காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

அட்வர்டைஸ்மெண்ட் அபத்தங்கள்

October 22, 2011


 டிவில அரைமணிநேரம் ஒரு நிகழ்ச்சிய பார்த்தோம்ன்னா அதுல எப்படியும் ரெண்டு விளம்பர இடைவேளை வந்துடுது… பாட்டு படறது, சீரீயல், பாடல்கள், ஆடல் நிகழ்ச்சிகள்ன்னு ஒரே மொக்கை நிகழ்ச்சிகளா தான் இருக்கும்.. படங்களைத் தவிர உண்மையிலேயே நான் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சின்னு ஒன்னு டிவில கிடையவே கிடையாது. டைம் பாஸ், கொஞ்சம் ரிலாக்ஷேஷன் அப்படி இப்படின்னு வேற வழியில்லாம தான் டிவி பார்க்க வேண்டியிருக்கு…

ஆனாலும் அதுல வர்ற விளம்பர இடைவேளைங்கறது அடுத்த சேனலை மாற்றுவதற்கே… பல சமயத்துல நிகழ்ச்சிகளைவிட விளம்பரங்களே அருமையாக இருப்பதும் உண்டு. சிலது கொஞ்சம் மொக்கையாகவும், சிலது ரொம்ப அபத்தமாகவும் இருக்கும்.. அதுல சிலவற்றை பற்றி…
  • பொம்மிஸ் நைட்டீஸ்
ஒரு குடும்பத்தலைவி எதிரில் வந்தா சூடான விவாதமெல்லாம் மாறிடுமாம்… என்ன கொடுமை சார்… அது கூட பரவாயில்லை.. அதுக்கும் நைட்டீக்கும் என்னப்பா சம்பந்தம்… ஸ்.. ப்பா…
  • Johnson & Johnson Baby wipes
துணி உபயோகித்து குழந்தையை துடைத்தால் rashes வருமாம்.. அதனால இதை உபயோகியுங்கள்ன்னு…

பிறந்த குழந்தைகளுக்குன்னு ஒரு துணி இருக்கும் பாருங்க அந்த வீடுகள்ல்ல.. அப்பா.. அவ்வளவு மென்மையா இருக்கும்.. குழந்தை மென்மையா இல்ல அந்த துணி மென்மையான்னு தாராளமா பட்டிமன்றமே வைக்கலாம்… பிறந்த குழந்தைக்கான எல்லா விஷயங்களுமே இவர்களிடம் வாங்கவைப்பதற்கான தந்திரமே இது…

  • Baby Diapers

குழந்தைகள் வீட்டில் உலர்ந்த உடைகளோடு ஆடவும் பாடவும் செய்வார்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.. இது தவறல்லவா.. குழந்தைகளை வெளியில் அழைத்துப் போகும் போது தான் diaper போடவேண்டும்… பஸ்ல குழந்தையை எடுத்து செல்கிறோம்… அப்போ அவசரம்ன்னா என்ன செய்வோம்… அந்த மாதிரியான சமயங்களிலே தான் நாம diaper உபயோகிக்க வேணும்.. அதைவிடுத்து வீட்டிலிருக்கும் சமயங்களிலே கூட செய்வதென்பது குழந்தையை படுத்தியெடுப்பதே ஆகும்..

ஆனால் அந்த விளம்பரங்களில் எல்லாம் வீட்டில் இருக்கும் போதும், இரவிலும் பயன்படுத்துங்கள் என்றே சொல்கிறார்கள்… அது அபத்தத்தை தவிர வேறேன்ன.. 
  • Sanitary pad விளம்பரங்கள்…
ஸ்..ப்பா… நாசூக்கு… அது எப்படி இருக்கும்.. எத்தனை கிலோங்கற மாதிரி தான் இருக்கும்…
  • Toothpaste விளம்பரங்கள்
அந்த flavor இருக்கு, உப்பு இருக்கு, அது இருக்கு, இது இருக்குன்னு சொல்றாங்க.. அதனால தான் germs போகும்ன்னு சொல்றாங்க… உண்மையில் டூத்பேஸ்ட் உபயோகிப்பதே ஒரு வாசனைக்குத் தான்… மற்றபடி தினமும் இரண்டு வேளையும் முறையாக பல்விளக்கி, சாப்பிட்ட பின் (3 வேளையும்) வாய் கொப்பளித்தால் தான் அந்த கிருமிகள் போகும்… 

அந்த விளம்பரங்களில் இரண்டு வேளையும் முறையாக பல்விளக்கவேண்டும் என்று சின்ன எழுத்தில் போட்டிருப்பார்கள்…

டூத்பிரஷ் விளம்பரங்களும் அவ்வாறே….

இந்த வரிசையில் இன்னும் கொஞ்சம் இருக்கு… முடிந்தால் இன்னொரு பதிவாக போடுகிறேன்…

Read more...

சித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்

October 19, 2011



பாலமலை என்றும், சித்தேஸ்வரன் கோவில் இருப்பதால் சித்தேஸ்வரன் மலை என்றும் சொல்லப்படும் அந்த மலை ஈரோடு மாவட்டம், பவானி அருகே (1/2 மணி நேரப் பயணம்) உள்ள குருவரெட்டியூர், ஊமாரெட்டியுர் அருகே உள்ளது.. இதை மலை என்று சொல்வதைக் காட்டிலும் மலைத்தொடர் என்று சொல்வதே சரி. மேட்டூர் அணையில் தேக்கப்படும் நீர் இந்த மலைத் தொடர்களின்  அரவணைப்பில் தான் இருக்கின்றது... குருவரெட்டியூரில் இறங்கி மலைக்கு எப்படி போகணும் என்று கேட்டாலே சொல்லிவிடுவார்கள்... அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் யாரையும் கேட்கவே வேண்டாம்.. கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று கொண்டிருப்பார்கள்...

வருடத்தில் புரட்டாசி மாத சனிக்கிழமைகள், (3வது வாரம் ரொம்ப விஷேஷம்), சித்திரை 1ம் தேதி, அமாவாசை போன்ற நாட்களிலேயே மக்கள் வருவார்கள்... மற்ற நாட்களில் ஆள் நடமாட்டமில்லாத, அடர்ந்த ஒரு வனமாக காட்சியளித்து நம்மை பயமுறுத்தும்..

அடிவார பிள்ளையார் கோவிலையும், அங்கே இருக்கும் சிவனையும் வணங்கிவிட்டு, படிகளில்லாத, கற்களும், பாறைகளுமாய் இருக்கும் அந்த தடத்தில் நடக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.. அவரவர் உடல் வலிமையை பொறுத்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறையோ, அல்லது 20 நிமிடங்களுக்கு ஒரு முறையோ சற்று உட்கார்ந்து, தண்ணீர் அருந்தி இளைப்பாறிவிட்டு பயணத்தை தொடரலாம்...நேரம் ஆக ஆக... அடர்ந்த காட்டுக்குள் நீங்கள் சென்று கொண்டிருப்பதை உணர்வீர்கள்.. கீழே கிராமங்களில் வெயில் வருவதையும் உங்களால் பார்க்க முடியும்..

இது தான் ஆரம்பம்

அப்படியே சென்று கொண்டிருந்தால், முதலில் வருவது வெத்தலைப்பாறை என்ற இடம்... பாறைகள் பார்ப்பதற்கு வெத்தலை போல இருக்காது.. ஆனா நல்ல நீநீநீ….நீளமாக இரண்டு, மூன்று பாறைகள் உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கு வசதியாக இருக்கும்... முன்பெல்லாம் மக்கள் அங்கே உட்கார்ந்து வெத்தலை போட்டுக் கொண்டு, சிரமபரிகாரம் செய்து கொண்டு பயணத்தை தொடர்வார்களாம்அதனால் வெத்தலைப்பாறை என்று பெயராம்

அடுத்து வருவது திம்மம் பொதி.. அங்கே சிமெண்டினால் கட்டப்பட்ட நல்ல அகலமான ஒரு தளம் இருக்கும்.. தானியங்களை காயவைக்கவும், பயணிகள் ஒய்வெடுப்பதற்கும்.. அங்கே 2, 3 கடைகளும் உண்டுசுக்கு காப்பி, டீ, கம்மங்கூழ், அங்கே விளையும் கொய்யா, மாதுளை, சீதாப்பழங்களையும் விற்பார்கள்…  பச்சை படிக்கட்டுகள் போன்ற விளைநிலங்கள், சினிமாவில் பார்த்திருக்கும் ஊட்டி எஸ்ட்டேடுகளைப் போன்ற அமைப்பை பார்க்குப் போதே தெரியும், நாம் திம்மம்பொதியை நெருங்கிட்டோம்ன்னு சொல்லும்..

