காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

சொன்னதும் சொல்லாததும்

February 3, 2011

சொன்னது
வெள்ளநிவாரணத்துக்கு அதிக நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை



சொல்லாதது 
தேர்தல் வருது சாமி. பாத்து பண்ணுங்க. நீங்க ஒதுக்கற நிதிய பொறுத்து தான் ஓட்டுக்கு 1000மா இல்ல 5000ன்னு முடிவு பண்ணனும்.
-----------------------------------------------------------------------------------------------
சொன்னது 
எகிப்தில் நடந்து வரும் போரட்டங்கள் அவர்கள் உள்நாட்டு பிரச்சனை - இந்தியா கருத்து

சொல்லாதது
நக்சல் பிரச்சனை ஜார்க்கண்டு, ச‌ட்டீஸ்கர், பீகார் மாநிலங்களின் பிரச்சனை.
தமிழக மீனவர் கொலை அவர்கள் தனிப்பட்ட பிரச்சனை. இதிலெல்லாம் மத்திய அரசு தலையிடாது..

-----------------------------------------------------------------------------------------------
சொன்னது
உளவுத்துறையின் எச்சரிக்கையை மாநில அரசுகள் அலட்சியப்படுத்துகின்றன - ப.சிதம்பரம்.

சொல்லாதது
அப்பாடா.. பிரச்சனையை தள்ளிவிட்டாச்சு. இத வெச்சு தேர்தல்ல நமக்கு வேண்டியதை தலைகிட்ட கேட்டு வாங்கிக்கலாம்
----------------------------------------------------------------------------------------------
சொன்னது
சபரிமலையின் 18 படிகளை அகலமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. படிகள் வெறும் கட்டுமானம் அல்ல. அதில் பக்தர்களின் நம்பிக்கையும் சேர்ந்திருக்கின்றது - திருவாங்கூர் தேவஸ்தானம் 

சொல்லாதது
அதில் பக்தர்களின் உயிரும் கலந்திருக்கின்றது.  வேறேந்த செலவும் செய்யமுடியாது. வரவு மட்டுமே எங்கள் குறிக்கோள்
---------------------------------------------------------------------------------------------
சொன்னது
மத்திய அரசு தனது தரப்பு விளக்கங்களை தெரிவிக்க வேண்டியது உள்ளது. மத்திய பொது தணிக்கை குழு அறிக்கையை மட்டும் வைத்து 2ஜி லைசென்சை ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்



சொல்லாதது
ஊழலை நிரூபித்தால் கூட லைசென்ஸ் ரத்து கிடையாது.  இதுல தணிக்கை குழு அறிக்கைக்கே லைசென்ஸ் ரத்தா. என்ன சின்னபுள்ளதனமா இருக்கு

9 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com said...

சொன்னதும், சொல்லாததும் அருமை...

Anonymous said...

இந்த பதிவு வழியா நீங்க

சொன்னது,
நம்ம அரசியல் திமிங்கலங்களின் தினசரி செயல்பாடுகளில் இருந்து ஒரு sample

சொல்லாதது,
"ஜாக்கரதை தம்பி...தோளான் தொச்கான் எல்லாம் மைக் புடிச்சு பேசினா...அப்படியே நம்பீடாத...அதுல இருக்கற அரசியலையும், சுயநலத்தையும் புரிஞ்சுக்க"

பி.கு "இல்லியே அனு...நான் இப்படி எதுவும் சொல்ல நினைக்கலியே" னு கப்பல கவுத்திடாதீங்க;...நான் அப்பறம் அழுதுடுவேன் ஆமாம்!!

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க சங்கவி..
நன்றிங்க..


வாங்க அனு...
//இந்த பதிவு வழியா நீங்க சொன்னது, சொல்லாதது //

ஆமாங்க.. நியூஸ் பாக்கறப்போ இந்த அரசியல் ஸ்டேண்ட் ஸ்டண்டால வர்ற எரிச்சல் இருக்கே... அத ஏன் கேக்கறீங்க போங்க...


//கப்பல கவுத்திடாதீங்க //
சேச்சே... நான் ஒண்ணும் அவ்வளவு மோசமானவ இல்ல. கொஞ்சம் நல்லவ தான்

ஹி.. ஹி...

middleclassmadhavi said...

இப்பிடி சொல்லாத்து எல்லாத்தையும் கண்டுபிடிச்சு சொல்லிட்டீங்கன்னா, அவங்க என்ன தான் பண்ணுவாங்க?..
:))

சூப்பர்!

அமுதா கிருஷ்ணா said...

அமுதா சொன்னது: சூப்பர்ப்பா

அமுதா சொல்லாதது: எப்படி எல்லாம் யோசிக்கிறீங்கப்பா..

ரிஷபன் said...

சொன்னதும் சொல்லாததும் அப்படியே எல்லோருடைய அங்கலாய்ப்பு..

Admin said...

சொன்னதும் சொல்லாததும். அருமை. நீங்க சொன்னவிதமும் அருமை

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

எல் கே said...

இந்தப் பதிவ படிச்சிட்டு அவங்க சொன்னது
ம் ஹ்ம்ம் நடக்கட்டும்

சொல்லாதது


இரு மகளே சீக்கிரம் ஆட்டோ அனுப்பறேன்

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP