்திய அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்காது... எனவே அமெரிக்காவோ, சீனாவோ அவைகளால் தூண்டப்பட்டு பாகிஸ்தானோ இந்தியாவில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்..' என்று போடுவது தானே..
சரி இந்திய அரசாங்கம் கிடக்கட்டும்... இந்த தாக்கரேக்கள் என்ன செய்கிறார்கள்... மும்பை தாக்குதலில் இறந்தவர்களும் பாதிக்கபட்டவர்களும் 'மராத்தி மன்னூஸ்' இல்லையா...?