இந்த இடத்தில் தான் சில வீடுகளை பார்க்க முடியும்.. அடிவாரத்திலிருந்து திம்மம்பொதிக்கு வர்றதுக்கு எங்களுக்கு 2 மணிநேரம் ஆச்சு.. ஒட்டுமொத்தமாக 2 மணிநேரத்திலேயே கோவிலை அடைந்துவிடுபவர்களும் இருக்கின்றார்கள்பொதுவில் மலை ஏற ஏற, கால்கள் கெஞ்சும்… 10 நிமிடங்களுக்கு ஒரு முறை உட்காரச் சொல்லி அழும்.. அதிலும் சின்ன குழந்தைங்கல்லாம்.. அப்பா.. கால் வலிக்குதுப்பா.. கொஞ்ச நேரம் உக்காரலாம்ப்பா.. என்று சொல்வார்கள்அவ்வளவு தாண்டா.. கோவில் வந்துருச்சுடா.. இப்படி போயி, அப்படி வந்தா ஆச்சு.. வா.. வா.. என்று இழுத்துக்கொண்டு போவார்கள்.. இத்தனைக்கும் 1 மலை கூட வந்திருக்கமாட்டார்கள்.. (பாலமலை 7 மலைகளை கொண்ட தொடர்).. பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும்.. பார்த்துக் கொண்டு மட்டும் இல்லாமல், எட்டி நடை போட்டால் தான் நாமும் சூரிய வெளிச்சம் மறையும் முன் வீடு வந்து சேரலாம்..

ஆனால் சூரிய வெளிச்சம் மறைந்த பின் ( மாலை 6, 7 மணிக்கு ) பயணத்தை ஆரம்பித்து, விடிவதற்குள் மலை இறங்கி வருபவர்கள் தான் அதிகம் இங்கேஅதை நினைத்தாலே சிலிர்க்கின்றது எனக்குபட்ட பகலில் மலை ஏறுவதில் கால்கள் தான் வலிக்குமே அன்றி, வேறு சிரமங்கள் இல்லை.. இரவில் ஏறுவதானால்அடேயப்பா…!!! ஆனால் இரவில் தான் அதிக கூட்டம் இருக்கின்றது.. டயர்களை கொளுத்திக் கொண்டும், டார்ச்சு லைட்டுகளை ஏந்திக்கொண்டும் சாரி சாரியாய் மக்கள்

அடுத்த இடம் பெரியகுளம்வருஷந்தோறும் வருபவர்கள், அடிவாரத்தில் ஏற ஆரம்பித்த பின் பெரியகுளம் வந்து தான் நீண்ட ஒய்வெடுப்பார்களாம்.. (அதிகபட்சமாய் 1/2 மணி நேரம்..) பெரியகுளத்தையும் தாண்டி வந்துகொண்டிருக்கையில் ஓரிடத்தில் பாறைகளுக்கிடையில் நீரோடை உண்டு.. அதில் தண்ணீர் எடுத்து கொண்டு, சர்வ சாதாரணமாய் போய்க்கொண்டிருப்பார்கள் மலைக்காரர்கள் என்ற உள்ளூர்வாசிகள்.. தண்ணி பாட்டிலையும், இட்லி, சாப்பாட்டு பொட்டலங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு செல்லும் நாம் தஸ்ஸு புஸ்ஸு என்று மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, தண்ணிக் குடம், மூங்கில் கட்டுகள், விற்பதற்கு பெரிய பெரிய மூட்டைகள் என்று மலைக்காரர்கள் தூக்கிக் கொண்டு போவதை பார்த்தாலே பக்குன்னு இருக்கும் நமக்கு…  

நாங்கள் பார்த்த போது வீடு கட்டுவதற்கு கருங்கல்லையும், சிமெண்ட்டு மூட்டைகளையும் சுமந்து கொண்டு போனார்கள்நல்லா ஸ்ட்ராங்கா இருக்காங்க என்று சொல்லிக்கொண்டாலும்ஒரு அவசர ஆபத்துக்கு கூட அவர்கள் இவ்வளவு பெரிய மலைத்தொடரை தாண்டித்தான் வரவேண்டும் என்பது ரொம்ப கொடுமையான விஷயமே!!!! இப்பொழுதும் பிரசவ வலி கண்டுவிட்டால், மூங்கிலில் தொட்டில் கட்டித்தான் அடிவாரம் வரை அழைத்து வர வேண்டுமாம்.. நினைத்தாலே மயங்கிவிழுந்துவிடுவோம் நாம்..


மலைத் தொடர்
இப்படியாக ஒருவழியாக இஷ்டப்பட்டு கஷ்ட்டப்பட்டு சித்தேஸ்வரரை தரிசித்தோம்... கோவில் சிறிது தான்.. அதிலும் ஒரு பக்கமே தடுப்புகள் உண்டு.. இன்னொறு பக்கம் சற்றே எட்டுப் பார்த்தால், கிடு கிடு பள்ளம்... கோவிலின் முன்புறம் நின்று பார்த்தால் குட்டியாக மேட்டூர் அணையும், அந்த கூண்டுகளில் இருந்து வரும் புகையும் தெரியும்... 

ஒருவழியாக சித்தேஸ்வரரை வணங்கியாச்சு.. ஏறது தான் கஷ்ட்டம்.. இறங்கறது சுலபம்ன்னு நினைச்சீங்க.... ம்ஹீம்... தப்பு... இறங்குவது தான் சிரமம்.. மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது.. ஆனால் கால்கள் நிற்காமல் இறங்கிக் கொண்டிருக்கவே சொல்லும்... தப்பித் தவறி நின்றால் நடுங்கும்... ஆனால் ஏறியதை விட வேகமாக இறங்கிவிட முடியும்... பத்திரமாய் இறங்கிவிட்டதற்கு அடிவார பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வீட்டுக்கு ஓடி வந்து விடலாம் சந்தோஷமாய்... ஏனெனில் சித்தேஸ்வரன் மலைக்கு செல்வது என்பது ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம் மட்டும் அல்ல, சற்றே சிரமமான பயணமும் கூட.. மனமென்னும் பேட்டரி ஃபுல் சார்ஜ் ஆகிவிட்டாலும், உடலில் உள்ள பேட்டரி  ரொம்ப கீழிறங்கிவிடும்... ரெண்டு நாட்களாகும் மீண்டும் சார்ஜ் ஏற... 

பலர் பக்தியின் காரணமாகவும், சிலர் உடலுக்கு ஒரு பயிற்சி என்று சொல்லிக்கொண்டும் செல்வார்கள்.. எது எப்படியோ.. ஓரளவு உடல் வலிமை உள்ளவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் சித்தேஸ்வரர் கோவில்...

Read more...

பார்க்க / கேட்க பிடிக்காத பாடல்கள்

September 8, 2011

பாடல்கள் --- திரைப்படத்திலோ, விளம்பரங்களிலோ வரும் பாடல்கள் உண்மையில் நமக்கு உற்சாகம் தரக்கூடியவையே… பாடல் வரிகள், இசை, குரல், அதை காட்சி படுத்திய விதம் என பார்கும்போதும், கேட்கும் போதும் நம்மை வசியப்படுத்துபவை, உற்சாகப் படுத்துபவை....  


கர்நாடக சங்கித பாடல்களும், பிற மொழிப்பாடல்களும் புரியாததினால் வரிகளை பற்றி கவலையில்லை.. காதுக்கு இனிமையான இசை இருந்தால் சரி என்பதே என் எண்ணம்...


இதில் சில பாடல்கள் உண்டு.. கேட்கவும் சகிக்காது, பார்க்கவும் தேறாது… அத்தகைய பாடல்களை  பற்றியதல்ல இப்பதிவு…  ஏதோ ஒன்று நன்றாக இருக்கும்.. இன்னோரு வகையில் சொதப்பியிருப்பார்கள்… பெரும்பாலும் படமாக்கப்பட்ட விதம் தான் நம்மை படுத்தியெடுக்கும்.. அந்த சில பாடல்கள்…

1.   1. யாரடி நீ மோகினி படத்தில் வரும் – எங்கேயோ பார்த்த மயக்கம் பாடல்…
  எனக்கு பிடித்த நயன்தாரா, சூடானேன், சுளுக்கெடுத்துருவேன் என்றேல்லாம் அதிகம் பேசாத, சாதாரண தனுஷ், பல பாடல்களில் ஏற்கெனவே எடுத்திருந்தாலும், அலுக்காத சீன்ஸ், (கதாநாயகி அறியாமல், அவள் பின்னாடியே போகும் கதாநாயகன்), நல்ல இசை என்று இருந்தாலும், அந்த குரல் இருக்கிறதே..அடேயப்பா… உதித் நாராயணனாம்.. ஈயத்தை காய்ச்சி, சரி.. ஈயம் என்னன்னு நமக்கு தான் தெரியாதே.. கொதிக்கவெச்ச தண்ணிய எடுத்து காதில் ஊற்றிக்கொண்டதைப் போல் இருக்கும்.. வால்யூமுக்கும், மியூட்டுக்கும் இடையே கரோக்கியை கண்டுபிடித்தவன் வாழ்க என்றே சொல்ல வைக்கும் பாடல்.

அருமையான பாடல் வரிகள், எஸ்.பி.பியின் குரல் எல்லாம் நல்லாதான் இருக்கும், ஆனால் அஜீத்தின் வாயசைப்பும், காட்சியமைப்பும் சகிக்காது.. ஸ்கூல்ல பிள்ளைங்க எக்ஸரசைஸ் செய்யற மாதிரியே இருக்கும்.. ஆனால் கேட்க கேட்க திகட்டாத பாடல் இது… 

அருமையான மெலடி (தமிழ்ல்ல எப்படி சொல்றது இதை!!!) பாடல்.. ஆனால் படு மொக்கையாக படமாக்கியிருப்பார்கள்.. அதிலும் விஜய் தலைமுடி… ஸ்ப்பா… கொண்ணுட்டீங்கண்ணா!!! அனுஷ்க்காவுக்கு ஒரு கேவலமான டிரஸ் வேற..விஷய், அனுஷ்க்கா காம்பினேஷனுக்கு நல்ல சீன்ஸ் வெச்சிருக்கலாம்.. ப்ச்சு… ஆனா ரேடியோல, செல்லுல கேட்பதற்கு நல்ல பாடல்…


சோக கீதம் தான்.. கேட்க நல்லாயிருந்தாலும், பார்க்க அவ்வளவா பிடிக்காது.. ஏன்னு சொல்லத்தெரியல..


5.      5.  புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படம் – மலர்களே
பாம்பே ஜெயஸ்ரீயின் மயக்கும் குரல்… வால்யூம் அதிகமா வெச்சு கண்ணை மூடி கண்ணாபின்னான்னு ரசிக்கலாம்… வரிகளும், இசைன்னு எல்லாமே டாப் டக்கரா இருக்கும்... ஆனால் படமாக்கப்பட்ட விதம் தான்... ம்ஹூம்…

இன்னும் நிறைய இருக்கு இந்த லிஸ்ட்டுல... 


Read more...

எம தர்பார்

March 14, 2011


‘அரசே..’
‘மன்னா…’
‘வேந்தே…’
‘ஐயா…’
(நாம் கூப்பிட்டது இவர் காதிலேயே விழவில்லை போலிருக்கின்றது.. எதற்கும் பூலோகமுறைப்படி அழைப்போம்…)
‘சார்…’

யமதர்மர்: "சாராம்… சார்.. ஏன்.. மோர், பால், தயிர், என்றேல்லாம் கூப்பிடுவது தானே,சித்ரகுப்தா…"
"பூலோகம் சென்றுவந்தது முதல் உமக்கும் அந்த பித்து பிடித்துவிட்டதா..? என்னை அழைக்க உனக்கு நம் தமிழில் வார்த்தைகள் கிடைக்கவில்லையா..?"

சித்ரகுப்தர்: "இல்லை வேந்தே… அப்படித்தான் உங்களை அழைத்தேன்.. தாங்கள் மிகுந்த யோசனையில் இருந்ததால், பூலோகமுறைப்படி அழைத்தேன்… மன்னியுங்கள் பிரபு.." (நீங்களும் அதற்குதானே திரும்பினீர்கள்.. ஆனால் குற்றம் சொல்வதென்னவோ என்னை… ம்.. இந்த யஜமானர்களே இப்படித்தான்… )

யமதர்மர்: "பரவாயில்லை குப்தா…. எனக்கிருந்த கோபத்தில் உன்னை சற்று வேகமாக பேசிவிட்டேன்.." 

சித்ரகுப்தர்: (பேசினதெல்லாம் பேசிவிட்டு இந்த வார்த்தை ஜாலம் வேறா..) "அப்படியென்ன யோசனை அரசே?"

யமதர்மர்: "சொல்கிறேன்.. .. .. சொல்கிறேன்.. உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லபோகிறேன்.."

சித்ரகுப்தர்: (ம்க்கும்… இப்படி சொல்லி சொல்லியே இவர் நம்மிடம் வேலை வாங்கிவிடுவார்… அந்த கார்பரேட் முதலாளிகளுக்குக்கெல்லாம் இவர் தான் குரு போலிருக்கின்றது…. )

யமதர்மர்: "ஆமாம், குப்தா.. கொலைகளை நாம் எப்படி தரம் பிரித்திருக்கின்றோம்..?"

சித்ரகுப்தர்: "மன்னா.. கொலைகளில் ஒரு 6 வகை உள்ளது.."
  1. தெரியாமல், அறியாமல் செய்துவிடுவது..
  2.  தெரிந்தே, திட்டமிட்டே செய்வது..
  3. தெரிந்தே, திட்டமிட்டே, கொடூரமாக செய்வது
  4. தனக்கு நேரடி விரோதம் இல்லாவிட்டாலும் பணத்துக்காக கொலை செய்வது..
  5. விபத்தில் செய்துவிடுவது..
  6. சின்ன குழந்தைகளை கொலை செய்வது…

"இதில் 2-6 வகைக்கு நாம் கடுமையான தண்டனைகளை தருகிறோம்.. மன்னா.."

யமதர்மர்: "சரி.. இனிமேல் இதில் தமிழ்க்கொலை என்ற பிரிவையும் சேர்த்துவிடு.."

சித்ரகுப்தர்: "ஓ…தமிழில் பெயர் வைத்தாலே வரி விலக்கு என்பது போலவா மன்னா.. தமிழ் என்ற பெயருடையவர்களை கொலை செய்வதா மன்னா..?(தப்பா சொல்லிட்டோமோ!!! நம்மையே கொலை செய்துவிடுவது போல் பார்க்கிறாரே!!!)

யமதர்மர்: "மூடனே!!! சங்கம் வைத்து வளர்த்த நம் தமிழை சிதைப்பவர்களை சொன்னேன்..நம் பூலோக உலாவில் இந்த மானிட பதர்கள் நம் தமிழை சின்னாபின்னமாக சிதைப்பதை பார்க்கவில்லையா நீ..????"

சித்ரகுப்தர்: "ஆமாம் ஆமாம்.. பார்த்தேன்.. இல்லையில்லை கேட்டேன்.."

யமதர்மர்: "ம்.. நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு, ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது முழுவதுமாக ஆங்கிலத்திலேயே பேசுகிறார்களா.. அதுவும் இல்லை.. தமிழில் பேசிக்கொண்டிருக்கையில் நடுநடுவே ஆங்கில வார்தைகளை தூவிக்கொள்கிறார்கள்.."

சித்ரகுப்தர்: "சமையலில் கொத்துமல்லி தூவுவது போல்.. என்ன மன்னா…??"

யமதர்மர்: "சமையல் என்று சொன்னதும் தான் நினைவு வருகிறது.. இந்த தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளை தருகிறார்களே… அவர்களை மட்டும் தனியே கவனிக்க வேண்டும்.."

சித்ரகுப்தர்: ஆமாம்.. ஆமாம்.. அப்பொழுது தான் புதுசு புதுசா அவங்க செய்யறதெல்லாம் நாம சாப்பிட்டு பாக்கலாம்…

யமதர்மர்: "நீர் மங்குனி அமைச்சரே தான்.. சந்தேகமேயில்லை.."

சித்ரகுப்தர்: (பின்ன உங்களுக்கில்ல அமைச்சராயிருக்கேன்..) "சமையல் கலைஞர்கள் மேல் அப்படியென்ன கோபம் அரசே?"

யமதர்மர்: "பின் என்ன குப்தா.. பதார்த்தம், சுவை, மணம், அருமை போன்ற வார்த்தைகளை எல்லாம் தொலைத்து தலைமுழுகிவிடுவார்கள் போல.."

"இந்த டிஷ் பாத்தீங்கன்னா… ரொம்ப tasteஆ இருக்கு.. பாக்கவே mouth wateringஆ இருக்கு.."

"இந்த டிஷோட flavor அப்படியே நம்மளை இழுக்குதுன்னேல்லாம் சொல்றாங்க.. அதுகூட பரவாயில்லை.. தேங்காய் அரைக்கும் போது நல்லா coarseஆ அரைச்சுக்கோங்கன்னு சொல்றாங்க.. ஏன்.. கொஞ்சம் கரகரன்னு அரைச்சுக்கோங்கன்னு சொல்றது…"

"நல்லா niceஆ grind பண்ணிக்கங்கன்னு சொல்றாங்க.. நல்லா நெகு நெகுன்னு அரைச்சுக்கோங்கன்னு சொல்றது…"

"மெல்லத் தமிழ் இனி சாகும்ன்னு பாரதி சொன்னப்போ இவங்களை பத்தி தெரியாம சொல்லிட்டாரு போல… இவங்க மிக்ஸில போட்டு தமிழை அடிச்சே கொன்னுடுவாங்க… அப்படியும் சாகலைன்னா சட்டியில போட்டு வறுத்துடுவாங்க போலிருக்கு…."


சித்ரகுப்தர்: "அமைதி.. அமைதி.. மன்னா.. 
சமையல் தான் என்றில்லை.. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தான் தமிழை மோசமாக கையாளுகிறார்கள்.. அப்படியிருக்க அவர்கள் மேல் மட்டும் ஏன் இந்த கோபம்….?"

யமதர்மர்: "மங்குனி அமைச்சரே… மக்கள் எவ்வளவு தான் நாகரீகம் அடைந்தாலும், அவர்கள் எவ்வளவு தான் உயரங்களை எட்டினாலும், அவர்களை அவர்கள் வேர்களோடு பிணைத்து வைப்பதில் சாப்பாட்டுக்கு முக்கிய பங்கு உண்டல்லவா… அத்தகைய சாப்பாட்டு நிகழ்ச்சிகளிலேயே இப்படி தமிழை மறக்கிறார்களே என்று தான் என் ஆதங்கம்…"

சித்ரகுப்தர்: "உண்மை தான் மன்னா.. இன்று முதல் தமிழ்க்கொலை என்ற வகையினையும் சேர்த்துவிடுகிறேன்… தமிழ்க்கொலையாளிகளுக்கு தண்டனையும் எழுதிவைத்துவிடுகிறேன்…"

யமதர்மர்: "தமிழ்க்கொலையாளிகள் மக்கள் தொலைக்காட்சியை பார்த்திருந்தாலோ அல்லது அதில் நிகழ்ச்சிகள் வழங்கியிருந்தாலோ தண்டனையை குறைத்து எழுதிவிடு குப்தா…"

சித்ரகுப்தர்: "அப்படியே ஆகட்டும் அரசே… உங்கள் கோபம் தணிக்க அருகம்புல் சாறு வரவழைக்கிறேன்.  அருந்தி..சாந்தமடையுங்கள்!!!"


(Image obtained from google search)

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP